Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: ஒன்றிணைந்த போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை பேரவை அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி செயலணி இனவழிப்பின் புதிய பரிணாமம்: ஒன்றிணைந்த போராட்டத்திற்கு தமிழர் மரபுரிமை பேரவை அழைப்பு

(ஆர்.ராம்)

கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் புதிய பரிணாமம் என்று தெரிவித்து தமிழர் மரபுரிமை பேரவை தனது கடுமையான கண்டனங்களையும் வெளியிட்டுள்ளது.

தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம் தான் சிங்கள பௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியுமெனக் குறிப்பிட்டுள்ள பேரவை, வரலாற்றுத்தவறுகளுக்கு இடமளிக்காது ஒன்றிணைந்த போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பேரவை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கிழக்கில் தொல்லியல் மரபுரிமையை பாதுகாப்பதற்காக 11 பேர் கொண்ட செயலணியை நியமித்துள்ளார்.

asa.jpg

இலங்கையின் இச்செயலணி பல்லினத்தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிங்கள அரசின் சிங்கள- பௌத்தமயமாக்கல் (வடக்கு-கிழக்கை) அரசியல் நிகழ்ச்சி நிரலின் நீட்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியான வடக்கு-கிழக்கை துண்டாடி, தமிழ்த்தேச தாயக கோட்பாட்டை சிதைக்கும் அரசியல் செயற்பாடுகளை ஏற்னவே சிங்கள அரசு காலம் காலமாக வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி தமிழர் நிலத்தை அபகரித்து வருகின்றது. தமிழர் நிலத்தை அபகரிப்பதோடல்லாமல் தமிழர் மரபுரிமைகளை அழித்து திரிவுபடுத்தி சிங்கள-பௌத்த வரலாற்றியலையும் பூர்வீகத்தையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது எமக்குத் தெரியாததல்ல.

கடந்த வருடம் பதவியேற்ற புதிய அரசு சிங்கள-பௌத்த அடையாளத்தை இலங்கையின் அடையாளமாக ஊக்குவிப்பதில் தீவிர அடிப்படைவாதத்தை அகவயப்படுத்தி பெரும்பான்மை ஜனநாயகப் பொறிமுறையைக் கருவியாக பயன்படுத்தி வருகின்றது. ஈழத்தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை தேச நீக்கம் செய்வதில் தொல்லியல் திணைக்களத்தினதும் வன பரிபாலன திணைக்களத்தினதும் பங்களிப்பு முகக்கியமாக இருக்கினறது.

இச்செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அச்செயலணியின் விடய நோக்கத்தை மாற்றாது என்பதோடு தமிழ், முஸ்லிம் நியமனங்கள் பெரும்பான்மை சனநாயகத்தை வலுப்படுத்தும் செயற்பாடாக அமைந்துவிடும் என்பதையும்  நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் ஓரிரு பிரதிநிதித்துவங்கள் பெரும்பான்மை சனநாயகத்தின் அடிப்டையை ஒரு போதும் மாற்றப்போவதில்லை.

இச்செயலணியின் உறுப்பினர்களில் ஒருவரான பனமூரே திலகவன்சதேரர் வடக்கு-கிழக்கின் பிரதான பௌத்த தேரராக உள்ளார். கிழக்கு மாகாணத்தை சிங்கள-பௌத்த மயமாக்குவதில் அவருடைய பங்கு முக்கியமானது. திருகோணமலையில் புல்மோட்டை தொடங்கி அம்பாறை பொத்துவில் வரை பௌத்த விகாரைகள் அமைப்பதோடு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டவர்.

இச்செயலணியின் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது இராணுவ மயமாக்கம் அரச நிறுவனத்தின் அலகுகளில் ஆழ ஊடுருவியிருப்பதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.

இவ்வாறிருக்க, தமிழ், முஸ்லிம் உறவைப் பிரிப்பதற்கு சிங்கள அரசுகள் பல்வேறு தந்திரோபாயங்களை கையாண்டன, வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் பரஸ்பர உறவு இரு இனத்தின் இருப்புக்கும் அத்தியாவசியமானது. தமிழ்த் தேசியம் முஸ்லிம்களை புறந்தள்ளி கட்டமைக்கப்படவில்லை என்பது வெள்ளிடைமலை.

வடக்கு-கிழக்கை சிங்கள மயமாக்குவது முஸ்லிம்களின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கும். தமிழ், முஸ்லிம் உறவை பலமாக மீளக்கட்டியெழுப்புவதன் மூலம்தான் சிங்களபௌத்த ஏகாதிபத்திய தேசியவாதத்திற்கெதிரான எதிர்ப்பை வடக்கு-கிழக்கில் காட்ட முடியும்.

இதுதொடர்பில் முஸ்லிம்களை தமிழர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அரச நிகழ்ச்சி நிரலுக்குள் முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டுவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும். இன்னொரு தந்தோராபாயத்தை சிங்கள அரசு ஈழத்தமிழர் மீதும் முஸ்லிம்கள் மீதும் கட்டவிழ்த்திருக்கின்ற நிலையில், வரலாற்றுத் தவறுகளுக்கு மீண்டும் இடமளிக்காது இதற்கு எதிராக கூட்டாக ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுகின்றோம்.

 

https://www.virakesari.lk/article/83940

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீகப் பிரதேசமே! வரலாறுகள் தெரியாது உளறுகிறார் எல்லாவல மேத்தானந்த தேரர்.

nishanthan.jpg

 
ஜனாதிபதி அவர்களினால் உருவாக்கப்பட்ட கிழக்கு  தொல்லியல் பாதுகாப்பு எனும் தனிச் சிங்களக்வர்கள் 11 பேரைக் கொண்ட செயலணியில் ஒருவரான எல்லாவல மேத்தானந்த தேரர் அவர்கள் தமிழர்களின் வரலாறுகள் தெரியாமல் ஊடகங்களுக்கு தவறாக உளருகின்றார் தேரரின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றேன்.
 
இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் அன்று தொட்டு தமிழரின் பூர்வீக தாயகம் என்பது வரலாற்று உண்மை இதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
 
 பௌத்தத்திற்கு முன்னுரிமை வேண்டும் என்பதற்காக தமிழர் வரலாறுகளை மறைக்க நினைப்பது நியாயமற்றது இதன் அடிப்படையிலேதான் கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் முற்று முழுதாக கிழக்கு மாகாணத்தை கபளிகரம் செய்ய நினைக்கும் பௌத்த பேரினவாதிகளையும் இவர்களுக்கு உடந்தையாக செயற்படும்  நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய உட்பட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு செயலணியில் உள்ள அனைவரையும் கடுமையாக எதிர்ப்பதோடு ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.
 
வடகிழக்கு தமிழரின் பூர்வீகம் என்பது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் கோஷம் அல்ல அது ஒட்டு மொத்த தமிழர்களின் மரபுசார் வாழ்வியல் பிரதேசமாகும் இப் பிரதேசத்தை தமிழர்களாகிய எங்களிடமிருந்து சிறிது சிறிதாக பலவழிகளாலும் கபளிகரம் செய்த போது இதை எதிர்த்தும், கண்டித்தும் பல தமிழர்களும், அரசியல்வாதிகளும்  அகிம்சை ரீதியாக வீதிகளில் இறங்கி போராடினார்கள் ஆனால் சிங்கள பேரினவாதிகள் இதை எல்லாம் ஏற்க மறுத்து தங்களது அராஜகங்களை மேலும் அதிகரித்து கொண்டு சென்றதால் தான் மாற்றுவழியாக ஆயுத ரீதியில் தடுத்து நிறுத்திய அன்றைய இளைஞன் தான் இன்றைய எங்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
 
தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தார் என்னும் எல்லாவல மேத்தானந்த தேரரின் கருத்தை அடியோடு மறுத்து மாறாக தேசிய தலைவர் முன்னெடுத்த போராட்டமானது சிங்கள பேரினவாத சக்திகளிடம் இருந்து எம் மக்களையும், எம் உரிமைகளையும், எம் மண்ணையும் பாதுகாத்து மீட்டெடுக்கும் ஒரு உன்னதமான விடுதலைப் போராட்டமேயன்றி தேரர் கூறுவது போன்று பயங்கரவாத செயற்பாடு அல்ல தேரர் அவர்கள் தேவையின்றி உளருவதை நிறுத்த வேண்டும்.
 
ஆகவே தற்சமயம் மீண்டும் கிழக்கை கபளிகரம் செய்வதற்காக  ஜனாதிபதி அவர்களால் தனிச் சிங்களவர்களை வைத்து மட்டும் உருவாக்கப்பட்ட கிழக்கு தொல்லியல் பாதுகாப்பு செயலணி உடனடியாக கலைக்கப்பட வேண்டும் அல்லது இந்த செயலணியில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் இல்லையல் எதிர்வரும் காலங்களில் இச் செயலணி கலைக்கப்படும் வரை இதற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தொடரும் என்பதை நாட்டின் ஜனாதிபதி அவர்களுக்கும் செயலணியில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
 
நன்றி
 
எஸ்.நிஷாந்தன்
தலைவர்
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.