Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

Featured Replies

 விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..?!

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று .

இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். 

large.A7127420-1F16-428C-B9D3-D20D57FFEB3F.jpeg.c611fc446d7c93efd90eaba7695cb4dc.jpeg

பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . 

பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர்.

 பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். 

விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர். 

அப்போது திடீரென அந்த பணக்காரர் சொன்னார்.நான் காரை புதைக்கவில்லை யாராவது அந்த முட்டாள் தனத்தை செய்வார்களா , உங்கள் எல்லோருக்கும் ஒரு உண்மையை உணர்த்தவே இப்படி வித்யாசமாக விளம்பரப்படுத்தினேன் என்றார் . 

large.D33D71DC-19B7-45F9-9E22-AA97186163BD.jpeg.c8e131d062eab75c626115d7c2775b82.jpeg

என்ன உண்மை என்றனர் அனைவரும். இந்த கார் பத்து லட்சம் யூஎஸ் டாலர்தான் இதை புதைக்கிறேன் என்றவுடன் கோபப்பட்டு கேள்வி கேட்கிறீர்களே நான் உங்களை ஒன்று கேட்கிறேன் இதைவிட விலை மதிப்பில்லாதது மனித உடல் உறுப்புகள் . இதயம் , கண் , நுரையீரல் , கிட்னி, தோல், என மனித குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைப்பதால் என்ன லாபம், யாருக்காவது தானமாக தரலாமே, 

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .

படித்ததில் பிடித்தது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் அவனவன் சுய உரிமையும் சொந்த விருப்பமும்.மற்றவன் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. 😎

  • தொடங்கியவர்
5 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் அவனவன் சுய உரிமையும் சொந்த விருப்பமும்.மற்றவன் உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. 😎

யார் இப்ப தலையிட்டது? நீங்க தலையிட்டீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

CZUGJoPXEAARXxs.jpg

வாத்தியார் சமாதியில் இன்றும் காதை வைத்து "ரிக் .. ரிக்" கைகடிகார ஓசை கேட்பவை ஏராளம்கள் .. இன்னும் ஒடுதாம்..👍அத்துனை விலையாமெல்லோ ...☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இதுபோல ஒரு திரி வந்தபோது சொல்லி இருந்தேன்.

கொழும்பில் கஞ்சா செல்லையா என்று பெரிய தாதா இருந்தார். கொச்சிக்கடை பக்கத்தில் இவர் வைத்ததுதான் சட்டம்.

பிரேமதாச காலத்தில், jvp காரர்களை தூக்கியது போலவே, கையோட இவரையும் தூக்க சொல்லி, பெரிய இடத்து ஆர்டர்.

பெரும் யாவாரிகளாக இருந்த சுப்பையா, சண்முகம் போலவே இவரும் போடப்பட்டார்.

இவர் கிறிஸ்தவராக இருந்ததால், கணத்தையில் பட்டு வேட்டி, பட்டு சட்டை கையில் அவர் ஆசையாக வாங்கி போட்டிருந்த பெரிய மோதிரம், சங்கிலி என்று புதைக்கப்பட்டார்.

அன்று இரவே, கைவரிசை காட்டிய திருட்டு கும்பலின் வேலையினால், அடுத்தநாள் காலை, உடல் எதுவுமே இன்றி பக்கத்து மரத்தடியில் கிடந்தது.

குடுப்பதினார் ஓடி வந்து.... ஒன்றுமே இல்லாமல், அப்படியே குழிக்குள் தள்ளி புதைத்து விட்டு போனார்கள்.

On 19/4/2020 at 11:01, tulpen said:

லட்சக்கணக்கானவர்கள் உடல் உறுப்பு தானத்தை நம்பி வாழ்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டுமே உடலுறுப்பு தானம் செய்யுங்கள் , அதை உணர்த்தவே இந்த நாடகம் என்றாராம் .

பிரிட்டனில் இந்த வருடத்தில் இருந்து புதிய சட்டம் அமுலாகி உள்ளது.

உடலுறுப்பு இனி தானம் செய்ய வேண்டியதில்லை. மாறாக உடலுறுப்பு தானம் செய்ய விருப்பம் இல்லை என்று தான் எழுதி வைக்கவேண்டும்.

இந்த சட்டத்தினால், இறக்கும் ஒருவரின் உடல் உறுப்பு, தேசிய சொத்தாக கருதப்பட்டு, இறந்த நபரின் உறவினர்களின் அனுமதி இல்லாமலே, டாக்டர்களினால் பயன்படுத்தப்படலாம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.