Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க” : டியூசன் அனுப்பியதால், போலிஸாரிடம் புகார் அளித்த சிறுவன்!

'ஊரடங்கு சமயத்தில் தன்னை டீயூசன் அனுப்புவதாக' கூறி 5 வயது சிறுவன் போலிஸாரின் புகார் அளித்த சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊர்டங்கால் பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளனர்.

 

Punjab_Police.jpg?auto=format,compress&format=webp&w=720     EW1p6mSU4AAizHX.jpg?auto=format,compress&format=webp&w=750

 

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை ஊரடங்கு நேரத்தில் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், டியூசன் செல்லாமல் படாலா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான்.

அழுகையும், ஆத்திரமுமாய் வந்த சிறுவனை அழைத்து போலிஸார் "ஏன் இங்கே வந்தீர்கள்..?" என கேட்டுள்ளனர். அப்போது தனது அழுகையை நிறுத்தி பேச தொடங்கிய சிறுவன், 'அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பிவைப்பதாக' போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான்.

 

 

 

அதுமட்டுமின்றி, 'தன்னை டியூசன் அனுப்பி வைத்த அம்மா, அப்பா மற்றும் டியூசன் டீச்சர் ஆகியோரை கைது செய்யவேண்டும்..!' என கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்ற டி.எஸ்.பி குர்திப் சிங், அவரிடம் "டியூசன் எடுக்கிறீர்களா?" எனக் கேட்டார்.

அப்போது ஆசிரியர் "இல்லை" என மறுக்க, சிறுவன் உடனே "இல்லை.. இல்லை.. தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக" கூறியுள்ளான். பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து "இனி டியூசன் எடுக்கக்கூடாது..!" என ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கலைஞர் செய்திகள்

 

டிஸ்கி:

இரண்டாவது காணொளியில் சிவப்பு சட்டையணிந்த தந்தைக்கு போலீஸார் 'அறிவுரை' சொல்வதும், அவர் தர்ம சங்கடத்தில் திணறி பையனை தடுப்பதும், பொடியன் துணிந்து போலீஸாரை அழைத்துக்கொண்டு டியூசன் டீச்சரின் வீட்டுக்கே சென்று கதவை தட்டி புகார் சொல்வதையும் பார்க்கையில், பொடியன் படு சுட்டியாக இருப்பான் போல தெரியுது..!

 

Edited by ராசவன்னியன்
To change video link

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"நாடே லாக்டவுன்ல கெடக்குது நான் மட்டும் டியூசன் போகணுமா…? எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க ஆபீசர்...!"

போலீசாரை வீட்டுக்கே கூட்டிச்சென்ற 5 வயது பொடியன்.

குருதாஸ்பூர்: நாடே லாக்டவுன்ல முடங்கியிருக்கும்போது தன்னை மட்டும் படிப்பதற்கு டீயூசன் அனுப்பவதாக கூறி பஞ்சாப்பில் 5 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கூறி அதிகாரியை வீட்டுக்கே அழைத்து சென்றான்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் நாளை மறுதினம் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த இரண்டு மாதங்களாக நர்சரி பள்ளி தொடங்கி கல்லூரிகள், ஐஐடிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் முடங்கியுள்ளன.


Tamil_News_Apr26_2020__381725490093232.j


இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில்,  ஊரடங்கு நேரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்புவதால் 5 வயது சிறுவன் அதிருப்தி அடைந்தான்.  அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பி வைப்பதால் அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது.

இதனைத்தொடர்ந்து 'பொறுத்தது போதும்!' என பொங்கி எழுந்த பொடியன் டியூசனுக்கு செல்லாமல், காவல் நிலையத்துக்கு சென்றுள்ளான். 'ஊரடங்கு நேரத்தில் படிக்கச்சொல்லி தன்னை டியூசன் அனுப்பிவைப்பதாக' போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான்.

'டியூசன் அனுப்பி வைக்கும் அப்பா, அம்மா, டியூசன் சொல்லி தரும் ஆசிரியை என மூன்றுபேரையும் கைது செய்ய வேண்டும்' என்றும் சிறுவன் கூறியுள்ளான்.  சிறுவனின் அழுகையை அடக்கிய படாலா டிஎஸ்பி குர்திப் சிங், சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் கதவு தட்டப்பட்டதால் வெளியே வந்த ஆசிரியை, போலீசார் கூட்டத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டிஎஸ்பி அவரிடம் "டியூசன் எடுக்கிறீர்களா..?" என கேட்டபோது ஆசிரியை "இல்லை" என மறுத்துவிட்டார்.

ஆனால் சிறுவனோ 'ஆசிரியை தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக' தெரிவித்தான். இதனைத் தொடர்ந்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

பின்னர் 'ஊரடங்கு நேரத்தில் இதுபோன்று நடந்துக் கொள்ளக்கூடாது' என டிஎஸ்பி ஆசிரியைக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிறுவனின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் டிஎஸ்பி அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார்.

‘‘நாங்க எல்லாம், எங்க காலத்துல டியூஷன் மிஸ் குட்டினாலும் பொறுத்திட்டு வந்தோமேடா... நீ போலீசையே கூட்டிட்டு வந்திருக்கேயடா...’’ என்று வடிவேலு பாணியில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சிறுவனின் பெற்றோர். 🤩:)

தினகரன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

நாங்க எல்லாம், எங்க காலத்துல டியூஷன் மிஸ் குட்டினாலும் பொறுத்திட்டு வந்தோமேடா... நீ போலீசையே கூட்டிட்டு வந்திருக்கேயடா...’’ என்று வடிவேலு பாணியில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சிறுவனின் பெற்றோர். 🤩:)

சைக்கிளில் போனால் எதிரே வாத்தி வந்தால் வாத்தியின் சைக்கிள் மறையும் மட்டும் நாங்கள் இறங்கி சைக்கிளை உருட்டிக்கொண்டு போவதுண்டு வாத்தியும் கடைக்கண்ணால் பார்த்தும் பார்க்காதது போல் போவார் .

மாதா பிதா குரு தெய்வம் என்று அந்த பெரிய லிஸ்ரில்  அவையும்   ஒரு சாதாரண GA  விட அதிக மரியாதை அவர்களுக்கு.

அவர்களும் அந்த மரியாதையை காப்பற்றுவார்கள் கேள்விப்பட்டதில்  உடுப்பிட்டியில்  உள்ள நீலகண்டன் வாத்தியார் பள்ளியில் சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் ஸ்பெஷல் கிளாஸ் நடக்கும் பணம் வாங்குவதில்லை . ஒரு சிலர் விதி விலக்கு  சிகரெட்டும் கையுமாக படிப்பிக்கும் கேசும் உண்டு ஆனாலும் அவர்களுக்கும் ஒரு மரியாதை இருக்கும் .

 

  • கருத்துக்கள உறவுகள்

95920162_1764399397046871_8315086603798183936_n.jpg?_nc_cat=101&_nc_sid=730e14&_nc_ohc=YDrZXDqnMb8AX_UFaB3&_nc_ht=scontent-frt3-2.xx&oh=1fa8ec0fded3908c2ae0ec8bfcd5a2fd&oe=5ED73A30

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.