Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் எமக்கு இல்லை: சரத் பொன்சேகா.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன் 30-05-2007 07:04 மணி தமிழீழம் [மயூரன்]

வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை - இராணுவத் தளபதி சரத்பொன்சேகா

வடக்கைக் கைப்பற்ற ஜயசிக்குறு போன்று பாரிய படைநடவடிக்கையை ஒன்றை மேற்கொள்ளும் திட்டம் தமக்கு இல்லை என சிறீலங்காவுக்கான தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றி பின்னர் வடக்கில் புலிகளைப் பலவீனமடையச் செய்து அதன்பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு இழுப்பதே தமது மூலோபாயம் என சரத்பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன. இதேநேரம் வடக்கைக் கைப்பற்றும் நோக்கம் தமக்கு இல்லை. வடக்கில் புலிகளை பலவீனப்படுத்தி அவர்களை பேச்சுக்கு இழுபதே எங்களது நோக்கம் எனவும் இதன்மூலம் பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுத்து அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதே இனமோதல்களுக்கு சரியான தீர்வு என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ பலத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை இது சாத்தியமாகாது. எமது படைகளும் அவர்களோடு சேர்ந்த இயங்கும் படைகளும் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிழக்கில் பெருமளவு விடுதலைப் புலிகள் வெளியேறியமை வெற்றியாகக் கருதமுடியாது. அங்கு மக்கள் இயல்புவாழ்வு வாழ்ந்து அவர்களுக்கு அரசியல் தீர்வு எட்டும்போதே வெற்றியாகக் கருதமுடியும். அரசியல் தீர்வு எட்டப்படதா பட்சத்தில் யுத்தம் மேலும் இரு தசாப்தங்களுக்கு நீடித்துச் செல்லும் எனவும் சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி

பதிவு

சரத்பொன்சேகா என்ன நாளுக்கொரு கதை சொல்லுறார்புலிகள் பலவீனப்பட்டிட்டினம் எண்டார் இப்ப வேற கதை சொல்லுறார்

ஓ இவர் என்னத்தைத்தான் சொன்னாலும் புலிகள் பலவீனமான இடத்தில் ஓங்கி அடிக்கப்போவது உறுதி

கிழக்கில் விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்ற 5 தொடக்கம் 6 மாதங்கள் தேவைப்படுகின்றன....

பொன்ஸ் தற்போது பின்வாங்கத் தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. முன்பு கிழமைக் கணக்கில் கதை சொன்னவன் தற்போது மாதங்களாக கணக்கு காட்டத் தொடங்கியுள்ளான். விரைவில் இது வருடங்களாக மாறும்....

ஒரு காலத்தில் இவர்கள்தான் ஆறு மாதத்தில் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிப்போம் என்று கூறியவர்கள்...

ஆமை தற்போது கழுத்தை நீட்டி வெலியுகத்தை பார்க்கின்றது... விரைவில் பொன்ஸ் ஓய்வு பெறப்போகின்றான் போல தெரிகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

இயலாது என்று சொல்ல சரத் பொன்னுவுக்கு வெட்கம் போலும்.ஏதோ இருக்கிற காலம் வரைக்கும் இதோ புலிகளை அழிக்கிறேன் பார் என்று ஒரு பம்மாத்து விட்டுக்கொண்டு,இருக்கின்றதை சுருட்டிக்கொண்டு எங்காவது உயர்ஸ்தானிகராக பதவியை எடுத்துக் கொண்டு மாற சரி.இவரை போல தமிழ் மக்கள் எத்தனை பேரை கண்டு விட்டார்கள்.

.

Edited by கர்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.