Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IS தற்கொலைதாரியாக மாறிய தமிழ் பெண்!

Featured Replies

ஒரு தமிழ் பெண் IS தற்கொலைதாரியாக மாறிய அதிர்ச்சிகரமான சம்பவம் பற்றி கடந்த வருடம் IBC-தமிழ் வெளியிட்ட ஆவணம் இது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் இந்த தமிழ் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தார்.

  • அந்தத் தமிழ் பெண் ஏன் ஐ.எஸ் தீவிரவாதியாக மாறினாள்?
  • மாறினாளா மாற்றப்பட்டாளா?
  • யார் அவளை தற்கொலைதாரியாக மாற்றியது?

 

https://www.tamilwin.com/srilanka/01/244232?ref=rightsidebar

  • தொடங்கியவர்

சாய்ந்தமருது கொடூர தற்கொலைத்தாக்குதல்! புலஸ்தினியின் மரபணுபரிசோதனையில் குழப்பம்

ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இரவு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இரு பிரதான குண்டுவெடிப்புக்களும் மற்றும் துப்பாக்கி சூடும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கொடூரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரை தேடி முப்படையினரும் களத்தில் இறங்கிய வேளை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர் , பாலமுனை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக பிரதேச மக்கள் காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர். இதே வேளை அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஆபத்தான பல வெடி பொருட்கள், தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டமையை தொடர்ந்து இராணுவத்தினர் சந்தேக நபர்களை பிடிப்பதற்கான தேடுதலை முடுக்கி விட்டனர்.

இதனை தொடர்ந்து சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் சிறியரக வான்களில் வந்து இறங்கிய புதிய நபர்கள் பதட்டத்துடன் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்கள் குறித்த பகுதியில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு விடையத்தை கூறிய வேளை சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் சென்ற போது, தங்களை பாதுகாப்பு தரப்பினர் நெருங்கிவிட்டதாக எண்ணி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் காவல் துறை உத்தியோகத்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.

விபரீதத்தை உணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்க குறித்த பிரதேசத்தை படையினர் சுற்றிவளைத்திருந்தனர். அவ்வேளை படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதன் பின்னர் தாக்குதல்தாரிகள் தற்கொலை குண்டை வெடிக்கவைத்தனர்.

அதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் பல்வேறு கேள்விகளுக்கு பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீர வாக்குமூலம் வழங்கி இருந்தார். இதன்போது அவர் தனது வாக்குமூலத்தில் சம்பவம் நடந்த வீடு அதை அண்டிய வெளியிடங்கள் உள்ளடங்கலாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் அவ்விடத்தில் இருந்து தடயப்பொருட்களை சேகரித்ததுடன் காயமடைந்த நிலையில் ஒரு பெண் மற்றும் பெண்குழந்தை ஆகியோரை மீட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் அவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இந்த விசாரணைகளின் போது காயமடைந்த பெண் மற்றும் பெண் குழந்தை ஆகியோர் தற்கொலைதாரி சஹ்ரானின் மனைவி மற்று குழந்தை என தெரியவந்துள்ளது.

அவர் வழங்கிய வாக்கு மூலத் தகவல்களின்படி,

முஹமட் ஹாசீம் முகமட் றில்வான் (முகமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

முகமட் நஸார் பாத்திமா நப்னா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மனைவி)

முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னிஃமுகமட் சின்னா மௌலவி( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரர்)

ஆதம்லெப்பை பாத்திமா அப்ரீன் ( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மனைவி)

ஹயாது முஹமட் ஹாசீம் (முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தந்தை)

அப்துல் சத்தார் சித்தி உம்மா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் தாய்)

முகமட் ஹாசீம் ஹிதாயா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் சகோதரி)

இப்றாகிம்லெப்பை முஹமட் றிசாட் (முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மைத்துனரும்

முகமட் ஹாசீம் ஹிதாயாவின் கணவர்)

அப்துல் ரஹீம் பிரோஸா (சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆசாத்தின் மனைவி)

மகேந்திரன் புலஸ்தினி/சாரா ஜெஸ்மி (நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலய தற்கொலை குண்டுதாரி முகமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவி)

அகமதுலெப்பை முகமட் நியாஸ்(தேசிய தௌஹீத் ஜமாத் பிரதான உறுப்பினர்)

முகமட் றில்வான் மீரா ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகள்)

முகமட் றில்வான் மருவான் சஹீட் ( முஹமட் ஹாசீம் முகமட் றில்வானின் மகன்)

முகமட் ஜெய்னி அமாயா( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகள்)

முகமட் இமாம் ஹாசிம்( முஹமட் ஹாசீம் முகமட் ஜெய்னியின் மகன்)

முகமட் சஹ்ரான் வாசீட் ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகன்)

மற்றுமொரு சடலம் இணங்காணப்படவில்லை

இது தவிர இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள்

முகமட் சஹ்ரான் ருசைதா ( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மகள்)

அப்துல் காதர் பாத்திமா ஹாதியா/சித்தியா( முஹமட் ஹாசீம் முகமட் சஹ்ரானின் மனைவி)

மேற்குறித்த 17 பேர் உயிரிழந்ததுடன், இருவர் காயங்களுக்கு உள்ளாகினர் என அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இவ்வாறு உயிரிழந்தவர்களில் சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையான விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி ஒருவர் கடந்த காலம் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், இந்த சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுபரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று பணித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

இவ்வாறு குறித்த தாக்குதலில் இறந்தவர்களது பிரேத பரிசோதனை யாவும் கடந்த ஏப்ரல் 28,29 ஆம் திகதிகளில் அம்பாறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவினால் நடத்தப்பட்டிருந்தன. அதன் பின்னர் உயிரிழந்தவர்களது சடலங்கள் அம்பாறை மாவட்டம் புத்தங்கல பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் 2019/5/2 அன்று அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/141936

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.