Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி…

download-11.jpg?189db0&189db0

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தூதுவர், இலங்கை நீண்ட ஜனநாயக வரலாற்றை கொண்டது என்றும் இலங்கை தனது ஜனநாயக கட்டமைப்பினை பலப்படுத்துவது மற்றும் ஆழமாக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்த ஸ்தாபனங்களிற்குள் எதனை உள்வாங்கவேண்டும் என தெரிவிப்பது அமெரிக்காவின் பணி என தான் கருதவில்லை என தெரிவித்துள்ள தூதுவர், தேர்தலிற்கு பின்னர் அரசமைப்பிற்கான 19 வது திருத்தம் செயல் இழக்கச்செய்யப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் 19வது திருத்தத்தின் தகுதிகளை பரிசீலிக்கவேண்டும். அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்தாபனங்களான மனித உரிமை ஆணைக்குழு, காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் போன்றவை குறித்தும் சிந்திக்கவேண்டும். ஜனநாயகத்திற்கு எவை பங்களிப்பு செய்கின்றன என்பது குறித்தும் இலங்கை மக்கள் சிந்திக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மிலேனியம் சவால் உடன்படிக்கை குறித்து தீர்மானம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

https://newuthayan.com/தொல்பொருள்-செயலணி-குறித்/

3 hours ago, உடையார் said:

இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவங்களையும் சேர்த்தா எப்பிடி பொய்க்கதைகளை எழுத  முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் ஜனாதிபதி செயலணி எதற்கு, மக்கள் எழுப்புகின்ற சந்தேகங்கள் தனக்கும் இருப்பதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

alaina-teplitz.jpg

கிழக்கு மாகாண தொல்பொருள் விடயங்களை ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட செயலணி மக்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பன்முகத்தன்மை அற்றதாகவும் தெரிகின்றது.

ஏன் இவ்வாறு ஒரு பகுதிக்கு மட்டும் தொல்பொருள் செயலணி நியமிக்கப்பட வேண்டும். உன்ற கேள்வி எனக்குள்ளும் எழுகின்றது.

ஜனநாயகத்திற்கு எப்போதும் சிவில் நிர்வாகமே முக்கியத்துவமிக்கதாக அமையும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையானது 30-1 ஜெனீவா பிரேரணையிலிருந்து விலகினாலும் மனித உரிமை மீறலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொறுப்புக்கூறல் மூலம் நீதியை நிலைநாட்டுவதில் தனது கடமையை நிறைவேற்றும் உன்று நம்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில்  எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கைக்கு வந்த தூதரகப் பணியாளர் தொடர்பான தவறான தகவல், தூதரகத்துக்கு அருகில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் மீதான பொலிஸ் நடவடிக்கை என்பன, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவைப் பாதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்கத் தூதரகப் பணியாளர் தொடர்பாக ஊடகத்தில் வெளியான சில அறிக்கைகள் தவறாக முன்னெடுக்கப்பட்டவை என்றும் கூறிய அவர், குறித்த பணியாளர் வருவதற்கு முன்னர், இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்ட நடைமுறையை, தூதரகம் பின்பற்றியதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகே நடைபெறவிருந்த அண்மைய ஆர்ப்பாட்டத்தைத் தடை செய்யுமாறு, அமெரிக்கத் தூதரகம் கோரவில்லை எனவும் அவர் கூறினார். 

அத்துடன் எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் விரைவில் இணக்கத்திற்கு வர முயற்சிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/84041

சீன ஆதிக்கம். அதை அமெரிக்க நாடு கட்டுப்படுத்த  விரும்புகின்றது. 

இந்தியா பொருளாதாரா ரீதியாக பலம் பெறுவதை அமெரிக்க விரும்புகின்றது. வங்காள விரிகுடா ஊடாக கப்பல் போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும். 

இந்தியாவின் வளர்ச்சியை சீனா மறுக்கின்றது, ஒரு ஆசியாவில் ஒரு வல்லரசு மட்டுமே என்கின்றது சீனா. இலங்கையின் கிழக்கு கடற்கரையோரமாக இந்தியாவின் கனவிற்கு தடைகளை போடுகிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.