Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா

 

 

  • Replies 2.9k
  • Views 225.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா
அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா
கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா
மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா!

கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!
கணபதி ராஜா வந்தாராம்
மணையில் இன்றே பொன்னாளாம்!

ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா,
பீமா சண்ட விநாயகா,
தேகரி விநாயகா,
உத்தண்ட விநாயகா,
பாசவாணி விநாயகா,
கர்ப விநாயகா,
சித்தி விநாயகா,
லம்போதர விநாயகா,
பூர்ணதந்த விநாயகா,
சால கடன்கட விநாயகா, புஷ்பாண்ட விநாயகா,
கொண்ட விநாயகா,
வேதா வேஷ விநாயகா, ராயபுத்திர விநாயகா,
பிரணவ விநாயகா,

திசை ஆதி கிழக்கின் முகம் நோக்கி அமர்ந்த சூர்யா சந்திர கோடி பிரகாச ஓம் வல்லார கணபதி,
கபில கணபதி,
துண்டி கணபதி,
வக்ரதுண்ட கணபதி,
மகோதக கணபதி,
ஹேரம்ப கணபதி,
கணநாத கணபதி, விக்னேஷ கணபதி,
விக்னஹார கணபதி, பாலாசந்திர கணபதி,
சுற்பகர்ண கணபதி,
ஜெஷ்டராஜா கணபதி,
கஜானன கணபதி,
மகோத்கட கணபதி,

கிழக்கு நோக்கி அமர்ந்த விநாயகா! என் வழக்கு என்று முடியும் வந்தருள்வாய்
தும்பிக்கை ஆண்டவா!

வெண் பஞ்சில் உருட்டி விநாயகனுக்கொரு மாலை இடுகின்றார் கரு மணியை எடுத்து கருணை பொங்கும் விழியாய் வைக்கின்றார்
பொறிநூலும் இட்டே களி மண் சிலையில் கணபதியை கண்டார்
திரு நீரும் பூசி குடையும் வைத்து குல குரு ஆக்குகின்றார்!

கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!
கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!

ஓம் வக்ர துண்ட விநாயக ஏக தந்த விநாயகா!
திருமுக விநாயகா பஞ்சாஷ்ச்ச விநாயகா!
ஹேரம்ப விநாயகா வரத விநாயகா!
மோதக விநாயகா!
அபயத விநாயகா!
சிம்ஹதுண்ட விநாயகா!
கூநிதாக்ஷ விநாயகா!
சிப்ர பிரகாச விநாயகா! சிந்தாமணி விநாயகா!
தந்த ஹஸ்த விநாயகா! விசின்ட்டில விநாயகா!
உர்தண்டமுண்ட விநாயகா!

என் குற்ற குறையோடு தெற்கு முகம் நோக்கி அமர்ந்த
சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் ஞாநேச கணபதி,
கர்மவ கணபதி,
யோகேச கணபதி,
சித்தி வித்தி கணபதி,
சிந்தாமணி கணபதி,
புத்தீச கணபதி,
மஹா கணபதி,
பூர்நானந்த கணபதி,
லக்ஷ்மீச கணபதி,
சகதேச கணபதி,
ஏகதந்த கணபதி,
லம்போதர கணபதி,
தூம்ப்ரவர்ண கணபதி,
சிப்ர பிரசாத கணபதி,

தெற்கு திசை நோக்கி அருளும் விநாயகா! உனக்கு அர்ச்சனை முடித்து அபிஷேகம் ஆகிறது
மனம் குளிர்வாய் கஜராஜ கருணாகரா!

படையல் வைத்தே பூஜை செய்தோம் எங்கள் கணநாதா
நடு நடுவே எங்கள் குறையும் சொன்னோம் காதில் கேட்கிறதா
உன் மூஷிகமும் என் மனதை போலே சின்னஞ்சிரிதல்லவோ
அது கடவுளை தாங்குது எந்தன் மனமோ பாவம் சுமந்ததுவோ!

கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!
கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!

ஓம் சூலதந்த விநாயகா,
களிப்ரிய விநாயகா,
சதுர்தந்த விநாயகா,
த்யிமுக விநாயகா,
ஜ்யேஷ்ட விநாயகா,
கஜ விநாயகா,
கால விநாயகா,
நாகேச விநாயகா,
மணிகர்ணிக விநாயகா,
ஆஷா விநாயகா,
ஸ்ருஷ்டி விநாயகா,
யக்ஷ விநாயகா,
கஜகர்ண விநாயகா,
சித்ரகண்டா விநாயகா,
மங்கள விநாயகா,
மித்ர விநாயகா.

ஆழிசூழ் உலகில் மேற்க்கை நோக்கி அமர்ந்த சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் விநாயகாய கணபதி
விக்ட கணபதி,
ஆசபூர்னாக கணபதி,
சூம்ப்ரதேச கணபதி,
பிரமோத கணபதி,
மோத கணபதி,
சுமுக கணபதி,
துர்முக கணபதி,
வாசவாணி கணபதி,
பரேச கணபதி,
லாபேச கணபதி,
தரநீதர கணபதி,
மங்களேச கணபதி,
மூஷிக த்வஜ கணபதி.

மேற்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா! எமை காத்தருள்வாய்
மதகரிமுக கணநாயகா!

பாரதம் எழுதிய பண்டிதனுக்கு நாமாவளி சொன்னார் அந்த மூவுலகத்தை காப்பவனிங்கே மூன்றடி தானிருந்தார் வெண் கட்டு உடுத்தி குட்டி கொண்டு தொழுதோம் கணபதியே!
இப்பிறவி கடலின் ஆழம் அறிய கரைச்சேர்தருள்வாயே!

கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!
கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!

ஓம் மோத விநாயகா!
பிரமோத விநாயகா!
சுமுக விநாயகா!
துர்முக விநாயகா!
கணநாத விநாயகா!
ஞான விநாயகா!
பிராண விநாயகா!
அவிமுக்த விநாயகா!

ஐஸ்வர்யா மழை பொழியும் வடக்கு திக்கு நோக்கி அமர்ந்த
சூர்ய சந்திர கோடி பிரகாச ஓம் மயுரப்ரஜ கணபதி
ராஜேச கணபதி
ப்ருத்யுமேச கணபதி
ஒம்காரேச கணபதி
குணேச கணபதி
வரத  கணபதி
சித்தி புத்திப கணபதி
கணேச கணபதி
சதுர்பாஹு கணபதி
த்ரிநேத்திர கணபதி
கஜமஸ்த கணபதி
நிதிப கணபதி
கஜகர்ண கணபதி
சிந்தாமணி கணபதி

வடக்கு முகம் நோக்கி அமர்ந்த விநாயகா எமக்கென்று இருக்கும் ஓர் கதியும் நீதானே உனக்கு கோடி நமஸ்காரம் நாமாவளி நிவேத்யம் அர்ப்பணம் சமர்ப்பணம்!

ஒரு ஆண்டுக்கொரு முறை வந்தருள் புரியும் மத்திமுகத்தோனே!
நீ மீண்டும் மீண்டும் எழுந்தருள்வாயே எங்கள் மனையினிலே!

ஒரு சிறு குறைகள் செய்திருந்தாலும் மன்னிதருள்வாயே!
வந்தேன் இருந்தேன் சந்தோஷம் என அருள் மழை போழிவாயே!

கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!
கணபதி ராஜா வந்தாராம்
மனையில் இன்றே பொன்னாளாம்!

ஶ்ரீ கணேஷா போற்றி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறையேகன் நாயன் தூதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோனியாரே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைத்தான் பாடவந்தேன் வண்ண மயில் வேல் முருகா உண்னைக்கண்டு மறந்துவிட்டேன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

ஓம் ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம்
முரளிமோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்!

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சந்தியா பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரட்சகம் சுவாமி தர்ம தத்துவம்

ராக பந்தனம் சுவாமி ராச லீலகம்

கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்

ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் ஹரி ஓம்
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
ஓம் ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் 
(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்

பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்

ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
 
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உதயமே நபி உதயமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க பிரசன்னத்தில் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று தமிழ் வாங்க நாலு பொருள் தந்து 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
தெய்வத்தின் கட்டளை ஆறு 

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி 
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும் 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் 
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானில் தவழும் வெண்ணிலவே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவிக்கு புகலிடம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான் 
வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..

நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்..
(கீதை சொன்ன கண்ணன்)


அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..
(கீதை சொன்ன கண்ணன்)


பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..
(கீதை சொன்ன கண்ணன்)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி

அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி

ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

(ஸ்ரீசக்ர)

 

(புன்னாகவராளி ராகம்)

பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும்

பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்

உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்

ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

 

(நாதநாமக்ரியை ராகம்)

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்

உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்

நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

 

(சிந்து பைரவி ராகம்)

துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்

தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா….அகிலாண்டேஸ்வரி

(ஸ்ரீசக்ர)

 

On 23/6/2020 at 06:08, உடையார் said:

இறைவனிடம் கையேந்துங்கள் 

 

என்ன ஒரு அருமையான பாடல்! எனக்கு மிகச் சிறு வயதில் என் தாயாரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடல்களில் ஒன்று.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனிய நபிகள் ஓர் தொடர் காவியம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவா நீ ஒரு சங்கீதம்
அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம்

உன் கரம் தவழும் திருயாழிசை
அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

இறைவா நீ ஒரு சங்கீதம்
அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம்

புல்லாங்குழலென தனித்திருந்தேன்
அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய்
புல்லாங்குழலென தனித்திருந்தேன்
அதில் இசையாய் என் மனம் புகுந்திடுவாய்

பாவியென் நெஞ்சமும் துயில் கலையும்
புதுப் பாடலால் உன் அகம் இணைந்திடுமே

எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
எனை இங்கு திரியாக ஏற்றாயோ இறைவா
காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா
வாராயோ இறைவா

இறைவா நீ ஒரு சங்கீதம்
அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம்

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும்
நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய்
கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும்
நீ தோளினில் சுமந்தே வழிநடந்தாய்

நாதா உன் வார்த்தைகள் வானமுதம்
எனை நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்

தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில்
விடிவேது மண்ணில்

இறைவா நீ ஒரு சங்கீதம்
அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம்

உன் கரம் தவழும் திருயாழிசை
அதில் என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

இறைவா நீ ஒரு சங்கீதம்
அதில் இணைந்தே பாடிடும் என் கீதம்
இறைவா நீ ஒரு சங்கீதம்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா கண்ணா ஓடி வா சின்ன கண்ணா ஓடி வா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொன்னால் முடிந்திடுமோ சொல்வதென்றால் இயன்றிடுமோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பென்ற நதி மீது படகாகு 
அறியாத பேரின்ப கரை சேர்க்கும் 
அன்பென்ற வில்லின் முன் இலக்காகு 
அகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும் - 2

1. வெயில் காய்ந்து நிழல் ஈயும் மரங்கள் போல் 
துன்பங்கள் மறைத்தே இன்முகம் காட்டு 
உயிர் காக்கும் காற்றும் கண் மறைதல் போல் 
தனைக் காட்டும் குணம் நீக்கி நலம் நாட்டு 
நெருப்புக்கு வலுவூட்டும் காற்றைப் போல் 
பணிவேகம் தனில் இன்னும் பலம் ஊட்டு - 2 
அன்புக்கு ஈர்க்கின்ற மனம் உண்டு 
இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு - 2

2. மலர்வாசம் தரும் பூவில் இழப்பில்லை 
மாண்பில் நீ மறைந்தாலும் குறைவில்லை 
தானே தன் கனி உண்ணும் செடியில்லை 
தனக்கென்று வாழ்ந்தால் விண் விடிவில்லை 
இளகாத மனம் செய்த பணியில்லை 
இரங்காத இதயத்தில் இறையில்லை - 2 
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும் 
அன்புள்ளம் இறை தந்த வரமாகும் - 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே

சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே—ப்ரபோ

ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள சொரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா—ப்ரபோ

தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உள்ளே 
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே—ப்ரபோ

ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா–ப்ரபோ

பார்வதி பாலா அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரவண விநாயக
பாவன பரிமள சரணா–ப்ரபோ

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழை பாலகன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின்

1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ..

2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ..

3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.