Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு தளர்வால் ஏற்பட்ட விளைவு!' - எழுந்த வேகத்தில் மீண்டும் வீழ்ந்த தென் கொரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு தளர்வால் ஏற்பட்ட விளைவு!' - எழுந்த வேகத்தில் மீண்டும் வீழ்ந்த தென் கொரியா?

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டு தங்கள் நாட்டையும் மக்களையும் காப்பாற்றிய நாடாக சர்வதேச அளவில் புகழப்பட்டு வந்தது தென் கொரியா. வைரஸ் கட்டுப்படுத்துதலில் அவர்களிடமிருந்து பிற நாடுகள் பாடம் கற்க வேண்டும் என ஐ.நாவும், உலக சுகாதார அமைப்பும் வெளிப்படையாக அறிவித்தன. இந்த அனைத்துப் புகழுக்கும் சவால் விடுக்கும் வகையில் தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

 
சீனாவில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் அதற்கு அடுத்தபடியாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக இருந்தது தென் கொரியா. பின்னர் அந்நாட்டு அரசால் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் சிறந்த திட்டங்கள் மூலம் கொரோனா பரவல் 10 ஆயிரத்துக்குள்ளேயே அடக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு, பலகட்ட சோதனைகள், மக்களின் ஒத்துழைப்பு போன்றவற்றால் அங்கு கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்த்து நடந்த போரில் தென் கொரியா கையாண்ட வியூகம் உலக நாடுகளை ஈர்த்தது. இந்த இக்கட்டான சூழலிலும் நாடாளுமன்றத் தேர்தலைச் சவாலாக எடுத்து அதில் ஆளும் கட்சி வெற்றியும் பெற்றது.
 
அங்கு வைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்த மே மாதம் தொடக்கம் முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாட அனுமதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் தென் கொரியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,962 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 256 - ஆகவும் இருந்தது. மேலும் அங்கு 9,695 பேர் குணமடைந்து 1,008 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், தென் கொரியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில் மீண்டும் அங்கு வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென் கொரிய தலைநகர் சியோல் மாகாணத்தில் இருக்கும் இட்டாவோன் என்ற மாவட்டத்தில் சுமார் 300-க்கும் அதிகமான இரவு நேர கிளப்புகள் இயங்கி வந்துள்ளன. இவை அனைத்தும் ஊரடங்கு தளர்வினால் கடந்த வாரம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த 29- வயது இளைஞர் ஒருவருக்கு அறிகுறியே இல்லாத வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அறிகுறியே இல்லாததால் அவர் மிகவும் சாதாரணமாகப் பல கிளப்புகளுக்குச் சென்றுள்ளார். இவர் மூலம் மட்டுமே 100 பேருக்கு வைரஸ் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இளைஞர் கிளப்புக்குச் சென்ற நேரத்தில் சுமார் 5,500-க்கும் அதிகமான நபர்கள் அந்த இடத்திலிருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 
எனவே அந்த இளைஞர் சென்ற கிளப்புகள் மட்டும் முடக்கப்பட்டு அங்கு வருகை தந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 2300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த கிளப்புகளுக்குச் சென்றவர்கள் தாங்களாக வந்து கொரோனா சோதனை செய்துகொள்ளும் படி அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தென் கொரியாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இரண்டாம் அலை உருவாகுமோ என்ற அச்சத்தில் அந்நாட்டு மக்கள் உறைந்துள்ளனர்.
 

மேலும் முன்னதாக அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த தென் கொரியாவின் தற்போதைய நிலை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட 29 வயது இளைஞருக்கு எப்படி தொற்று வந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது பற்றிப் பேசியுள்ள சியோல் தேசியப் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரப் பள்ளியின் பேராசிரியர் சூன்மேன் சுவோம், “ இட்டாவோன் இரவு கிளப் மூலம் மீண்டும் வைரஸ் பரவியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

தென் கொரியாவில் பிப்ரவரி மாதம் ஏற்பட்ட வெடிப்பை விட தற்போது இரவு கிளப் வெடிப்பின் தொடர்பு தடமறிவது மிகவும் கடினமாக இருக்கும். கிளப்புக்களுக்கு வந்தவர்கள் எதிலும் தங்கள் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அதனால் அவர்கள் பயன்படுத்திய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் வந்து சென்றவர்களைக் கண்டறிவது கடினமானது. மேலும் அறிகுறியே இல்லாமல் வைரஸ் பரவுவதால் தொற்று உள்ளவர்களைக் கண்டுபிடிப்பது மேலும் சவாலாக உள்ளது. வரும் காலத்தில் இதே போன்ற பல கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உருவாகலாம். அவற்றை எதிர்த்துப் போராட நாம் அனைத்து விதத்திலும் தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தென் கொரியா
 
தென் கொரியா AP

முதன் முதலில் சீனாவில்தான் கொரோனா தோன்றியதாகக் கூறப்பட்டது. பின்பு அங்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கும் ஊரடங்கில் தளர்வு விதிக்கப்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஆனால் கடந்த சில நாள்களாக மீண்டும் சீனாவில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சீனா, தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் முழுமையாக வைரஸை ஒழித்தபிறகே ஊரடங்கை அறிவித்தன. ஆனால் அதற்குப் பிறகு அங்கு மீண்டும் வைரஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு தொடர்பான பிற நாடுகளின் ஆலோசனைக்கு இது எச்சரிக்கை விடுக்கும் வகையில் உள்ளது. தற்போதைக்கு சமூக இடைவெளி மட்டுமே கொரோனாவுக்கான சிறந்த மருந்தாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.vikatan.com/government-and-politics/international/south-korea-raise-alarm-over-second-wave-amid-corona?artfrm=v4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.