Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் புதிய தொலைக்காட்சி சேவை! – கல்வி அமைச்சு

Featured Replies

இலங்கை பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு குருகுலம் என்னும் தொலைகாட்சி சேவை கல்வி அமைச்சினால் உருவாக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இதன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

WhatsApp-Image-2020-04-18-at-11.56.07-AM

https://newuthayan.com/இலங்கையில்-புதிய-தொலைக்க/

நல்ல முயற்சி. தொலைக்காட்சி மற்றும் மின்சார வசதிகளையும் அரசு சகல மாணவர்களுக்கும் பெற்றுத்தர வசதி செய்து தர வேண்டும். 

இல்லை, வேறு வழிகள் மூலம் அவர்களும் கல்வியை தொடர உதவ  வேண்டும். 

  • தொடங்கியவர்

இதில (குருகுலம்/குருகெதர சனலில்) தமிழ் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க போகினம் என்டு பாப்பம்.

’குருகெதர’ புதிய கல்வி அலைவரிசை ஆரம்பம்

இலங்கையின் அனைத்துப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், “குரு கெதர”  என்ற புதிய தொலைக்காட்சி அலைவரிசை, இன்று (20) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுதாபனத்தின் ஊடகப் பங்களிப்புடன், நேற்று முதல்  கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களும் இணைந்துகொள்ள முடியும்.

இதன்படி, காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள முடியும். நாளை (21) முதல் முற்பகல் 4 மணி வரை, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

இதன் பிரகாரம், உயர்தர கலைப் பிரிவுக்காத் தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவுக்காகப் பொருளாதார விஞ்ஞானம், வணிக கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படும்.

அத்துடன், சாதாரண தர மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்துப் பாடங்களும், தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். மேலும், இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறும்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கரகதர-பதய-கலவ-அலவரச-ஆரமபம/175-248979

  • தொடங்கியவர்

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது? முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தீர்மானம்

In இலங்கை     April 21, 2020 10:34 am GMT     0 Comments     1173     by : Jeyachandran Vithushan

கொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.

இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான எந்தவொரு முடிவும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் பின்னர் இது பற்றி தீர்மானிப்பதற்கான அதிகாரம் துணைவேந்தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்தந்த பல்கலைக்கழகங்களின் கல்வி ஊழியர்களுக்கான பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்திருந்தோம் இருப்பினும் முடிந்தவரை ஒன்லைனில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

http://athavannews.com/பாடசாலைகள்-பல்கலைக்கழகங/

  • தொடங்கியவர்

க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இரண்டு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 3 மாதங்கள் கல்வி நடவடிக்கைகள்’ முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாலும், தற்போது கொரோனா வைரஸ் பரவலாலும் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக, குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://athavannews.com/க-பொ-த-உயர்தரப்-பரீட்சை-ஆண/

A/L Combined Maths Tamil Medium 22nd April 2020

 

2020-04-24| Accounts | Tamil

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது குறித்து இரண்டு வகைத் திட்டங்கள் பரிசீலனை- மஹிந்த

In இலங்கை     May 3, 2020 5:49 am GMT     0 Comments     1079     by : Benitlas

உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுனிசெஃப் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறுவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாடசாலைகளை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைகள் திறக்கப்படும் போது முதலாம் தவணைப் பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நடத்தப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக இரண்டு வகையான திட்டங்களை பரிசீலித்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்கப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது பாடத் திட்டத்தின் அடிப்படையில் உயர்தரப் பரீட்சையை நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இதுகுறித்த இறுதி முடிவு குறித்து கல்வி அமைச்சு விரைவில் அறிவிக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/உயர்தரப்-பரீட்சைகளை-நடத்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.