Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11ஆம் திகதி ஊரடங்கு தளர்வு: மட்டக்களப்பு நிலைமை குறித்து ஆராய கூடியது கொரோனா செயலணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11ஆம் திகதி ஊரடங்கு தளர்வு: மட்டக்களப்பு நிலைமை குறித்து ஆராய கூடியது கொரோனா செயலணி!

 

 

 

     by : Litharsan

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் வரும் 11ஆம் திகதி நீக்கப்பட்டு, நாடு வழமைக்குத் திரும்பவுள்ள நிலையில் மட்டக்களப்பு நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கொரோனா செயலணிக் கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா, இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.கலாரஞ்சினி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பொறுப்பதிகாரிகள் என பல்துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இயல்புநிலையினை ஏற்படுத்துவதற்காக ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, போக்குவரத்து குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்திற்குள் மட்டும் போக்குவரத்துகளை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக, மாவட்டத்திற்கு மாவட்டம் அலுவலகத்திற்குச் செல்லும் உத்தியோகத்தர்கள் போக்குவரத்தினை மேற்கொள்ளவும் பிரயாணம் செய்யும் பொதுமக்கள் பொதுச்சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நடைபெறும் போக்குவரத்துகளை வாழைச்சேனை வரையில் மட்டுப்படுத்தவும் இதன்போது பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு, போதனா வைத்தியசாலையின் நடவடிக்கைகளை படிப்படியாக வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கிளினிக் வருவோருக்கு தற்போதுள்ள நடைமுறைகளைப் போன்றே வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

உணவு விடுதிகள் திறக்கப்படும்போது அங்கு பொதிகள் மூலமான விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்குதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் தற்போது மேற்கொண்டுவரும் அதே சுகாதார நடைமுறையினை ஊரடங்கு தளர்த்தப்படும் காலத்திலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல், வீண்விரய வெளி நடமாட்டங்களை கட்டுப்படுத்தல், அலுவலகங்களில் சுகாதார நடைமுறைகளைப் பேணுதல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் அது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

http://athavannews.com/11ஆம்-திகதி-ஊரடங்கு-தளர்வு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.