Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றத்தைக் கூட்டாது நிதி நிர்வாகத்தை பசிலிடம் கையளிக்கப்பட்டுள்ளது - சம்பிக்க கடும் குற்றச்சாட்டு

Featured Replies

(செ.தேன்மொழி)

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கான காலம் இருக்கின்ற நிலையில் இடையில் பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாமல் உடன் பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நிதி தொடர்பான செயற்பாடுகளை கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு கையளித்து கடந்தகால குடும்ப ஆட்சியையே மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் தொடர்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியே முடிவடைய இருந்தது.

இதற்கமைய பாராளுமன்றத்தை களைத்திருந்தால் அக்டோம்பர் மாதம் தேர்தலை நடத்த முடிந்திருக்கும். இந்த நெருக்கடிக்குள் மத்தியில் யார் பொதுத்தேர்தலை நடத்த தீர்மானம் எடுக்க சொன்னது.

அரசாங்கமே தேர்தல் தொடர்பில் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்றத்தை மார்ச் மாதம் களைத்தால் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும். தற்போது அதுவும் நடைபெறவாய்ப்பில்லை.

இதன் காரணமாகவும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இதனால் அந்த வர்தமானி அறிவித்தல் தொடர்பிலும் தற்போது சிக்கல் நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்ட காலப்பகுதியில் வைரஸ் பரவல் அதிகரித்திருந்தமையினால், மூன்று நாட்கள் அரசவிமுறை அறிவிப்பட்டன .

இந்த காலப்பகுதியிலே வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது. தற்போது இந்த வேட்பு மனு செல்லுப்படியாகுமா என்பது தொடர்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதால் தேர்தல் சட்டங்களை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தில் வாக்காளரின் விரலில் மை பூசவேண்டும். அதனை இந்த வைரஸ் தொற்றுக்கு மத்தியில் செயற்படுத்த முடியுமா? இதனால் தேர்தலை நடாத்துவதென்றால் தேர்தல் சட்டத்தையும் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவும் ஏற்றுக் உணர்ந்துக் கொண்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இடைவெளியை பேணுவதன் ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுத்தலாம் என்பதற்காகவே நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் ஊரடங்குக்கென்று தனிச்சட்டம் இருக்கின்றது இந்நிலையில் இதனூடாகவும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது.

மே முதலாம் திகதியிலிருந்து அரச நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் சிக்கல்கள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தை களைத்தற்கு பின்னர் மூன்று மாதங்களுக்கான 7200 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் பாராளுமன்றம் களைக்கப்பட்டால், புதிய பாராளுமன்றம் கூடப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னரே நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் . இதுவே 153 சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாராளுமன்றத்தை களைத்துவிட்டு அனைத்து பொறுப்புகளையும் பசில்ராஜபக்ஸவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அமைச்சரவைக்கும் தற்போது அனுமதி இல்லை. நீதியற்ற முறையில் அரசியலமைப்பும் மீறி செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தை கூட வேண்டாம். பாராளுமன்றம் கூடி மருந்து கண்டுப்பிடிக்கவா என கேள்வி எழுப்பி பாராளுமன்றம் கூடுவதை நிராகரித்தனர். பின்னர் அனைத்து முதலீடுகளையும் முகாமைத்துவம் செய்ய தமது உறவினர் ஒருவருக்கு ஒப்படைத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அலரி மாளிகைக்கு அழைத்துள்ளனர். இதற்கு முன்னரும் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்த போது நாங்கள் சென்றோம்.

இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்புகள் இடம்பெற்ற போது, நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இதன் போது வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்ட போது அதனை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் நாங்கள் எதற்கு அங்குச் செல்ல வேண்டும். அதனாலேயே செல்வதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம்.

பாராளுமன்றத்தை கூட்டுவதால் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வுக்கான முடியும். தொற்று நோய்பரவல் காலங்களில் செயற்படும் விதம் தொடர்பான புதிய சட்டங்களை அமுல்படுத்தல், முறையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

பாராளுமன்றத்தை களைத்துவிட்டு முறையற்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் எதிர்கட்சி கேள்வி எழுப்பும் என்றே பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இவர்கள் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் முன்னெடுத்த குடும்ப ஆட்சியையே மீண்டும் செயற்படுத்திவருகின்றனர்.

https://www.virakesari.lk/article/81284


பொதுமக்கள் பணத்தை, சொத்தை சுருட்டுவதில் கைதேர்ந்தவர் பசில் என்பதால் அவருக்கு அந்த பதவி.

ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமக்கு தேவையானவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமக்கு தேவையானவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கி கபடத்தனமான முறையில் அரசாங்கம் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைக்க தயாராகி வருகின்றது.

இதன்மூலம் கடந்த காலங்களில் நிரப்பிக்கொள்ள தவறிய பணப்பெட்டிகளை தற்போது நிரப்பிக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.

இந்த அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க முன்னைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு தேவையான 3,170 கோடி ரூபா பணத்தை தேடிக்கொள்ள முடியாமல் போனதால் அது தடைப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமக்கு தேவையானவர்களை உள்ளீர்த்து ஒழுக்கமற்ற முறையில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டத்தை அரசாங்கம் அமைக்க முயற்சித்து வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142462

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Rajesh said:


பொதுமக்கள் பணத்தை, சொத்தை சுருட்டுவதில் கைதேர்ந்தவர் பசில் என்பதால் அவருக்கு அந்த பதவி.

அப்ப ஒட்டுமொத்தமாய் ராஜபக்ச குடும்பத்துக்குத்தான் சகல பதவிகளும் போல....
தம்பி ஜனாதிபதி அண்ணை பிரதமர்.....................
கிட்டத்தட்ட அரச/குடும்ப ஆட்சி மாதிரி
கலைஞர் கருணாநிதி பிச்சை வாங்கோணும் 😂

On 4/5/2020 at 19:41, குமாரசாமி said:

கலைஞர் கருணாநிதி பிச்சை வாங்கோணும் 😂

கலைஜர் கருணாநிதி தந்தி அடிச்சு அடிச்சு எல்லாரையும் ஏமாத்தி போட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.