Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆயிரம் சடலப் பைகள் விவகாரம்; முற்றாக மறுக்கிறது அரசு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சடலப் பைகள் விவகாரம்; முற்றாக மறுக்கிறது அரசு!

body-bag-blue-1024x580-1-960x544.jpg?189db0&189db0

ஐசிஆர்சியிடம் ஆயிரம் சடலப் பைகள் (Body Bags) கோரப்பட்டது, கொரோனாவினால் அதிகளவு மரணம் ஏற்படும் என்பதாலல்ல என்று சுகாதார பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் அதிக மரணங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.

சுகாதார அமைச்சு எப்போதும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சடலப் பைகள் உட்பட குறிப்பிட்ட அளவிலான மருத்துவ பொருட்களை தேக்கி வைத்திருக்கும. இது ஒரு கட்டாய தேவை.

அதே போல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குறித்த ஆயிரம் சடலப் பைகள் கோரப்பட்டுள்ளன

எந்தவொரு பேரழிவு மற்றும் பிற மோசமான நிலைமையினால் இறப்பவர்களின் உடல்களை சடலப் பைகளில் வைப்பது நீண்டகால நடைமுறையாகும். அது தனியே கொரோனாவுக்கு மட்டுமானதல்ல.

உதாரணமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது இறந்தவர்களின் உடல்கள் சடலப் பைகளில் வைக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும்.

எனவே இந்த கோரிக்கை தொடர்பில் மக்கள் அச்சப்படவோ, சந்தேகங்களை ஏற்படுத்தி கொள்ளவோ தேவையில்லை – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

https://newuthayan.com/ஆயிரம்-சடலப்-பைகள்-விவக/

 

 

51 minutes ago, உடையார் said:

உதாரணமாக கடந்த ஆண்டு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் போது இறந்தவர்களின் உடல்கள் சடலப் பைகளில் வைக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பின்பற்றப்படும் நடைமுறை ஆகும்.

உங்களுக்குத்தானே தெரியும் எங்கே எப்பொழுது எவ்வளவு மக்கள் கொல்லப்படுவார்கள் என 🙄

உலகில் நல்ல பெயர் எடுக்க ஏற்கனவே பல மரணங்கள் மறைக்கப்பட்டுவிட்டதாம். 
ஒருத்தருக்கு எலிக் காச்சலாம்.  
இன்னொருத்தருக்கு நரிக் க்காச்சலாம். 
கொரோனா தாய்க்கு பிறந்து செத்த குழந்தை சும்மா பகிடிக்கு செத்து போச்சாம். 
சிலர் மாரடைப்பால செத்து போனார்களாம். 

ஸ்ரீலங்காவில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி?

ஸ்ரீலங்காவில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பிலியந்தலை,சித்தமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 82 வயது மதிக்கத்தக்க முதியவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த முதிவர் நேற்று முன்தினம் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு சுகயீனம் தீவிரமாகிய நிலையில் நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு நடத்திய பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் அவரின் உடல் இன்று உடஹமுல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

அவர் வசித்த பிலியந்தலை, சித்தமுல்ல பகுதியில் சுகாதார பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/142053

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.