Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாளிகாவத்தையில் சனநெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி; 4 பேர் காயம்! 6 பேர் கைது

breaking-news-300x165.jpgகொழும்பு, மாளிகாவத்தையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் 3 பெண்கள் மரணமடைந்ததுடன், 4 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட ஒருவர், வீடொன்றில் வைத்து நிவாரணமாக பொருட்களையும், பணத்தை விநியோகம் செய்த போதே அதனைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்ற போது ஏற்பட்ட சன நெரிசலிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகில் வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. அங்கு 500 க்கும் அதிகமானவர்கள் நிவாரணத்தைப் பெறுவதற்காக கூடியபோது கடுமையான சனநெரிசல் ஏற்பட்டது. அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நெரிசலில் சிக்குண்டு 3 பெண்கள் மரணமடைய, 3 பெண்கள் உட்பட குறைந்தது நான்கு பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், இது தொடர்பில் ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு பதற்ற நிலை காணப்படுகின்றது. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

http://thinakkural.lk/article/42737

  • கருத்துக்கள உறவுகள்

சன நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்

 

 

     by : Jeyachandran Vithushan

Breaking.jpg

மாளிகாவத்தை மிராணி பகுதியில் மக்கள் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி விநியோக செயற்பாட்டின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த 04 பெண்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஒருவரினால் குறித்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறியமுடிகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/சன-நெரிசலில்-சிக்கி-3-பெண்/

தற்போதுள்ள கொரோனா விதிமுறைகளுக்கு விரோதமா தெஹிவளைல இருக்கிற முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் நோன்புகால நிதி குடுக்கிறன் என்டு பலரை கூப்பிட்டு நெரிசலை உருவாக்கினத்துல 3 பெண்கள் மரணமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாளிகாவத்தையில் நடந்தது என்ன? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சர்வதேச செய்தி சேவைக்கு தகவல்

இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு நிலையில் அன்பளி;ப்பாக வழங்கப்படும் 1500 ரூபாயை பெறுவதற்கான நெரிசல் காரணமாக மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.maligawata4-300x200.jpg

முஸ்லீம்களின் ரமலான் மாதத்தில் வழங்கப்படும் உதவியை பெறுவதற்காக வர்த்தகர் ஒருவரின் களஞ்சியசாலைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்

.maligawata-1-300x151.jpg
அந்த கட்டிடத்தின் கதவுகள் திறக்கப்பட்டவேளை அந்த 1500 ருபாயை பெறுவதற்கு மக்கள் முண்டியடித்தனர் என தெரிவித்துள்ள அவர் இது அவர்கள் நாளாந்தம் உழைக்கும் சம்பளத்தின் அளவு எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் வரிசையில் நின்றிருந்தனர் சிலர் வரிசையை குழப்பிக்கொண்டு முன்னே செல்ல முயன்றனர் என அவர் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.
அவ்வேளையே அந்த வரிசையில் முன்னால் நின்றுகொண்டிருந்த பெண்கள் கீழே விழுந்தனர்,ஏனையவர்களால் மிதிக்கப்பட்டனர் என முஜிபூர் ரஹ்மான் ஏஎவ்பிக்கு ரிவித்தார்.

வைரஸ் முடக்கல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் எந்த பணத்தையும் உழைக்கவில்லை என குறிப்பிட்ட அவர் மக்கள் மிகவும் ஆற்றவொணா நிலையிலிருந்தனர்,இங்கு பணம் வழங்கப்படுகின்றது என்பதை கேள்விப்பட்டதும் ஆயிரக்கணக்கில் திரண்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.

முடக்கல் விதிமுறைகளை மீறியமைக்காக வர்த்தகரும் மேலும் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்தார்.
வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள 5.14 மில்லியன் மக்களிற்கான அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிதி உதவி காரணமாகவும் கிராமங்களில் குழப்பமான நிலைகள்ஏற்பட்டுள்ளன.

http://thinakkural.lk/article/42794

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.