Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் இன்று வியக்கத்தக்கதாக அமைந்த பிரதமரின் உரை

Featured Replies

நிலைமைகள் மெதுமெதுவாக முன்னேற்றம் கண்டுவந்தாலும், நெருக்கடியில் இருந்து வெளியேறவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் எடுவார்ட் பிலிப், வைரசுடன் நீண்டகாலத்துக்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டிய கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம் என மே11க்கு பின்னராக கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள், அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான முக்கிய செய்திகளை சுகாதாரத்துறை அமைச்சர் ஒலிவியே வெறான்வுடன் இணைந்து ஊடகங்களுக்கான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தடுப்பமருத்து கண்டுபிடிக்க நிலையிலும், முறையான சிகிச்சைமுறை இனங்காணப்படாத நிலையிலும், முன்னரைப் போன்றதொரு நிலைமை உடனடிச்சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர், 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களில் வைரஸ் தொற்று உள்ளதென்ற மதிப்பீட்டினைச் சுட்டிக்காட்டி, இதன் ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கு தற்காப்புமுறைகளே தற்போதைய நிலை எனத் தெரிவித்திருந்தார்.

பொதுமுடக்கத்தில் இருந்து வெளியேறுதல், பாடசாலை திறப்பு, சுகாதார நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், செயற்பாடுகள் தொடர்பில் இருவரும் எடுத்துரைந்திருந்தனர்.

– மே11ம் திகதி, அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படமாட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சமவேளையில் பாடங்கள் நடத்தபடமாட்டாது. கிழமைவிட்டு கிழமை என சுகாதார, தற்காப்பு, பாதுகாப்பு ஆகிய விடயங்களை கவனத்தில் கொண்டு கல்விச் செய்பாடுகள் அமைந்திருக்கும்.

– பொதுப்போக்குவரத்துகளில் சுவாசக்கவசம் கட்டாயமாக்கப்படுகின்றது. நெருக்கடிகளை குறைக்கும் வகையில் இயன்றவரை வீடுகளில் இருந்து வேலை செய்யக்கூடியவர்கள் வேலை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

– 2 இருந்து 6 மில்லியன் பிரென்சு குடிமக்களுக்கு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதற்கான மதிப்பீடுகள் உள்ளன.தொற்று அடையாளம் காணப்பட்டவர்கள் வீடுகளிலோ அல்லது விடுதிகளிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தற்போது நாளொன்று வைரஸ் தொற்றினை இனங்காணம் சோதனைகள் 25 000ஆக உள்ளது. மே மாத பகுதியில் இது வாரத்துக்கு 500 000ஆக உயர்கின்றது.

– பிரான்சில் உள்ள மூதாளர் இல்லங்களில் 45வீதமானவை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மூதாளர் இல்லங்களில் உள்ள மூத்தோரை அவர்களது குடும்ப உறுப்பினர் இருவர் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றது. மூதாளர் இல்லத்தின் பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலுக்கு அமைய, கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சந்திப்புகள் அமையும்.

(பிரான்சில் 7 500 மூதாளர் இல்லங்கள் இருப்பதோடு, அண்ணளவாக 7 இலட்சம் பேர் பாராமரிக்கப்பட்ட வருவதோடு, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 7800 பேர் பலியாகியுள்ளனர்.)

– தற்போது வாரத்துக்கு 45 மில்லியன் சுவாசக்கவசங்கள் தேவையாகவுள்ளது. வாரத்துக்கு 8 மில்லியன் பிரான்சில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், மிகுதி தேவையினை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

– யூன் மாத பகுதியில் பிரான்சிடம் 15 000 செயற்கை சுவாச வழங்கிகளும், மேலதிகமாக 15 000 நடமாடும் செயற்கை சுவாசவழங்கிகளும் கையிருப்பில் இருக்கும்.

– சுகாதாரத பிரிவிரின் கேட்டுக்கொண்ட சுவாசக்கவசங்களுக்கான நெருக்கடி ஓரளவு தீர்க்கப்பட்டள்ளது. மேலும் கையுறைகள், தற்காப்பு உடைகளுக்கான நெருக்கடி காணப்படுகின்றது. சுகாதாரத்துறை கேட்கின்ற எல்லாவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாத போதும், எமது அதிஉச்ச இராஜதந்திர செயற்பாட்டு முறையில் இறக்குமதி செய்து கொடுத்து வருகின்றோம்.

– தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான மருந்துகள் பெரும் பற்றாக்குறையாகவுள்ளது. கோமா நிலையில் உள்ளவர்கள், நீண்டகாலத்துக்கு சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியவர்களுக்கான பல மருந்துகள் தட்டுப்பாடாகியுள்ளது. உலக அளவில் 2000மடங்கு தேவை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம். இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் இது பற்றி கதைத்துள்ளோம். தற்போது இந்தியா நமது தேவைகள நிவர்த்தி செய்ய முன்வந்துள்ளது.

– எதிர்வரும் கோடையில் மனிதர்களிடத்தில் தடுப்பு மருந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. 1 வருடத்தில் அச்சோதனைகள் முழுமைபெறுமெனலாம்.

– கோடை விடுமுறைக்கு செல்லமுடியுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் சுற்றுலாவுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது என்பது உடனடிச்சாத்தியம் இல்லை. குறைந்தபட்சம் 200 பேருடன் ஒரு குடும்ப கொண்டாடங்களை நடத்தது என்பதெல்லாம் முடியாத காரியமாகவே இருக்கும்.

– உணவகங்கள், குடிப்பகங்கள் உடனடியாக திறக்க முடியாத நிலை காணப்படுகின்றது. பிற நிறுவனங்களுக்கு சமூக இடைவெளி, வரிசைக்கிரமமாக உட்செல்ல முடியும். ஆனால் உணவகங்களிலோ, குடிப்பகங்களிலோ சுவாசக்கவசம், கையுறைகளுடன் சாத்தியல் இல்லை.

– மே 11க்கு பின்னர் மூதாளர் வெளியில் செல்லலாம். ஆனால் முறையான பாதுப்பு இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளுதல் என்பது பிறரையும் சேர்த்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமம்.

– நாட்டின் பொருளாதாரம் 2020ம் ஆண்டில் 8 வீதத்தினால் வீழ்ச்சி காண்கின்றது.

இவ்வாறு பல்வேறு விடயங்கள் குறித்து நாட்டுமக்களுக்கு பிரதமரும், சுகாதாரத்துறை அமைச்சரும் எடுத்துரைத்தனர்.
 

 

https://www.srilanka20.com/2020/04/blog-post_41.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.