Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னி பெரும் மனித அவலங்களை எதிர்நோக்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி பெரும் மனித அவலங்களை எதிர்நோக்குகிறது

[ஞாயிற்றுக்கிழமை, 27 மே 2007, 16:28 ஈழம்] [க.திருக்குமார்]

வன்னிப்பகுதிக்கான போக்குவரத்துப் பாதையான ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனைச் சாவடிகள் மூடப்பட்டுள்ளதனால் உணவுப் பற்றக்குறை உட்பட பெரும் மனித அவலங்களை வன்னிப்பகுதி எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு தரப்புக்களிடம் இருந்தும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் பெறப்படும் வரையில் சோதனைச் சாவடிகளில் தமது அதிகாரிகளை நியமிக்க முடியாது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தாமதத்தினால் வன்னிப் பகுதிக்கான உணவு, மருந்து விநியோகங்கள் தடைப்பட்டுள்ளன.

முகமாலை பாதை மூடப்பட்ட பின்னர் வன்னிக்கான பிரதான வழங்கல் பாதையாக ஓமந்தைப் பாதையே இருந்து வந்துள்ளது.

இது தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தின் பேச்சாளர் டேவிட் விக்னாரி தெரிவித்துள்ளதாவது:

"நாம் பாதையை திறப்பது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை துணைப் பொறுப்பாளரான தங்கனுடன் கலந்துரையாடி வருகின்றோம். படையினர் தாக்குதலை நடத்தினால் அதில் இருந்து தம்மை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தங்கன் தெரிவித்துள்ளார்.

எனினும் பாதை மூடப்பட்டதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என படையினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடர்பாக தற்போது அரசுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எமது குழுவினர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளையும் கடந்த இரவு சந்தித்துள்ளனர். எனினும் அதில் விவாதிக்கப்பட்டவை தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை.

எமக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை நாம் எமது உறுப்பினர்களை அங்கு நிறுத்தப்போவதில்லை. எமது அதிகாரிகளின் உயிர்களை ஒரு ஆபத்தான நிலையில் வைக்க நாம் விரும்பவில்லை. இந்த பாதைகள் மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டால் அது பாரிய உணவு நெருக்கடிகளை வன்னியில் ஏற்படுத்தும்" என்றார் அவர்.

"உயிலங்குளம் பாதை கடந்த 18 ஆம் நாளும், ஓமந்தை பாதை கடந்த செவ்வாய்க்கிழமையும் மூடப்பட்டன. பாதை மூடப்பட்டதால் உணவு, மண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 35 பாரஊர்திகள் ஓமந்தை சோதனைச் சாவடிகளில் தரித்து நிற்பதாக" முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

"மேலதிகமாக அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவந்த 50 பாரஊர்திகள் வவுனியாவில் தரித்து நிற்பதாக" வவுனியா மேலதிக அரச அதிபர் பி.எஸ்.ஏ.சார்ள்ஸ் தெரிவித்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினி போட்டு தமிழ் மக்களை அடி பணிய வைக்கலாம் என மகிந்த அரசு கனவு காண்கிறது. இதே நிலை சிங்கள மக்களுக்கும் வர வேண்டும். அப்போது தான் பட்டினியின் தன்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் போர் தீவிரம் - செஞ்சிலுவைச் சங்கம் வெளியேறுகிறது தமிழர்களுக்கு ஆபத்து அதிகரிப்பு

கொழும்பு, மே 25: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்களப் படையினருக்கும் இடையேயான சண்டை தீவிரமடைந்து வருவதையடுத்து, போர் முனையில் காயமடைந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவும் பணியில் ஈடுபட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தினர் போர் நடக்கும் பகுதியை விட்டு வெளியேறி உள்ளனர்.

இலங்கை வவுனியா மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும், சிங்களப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் இணைக்கும் ஓமந்தை ஆய்வுச் சாவடிக்கு அருகில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினரின் விடுதி மீது நேற்று துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுகள் விழுந்து வெடித்ததையடுத்து இந்த முடிவை செஞ்சிலுவைச் சங்கத்தினர் எடுத்துள்ளனர்.

“கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை செஞ்சிலுவைச் சங்கத்தினர் தங்கியிருக்கும் இடங்கள்மீது துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன. இதனால் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் பாதுகாப்பு கருதி சண்டை நடைபெறும் இடங்களில் இருந்து வெளியேறுவது என நாங்கள் முடிவு செய்து பாதுகாப்புக்கான உத்தரவாதம் பெறப்பட்டு அடுத்த அறிவிப்பு வரும்வரை சண்டை நடைபெறும் பகுதிகளுக்குச் செல்லமாட்டோம்” என்று செஞ்சிலுவைச் சங்கச் செய்தித் தொடர்பாளர் டேவி° விக் னாட்டி தெரிவித்தார்.

போர்முனையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்குச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவே இதுவரை வழங்கப்பட்டு வந்த உணவு மருந்து போன்ற பொருள்கள் இனி வழங்கப்படுவது தடைப்படும். செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இந்தியா விலிருந்து இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப் பொருள்கள் அனுப்பப்பட விருந்த நிலையில் செஞ்சிலு வைச் சங்கம் வெளியேறியி ருப்பது பாதிப்பை அதிகரிக்கும்.

-விடுதலை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.