Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயலுமானவரை நடமாட்டத்தைத் தவிருங்கள்! யாழ். மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Featured Replies

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச் சூழ்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்களைத் தவிர ஏனையவர்கள் இயலுமானவரை வெளியில் நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

மேலும் நாட்டில் கொரோனா அபாயம் முற்றாக நீங்கும் வரை ஏனைய மாவட்டங்களிலும் வெளியில் நடமாடுவதை இயன்றவரை குறைத்துக்கொள்ளுங்கள்.

https://www.ibctamil.com/srilanka/80/141571

  • தொடங்கியவர்

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டமை பெரும் ஆபத்தாக மாறும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமை எமது மக்களிடையே மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.

மன்னார் நகர சபையின் 26 ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் நகர சபையில் இடம் பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்ற போதும் எமது நாட்டில் குறைந்த எண்ணிக்கையில் உயிர் இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அரசாங்கம் இத்தடைகளை நீக்காமல் பகுதி அளவில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இருக்கலாம்.

உடனடியாக கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பது எமது மக்களிடையே தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவ்விடையத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தி எதிர் வரும் காலங்களில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளுவதை முழுமையாக அமுல் படுத்திக் கொள்ளாமல் பகுதி அளவில் தளர்த்திக்கொள்ள வேண்டும்.

தற்போது காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணம் தொடர்ந்துள்ளது.

வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற உத்தியோகஸ்தர் ஒருவரினால் கூட எமது மாவட்டத்தில் உள்ள ஒருவருக்கு தொற்று ஏற்படலாம்.

அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அரசாங்கம் சட்டத்தை உரிய முறையில் அமுல்ப்படுத்த வேண்டும்.

எதிர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே அரசாங்கம் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை தளர்த்திக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கையின் வைத்தியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இலங்கையில் கொரோனா தொற்றும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என அறிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் காவல் துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் உள் நோக்கம் இருக்கின்றமை தெரிய வருகின்றது.

அரசாங்கத்திற்கு தேர்தலே பிரதான இலக்காக உள்ளதே தவிர மக்களின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. தற்போதைய சூழ்நிலையில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. எனவே இந்த விடையத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  • தொடங்கியவர்

யாழில் அபாயம் இன்னும் நீங்கவில்லை – எச்சரிக்கின்றார் த.சத்தியமூர்த்தி!

In இலங்கை     April 20, 2020 9:06 am GMT     0 Comments     1556     by : Benitlas

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டுமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கொரோனோ வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒருவரும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களில் 16 பேருமாக இதுவரையில் 17 பேருக்கு தொற்று இருப்பது  பரிசோதனைகளில் இனங்காணப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் குணமடைந்த நிலையில் தற்போது தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்கள் நால்வரும் அரியாலையப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களது விடுகளுக்கே நேற்று அனுப்பி வைக்கப்பட்டு தொடர்ந்து 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதே போல யாழில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்ற மேலும் சிலரும் குணமடைந்து வருகின்ற நிலையில் அவர்களும் விரைவில் வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனோ ஆபத்து நீங்கிவிட்டதாக கருத முடியாது.

எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பரிவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொது மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டும். அதனுாடாகவே தொற்று ஏற்படுவதிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாழில்-அபாயம்-இன்னும்-நீ/

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டாம் - யாழ். ஆயர்

Jaffna-Bishop-720x403.jpg

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் இருக்கக் கூடாது வேண்டாம் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “கடந்த ஒரு மாத காலமாக வீட்டோடு வாழ்ந்து எமது சமூக சூழமைவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை நாம் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்.

பெரிதும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகும். இந்நிலையில் நாம் இதுவரை பெரிதும் பாதிக்கப்படவில்லை. அதற்கான காரணம் மக்களாகிய நீங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கீழ்ப்படிந்து வாழ்ந்தமையே ஆகும்.

இன்று யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கைத் தளர்த்தியுள்ள நிலையில், மக்கள் கூடுதலான எண்ணிக்கையில் செறிவாகக் கூடிவருவதை அவதானிக்க முடிகிறது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மாவட்டச் செலயகம், யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி போன்றோர் யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை அவசரமாகத் தளர்த்த வேண்டாம் எனக்கோரிய போதிலும் அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.

ஆகவே கொவிட்-19 இன் அச்சுறுத்தல் இன்னும் யாழில் உண்டு என்பதே உண்மை நிலையாகும். எனவே ஊரடங்கு இல்லை என்ற எண்ணம் யாழ். மக்களாகிய எமக்கு வேண்டாம்.

எதிர்வரும் இரு வாரங்களுக்காவது தொடர்ந்து விழிப்பாக இருப்போம். மத வழிபாடுகள், பொது ஒன்றுகூடல்கள், வீண் களியாட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பவற்றை இக்காலத்தில் தவிர்த்துக்கொள்வோம்.

அவசர தேவைகளுக்கு மட்டும் வீட்டில் உள்ள ஒருவரோ அல்லது இருவரோ வெளியில் சுகாதார வழிமுறைகளைப் பேணிப் பயணிப்போம். முகக்கவசம் அணிவோம். சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்போம்.

நாம் சுய கட்டுப்பாட்டுடன் வாழ்வதன் வழியாக சமூக நலனைப் பேணுகின்றோம் என்ற உணர்வை இக்காலத்தில் மேம்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/யாழ்ப்பாணத்தில்-ஊரடங்கு/

யாழ்ப்பாணத்தில் கொரோனா அபாயம் நீங்கவில்லை! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கொரோனா அச்சுறுத்தல் நீங்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், தற்போது மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

https://www.ibctamil.com/srilanka/80/141588

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.