Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PM-Modi-And-TN-CM.jpg

உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை!

தமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசாத முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பேசினார்கள். இந்நிலையில் நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர்.

அந்தவகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய ஃபக்சில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பயனாளிகளுக்கான ஊதியத்தை உள்ளூர் அளவில் பணத் தொகையாகவே வழங்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவக் கருவிகள் வாங்குவதற்கு ஏற்கெனவே கேட்டிருந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள முதலமைச்சர், மருத்துவ கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிதிப்பற்றாக்குறை வரம்பை, மாநில ஜி.டி.பி.யில் 4.5 சதவீதமாக உயர்த்த வேண்டும், மாநில அரசு, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாக 33 சதவீதம் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும், டிசம்பர்-ஜனவரி காலகட்டத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும், நடப்பு நிதியாண்டுக்கான நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கான நிதிக்குழு மானியங்களை இப்போதே விடுவிக்க வேண்டும், கம்பெனிகள் சட்டத்தின் கீழ், பெரு முதலீட்டு நிறுவனங்களின் (கார்ப்பரேட்) சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்பை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெற வகை செய்ய வேண்டும், மின்துறையின் சுமையை குறைக்கும் வகையில் நிவாரணத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினரின் கடன்கள் மற்றும் மூலதனக் கடன்களுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும்,  ஜி.எஸ்.டி. முற்கொடுப்பனவு வரி மற்றும் வருமான வரி செலுத்துவதை 6 மாதங்களுக்கு பிற்போட வேண்டும் எனவும் பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://athavannews.com/உடனடியாக-1000-கோடி-வேண்டும்-ப/

  • கருத்துக்கள உறவுகள்

ரேபிட் கிட் விடயத்தில் 9 கோடி அடித்தனாங்கள்...1000கோடி என்றால் எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா..அம்மா வாழ்க.... சின்னம்மா செய்த புண்ணியத்தில்...எவ்வளவு அதிஸ்டம்....வாழ்க கொரானா..

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

ரேபிட் கிட் விடயத்தில் 9 கோடி அடித்தனாங்கள்...1000கோடி என்றால் எவ்வளவு வருமானம் வரும் தெரியுமா..அம்மா வாழ்க.... சின்னம்மா செய்த புண்ணியத்தில்...எவ்வளவு அதிஸ்டம்....வாழ்க கொரானா..

400-600 கோடி கொமிசனா 🤥

மேலும்  கொமிசன்  அடிக் கலாம் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.