Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1000 ரூபாவை விட மக்களின் உயிர் தான் எமக்கு முக்கியம் : மக்களுக்கு நிச்சயம் 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்போம் - ஆறுமுகன் தொண்டமான்

Featured Replies

ஆயிரம் ரூபாவை விட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (18.04.2020) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியுள்ள நாட்டை மீட்டெடுப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர், சுகாதார பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் என ஒட்டுமொத்த அரச கட்டமைப்பும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் இதிலும் குறை கண்டுபிடித்து, பிரசாரம் செய்து - தற்புகழ் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

இந்த அரசாங்கத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒரே விதத்தில் தான் கவனிக்கப்படுகின்றனர். அந்தவகையில் 5000 ரூபா கொடுப்பனவு எமது மலையகத்துக்கும் நிச்சயம் கிடைக்கும்.

கடந்த ஆட்சியின் போது தமக்கு சார்பானவர்களையே சமுர்த்தி பட்டியலில் இணைத்துள்ளனர். இதனால் உண்மையாலுமே அக்கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

எனவே, அந்த பட்டியலில் உள்ள குளறுபடியை நிவர்த்திசெய்து, நீதியான முறையில் வழங்குவதற்காகவே சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள, உள்ளாட்சி சபைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிச்சயம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கம்பனிகளும் இதற்கு இணக்கம் வெளியிடும். விவசாய அமைச்சு மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக உதவிகள் வழங்கப்படும்.

அதேவேளை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள அதாசாரண சூழ்நிலை காரணமாகவே சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உறுதிபடுத்த முடியாமல் போனது.

எல்லா விடயங்களை விடவும் மக்களின் உயிருக்கே தற்போது முக்கியத்துவம் கொடுக்கின்றோம். நாடு படிப்படியாக மீண்டு வருகின்றது.
சம்பள விடயத்தில் நாம் நொண்டி சாக்கு சொல்லவில்லை. நிச்சயம் எமது மக்களுக்கு அதனை பெற்றுக்கொடுப்போம்.

தற்போதைய சூழ்நிலையில் சந்தா அறவிடவேண்டாம் என முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒவ்வொரு தோட்டக் கம்பனிகளுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்திருந்தது. எனவே, நாம் அறவிடவில்லை.

முதலில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டு வருவோம். அதன்பின்னர் தேர்தலை பற்றி சிந்திக்கலாம்." என்றார்.

https://www.virakesari.lk/article/80237

  • தொடங்கியவர்
1 hour ago, ampanai said:

ஆயிரம் ரூபாவை விட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம். என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

உயிர் வாழ பணம் தேவை. 

ஆக, தொண்டமான் குடும்பம் அந்த நிதியை தமது சொத்துக்களில் இருந்து தாற்காலிகமாக கொடுக்கலாமே? 

1 hour ago, ampanai said:

ஆயிரம் ரூபாவை விட மக்களின் உயிர்தான் எமக்கு முக்கியம். எனவே, சம்பள உயர்வு விடயத்தில் எந்தவொரு நொண்டி சாட்டையும் நாம் கூறவில்லை. மக்களுக்கு நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.

எப்ப?
மார்ச் போய், இப்ப ஏப்ரலும் போகப்போகுது.
மலையக மக்களை ஏமாத்துவதே இந்த போக்கிரி ஆறுமுகத்தின் வேலையா இருக்குது.
இவர்களை தேர்தலில் தோற்கடிப்பதே இப்ப இருக்கும் ஒரேவழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.