Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில ஞாபகங்கள் -7

Featured Replies

அப்பா வீட்டில்  சட்ட திட்டம் போடுவது  குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில்  நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும்.
 
இலங்கை வானொலியில்  பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி  சாமி கும்பிட்ட  பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில்   இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம்.
 
இங்கு கனடாவில் சமர் காலத்தில் இரவு ஒன்பது மணிக்கும் வெயில் எறிக்கிறது. வின்ரரில் நாலு மணிக்கே இருட்டி விடுகிறது. இதனால் என் பிள்ளைகளுக்கு நடைமுறை படுத்த முடியாமல் போய்விட்டது. வீட்டில் முடங்கிக் கிடக்கிற இந்த நாட்களாவது செய்து பார்போமென்றால் புது சிக்கல் வருகிறது. சின்னவளுக்கு ஆறு மணிக்கு வயித்து குத்து வருகிறது. அல்லது சொல்லி வைத்தால் போல் சரியாக ஆறு மணியாகிறபோது ஏதாவது ஒரு வருத்தம் வந்து சேர்வதாக சொல்கிறாள்.  இப்படியாக இதை அமுல் படுத்துவதில் இப்போதும் தோற்றே போகிறேன்.
 
 
வயதும் வகுப்பும் சரியாக நினைவில்லை.அப்போது  சித்தாந்தம் ஒன்றில் தொங்கிக்கொண்டிருந்தேன். அது சமயமும் சடங்கும் பொய்யென்றது. கடவுள் மறுப்பும் கலந்திருந்தது. சரியென பட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திகொண்டேன். அப்பாவின் சின்ன வயது பழக்கமொன்று முதன் முதலாக கைவிட்டு போனது.  
 
 
பொன்னரின் ஒரு பனை கள்ளுக்கு ஊருக்குள்  வாடிக்கையாளர் வட்டம் ஒன்று இருந்தது. அப்பாவும் ஆனந்தன அண்ணாவும் சில விடுமுறை நாட்களில் அங்கு போவதுண்டு. அங்கிருந்து வந்ததும் சேர்ந்து காட்ஸ்  விளையாடுவோம்.304 இல் சரியாக  கம்மாரசு அடிப்பது எப்போதும் திரில். கொஞ்சம் பிந்தினாலும் முந்தினாலும் ஆட்டம் கவிழும். கொஞசமும் அசர முடியாது.  வைத்து கொண்டு துரும்பால் வெட்டுவதில் ஆனந்தன் அண்ணா கில்லாடி. கண்டு பிடித்தால் பொன்னரின் கள்ளு செய்த வேலையென்று  தப்பித்துக் கொள்வார்.  அரசியலும்   ஆனந்தன் அண்ணாவின் பகிடியுமென அந்த இரவுகள்  குதூகலம் நிறைந்தவை. இன்றைக்கும் சின்ன வயது ஞாபகங்களில் தொலையாமல் இருப்பவை.  
 
இரவுகள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை. மகாபொல காசு கைக்கு வருகிற பேராதனை இரவுகள் பெரும்பாலும் நீளும்.   சிலருக்கு லியோன்ஸ் ஸ்பெசலோடு  அது  முடிந்துவிடும். படிப்பு செலவுக்கு அரசாங்கம் தருகிற காசை சாப்பாட்டுக்கு செலவழிக்க கூச்சபடுகிறவர்  ஈரிகமவில் இருக்கிற  பாருக்கு போகலாம்.  எப்போதும் பிசியாக இருக்கிற அந்த குட்டி  பாரில் ராஜா என்கிற தனி ஆளே எல்லாமாக இருப்பான்.மேசையை துடைப்பது தேவைப்படுவதை  கொண்டு வந்து தருவது திரும்ப திரும்ப ஒன்றையே பேசுபவர் கதைகளை கேட்டது இப்படியாக  பம்பரமாக தனியொருவன்  சுழன்றபடி இயங்குவான்.  ராஜாவின் புண்ணியத்தில்  இருப்பதற்கு மூலையில் ஒரு மேசை கிடைக்கும்.  பிறகு ஒரு போத்திலும் சில  கிளாசும்  கொஞ்ச கடலையும் வந்து சேரும். கொஞ்சம் நேரம் செல்ல அரசியலும் இன்ன பிறவும் பேச்சில்  கலக்கும்.   இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வை காணும்வரை அந்த மேசையில்  யாரும் ஓயமாட்டார்கள். நல்ல வேளையாக  பக்கத்து மேசையில் இருப்பர்களுக்கு தமிழ் தெரியாமல் இருப்பதால் எந்த அசம்பாவிதமும்  நடப்பதில்லை . அப்படி ஏதேனும் சிக்கல் வந்தால் ராஜா ஓடி வருவான். கம்பஸ் கட்டிய என்று சமாளித்து பஸ் ஏத்தி
விடுவான்.
 
அக்பருக்கு வந்து சேர இரவு பன்னிரண்டு  மணியை தாண்டி இருக்கும். ரூமுக்குள்  கச்சேரி தொடங்கும். ரேடியோவில் சினிமா பாடல் அதிரும். சிவமணிகள் மேசையில் திறமையை காட்டுவார்கள். மற்றவர்கள் sp யாகவும்  ஜெசுதாசாகவும் மாறுவார்கள். அந்த இரவு முடிகிற நேரம் யாருக்கும் தெரியாது.
 
இப்போது அப்பா இல்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா தெரியாது.
இரவுகள் முந்தியும் பிந்தியுமென்றாலும் இன்னும்  வருகிறது.
 
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகங்கள் எப்பொழுதும் அலாதியானவை. அவை என்றும் மகிழ்ச்சியான மன நிறவையும் சில ஞாபகங்கள் கண்ணீரையும் தருபவை. 

அப்பாவின் கடவுள் நம்பிக்கையை நீங்கள் கைவிட்டது உங்கள் தேடல் தெளிவு.அதை உங்கள் அப்பா இப்போது இருந்தால் புரிந்து கொள்வார். 

உங்கள் வீட்டு சட்டம் போல கால் முகம் கழுவி சாமிகும்பிட்டு படித்த நாட்கள் ஞாபகம் வந்து போகிறது. 

அடுத்த தலைமுறையின் உங்கள் பிள்ளைகளுக்கு ஊரில் நீங்கள் படித்தது போல பின்னேரம் இருட்டு வரத் தொடங்க இருத்தி வைத்து படிப்பிப்பது சாத்தியம் இல்லை. 

இங்கு வளரும் எங்கள் பிள்ளைகள் புத்திசாலிகள். அவர்கள் கட்டாயத்தின் பெயரில் எதையும் செய்ய வரமாட்டார்கள். அவர்கள் தாங்களாக படிக்கும் கல்விமுறையோடு வளர்க்கிறார்கள்.  
அவர்களின் ரசனை எதுவோ அது சார்ந்து நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன் என்று தைரியத்தை கொடுங்கள். அவர்கள் நன்றாகவே வளருவார்கள் வருவார்கள்.

பி.கு - நீண்ட நாட்களின் பிறகு இன்று யாழ் வாசிக்கிறேன். அதில் உங்கள் ஞாபகங்களை வாசித்தேன். 

ஞாபகங்களை தொடருங்கள்.

  • 1 month later...
  • தொடங்கியவர்

கருத்துக்கும் ஊக்கப்படுத்துவதட்கும் நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

  • கருத்துக்கள உறவுகள்

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
On 13/8/2020 at 11:55, suvy said:

பழைய ஞாபகங்களை மீட்டும் நல்ல சம்பவங்கள் பிரி.....!😁

நன்றி suvy 

On 14/8/2020 at 17:56, கிருபன் said:

சில ஒழுக்கங்கள், சிந்தனைகள் பெற்றோரிடம் இருந்துதான் வருகின்றது.  ஆனால் அவற்றில் இப்போதும் கைக்கொள்வதை பிள்ளைகளுக்குக் கடத்துவது இலகு அல்ல. அவர்களாகவே புரிந்து ஏற்றுக்கொள்ளும்போதுதான் வழக்கத்தில் கொண்டுவருவார்கள்.

வீட்டில் ஒருபோதும் என்னை படியென்று சொன்னதில்லை, ஒரேயொரு தடவையைத் தவிர. அப்போது இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். இந்திய இராணுவம் முதன்முதலாக எமது ஊரை சுற்றிவளைக்கும்போது அம்மா மேசையில் இருந்து படி என்றார். ஆனால் அப்போதும் படிக்கவில்லை. வந்த இராணுவமும் சின்னப்பொடியன் என்று ஏதும் கேட்கவுமில்லை.

304 விளையாட்டை ஒபரேசன் லிபரேசன் காலத்தில்தான் முறையாகப் பழகியது. ஆனாலும் கொஞ்சம் கவனம் சிதறினாலும் கம்மாஸ் பிழையாகிவிடும். சிலர் மிகவும் இலாவகமாக எண்ணி விளையாடுவார்கள்! அந்தளவு expert ஆக இன்னமும் வரவில்லை என்ற கவலை உள்ளது.

 

நன்றி   கிருபன் .

சில நல்ல  பழக்கங்களை குடும்பங்களில்  சம்பிரதாயங்களாக கடத்தி இருக்கிறார்கள் .
கடவுள் மறுப்பின் பெயரில் அவற்றையும் சேர்த்தே சிதைக்கிறோமோ என்கிற நெருடல் இருக்கிறது .
அவ்வளவுதான் .
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.