Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படமாட்டாது - கெஹலிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

 

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான  தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொது காரணிகளின் நிமித்தம் தீர்வு  வழங்கப்படும். 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம்  புதிய அரசாங்கத்தில் பரிசீலனை  செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய  அரசாங்கத்தில் உரிமைக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



keheliya_rambukwella.jpg

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமோக வெற்றிப் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும். ஆளும் தரப்பினர் பெரும்பான்மை  பலத்தை பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கூட்டமைப்பினர் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் கருத்தும்  வரவேற்கத்தக்கது.

அரசியலமைப்பு திருத்தம், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு   ஆகியவற்றை குறிப்பிட்டக் கொண்டு கூட்டமைப்பினர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள் . தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு , கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூட்டமைப்பினர் எக்காலங்களிலும் உரிய நடவடிக்கைகளை  முன்னெடுக்கவில்லை.  இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தினை ஒரு  உதாரணமாக குறிப்பிடலாம்.

முரண்பாடுகளை  தோற்றுவிக்கும்  காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  அரசியலமைப்பினை திருத்தவும், நாட்டின்  இறையாண்மைக்கு  பங்கம் விளைவிக்கும் விதத்தில் தமிழ் மக்களுக்கான தீர்வையும் கூட்டமைப்பினர் கோருகிறார்கள். இதனை ஒருபோதும்   செயற்படுத்த முடியாது. அரசியலமைப்பின் 19வது திருத்தம் திருத்தியமைக்கப்பட வேண்டும்,  அல்லது  முழுமையாக மாற்றியமைக்கப்பட  வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பின் 19வது திருத்தம்  தொடர்பில் எழுந்துள்ள  யோசனைகள் முழுமையாக பரிசீலனை  செய்யப்படும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு  தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். இந்த தீர்வு அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டதாக அமையாது. அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளும் விதத்தில்  தீர்வு  முன்வைக்கப்படும்.

புதிய அரசாங்கம் அனைத்து இன மக்களையும்  ஒன்றுப்படுத்தியதாக அமைய வேண்டும் எனவும், அதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்துமாறும் ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை  வழங்கியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் உரிமை கொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு  என்றார்.

https://www.virakesari.lk/article/84127

  • கருத்துக்கள உறவுகள்

        14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.
        15 சந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மகாயுகங்கள்.

* பிரம்மனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.