Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் சாவு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை மரணம் 🙏

 

  • Replies 82
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, உடையார் said:

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை மரணம் 🙏

இயற்கையே... அவரை, தண்டித்து விட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

இயற்கையே... அவரை, தண்டித்து விட்டது. 

ஆமா

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்

சாத்தான்குளம் சம்பவம்: தந்தை - மகன் உடலில் 30 இடங்களில் காயங்கள்; நீதிபதி தகவல்

மதுரை, 

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கில் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டுமான வி.கே.சுக்லா வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜரானார்.

அவர், “மனுதாரர்களில் முருகன் என்பவர் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோருக்கு எதிரான புகாரில் கையெழுத்து போடுமாறு உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள் என்று தவறான தகவலை தெரிவித்துள்ளார். இதேபோல் முத்துராஜும் இந்த புகாரில் கையெழுத்து போட்டு உள்ளார். அவரும் ஜெயராஜ்-பென்னிக்சை தாக்கியுள்ளார். மற்றொரு போலீஸ்காரரான தாமஸ் பிரான்சிசும் ஜெயராஜ்-பென்னிக்சை மற்றவர்கள் தாக்கும்போது, அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 38 பேரிடம் நாங்கள் விசாரணை நடத்தி உள்ளோம். ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ்காரர்கள் தாக்கியதற்கான முகாந்திரம் உள்ளது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது“ என்றார்.

பின்னர் ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகிய இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வி.கே.சுக்லா நீதிபதியிடம் தாக்கல் செய்தார்.

ஜெயராஜின் உடலில் 17-க்கும் மேற்பட்ட காயங்களும், பென்னிக்ஸ் உடலில் 13 காயங்களும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரியாத நிறைய காயங்களும் உள்ளதாகவும், அதிக அளவில் ரத்தம் வெளியேறி இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து ஜெயராஜின் மனைவி செல்வராணி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் லஜபதிராய், “மனுதாரர்கள் 3 பேரும் ஜெயராஜ்-பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்களில் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கும்பட்சத்தில் சாட்சிகளை மிரட்டுவார்கள். தடயங்களை அழிப்பார்கள்“ என எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, “மனுதாரர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சிகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது.

சி.பி.ஐ. விசாரணை முடிவடைந்து முழுமையான அறிக்கை தாக்கல் செய்த பின்னர் மனுதாரர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும்“ என்றார்.

இதையடுத்து மனுக்களை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.dailythanthi.com/News/State/2020/08/26092019/Sathankulam-incident-Father--son-injured-in-30-places.vpf

 

 

  • 4 weeks later...

ஹரி நாடார் CBI அலுவலகம் முற்றுகை போராட்டம்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி சென்றனர். தற்போது இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல்  அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக  குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26153819/Sathankulam-fatherson-murder-case-CBI-files-chargesheet.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்களை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவு: காவலர்கள் ஜாமீன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

sathankulam-dual-murder-case-hc-asks-to-file-evidence-documentation  
 

மதுரை

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் உள்ளிட்ட சாட்சிகளின் வாக்குமூலத்தைத் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்ஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், காவலர் முருகன் அளித்த வாக்குமூலத்தில் தந்தை, மகன் இருவரையும் சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸாருடன் சேர்ந்து நள்ளிரவுக்கு மேலும் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸார் குறித்து விசாரிக்கவில்லை. காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் தூண்டுதலின் பேரில் சம்பவம் நடைபெற்றதாக சிபிஐ கூறியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் குறித்து விசாரிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கும் போது, காரணம் குறித்து ஆராய தேவையில்லை. இந்த வழக்கில் குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு சாட்சிகள் கலைக்கப்பட்டுவிடக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது என்றார்.

சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரும் ஜெயராஜ், பென்னிக்ஸை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள்.

வழக்கு தொடர்பாக இதுவரை 105 சாட்சிகளை விசாரித்துள்ளோம். மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸின் பங்கு என்ன? என நீதிபதி கேட்டபோது, பென்னிக்ஸை சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தாக்கும் போது, பென்னிக்ஸின் கைகளை தாமஸ்பிரான்சிஸ் பிடித்து வைத்துள்ளார்.

அதிகாலை 3 மணி வரை பென்னிக்ஸ் தாக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கப்பட்ட போதெல்லாமல் அவரது கைகளை தாமஸ் பிரான்சிஸ் பிடித்து வைத்துள்ளார் என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின்னர், இரட்டை கொலை வழக்கில் 2 பெண் காவலர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டு வழக்கை தீர்ப்புக்காக நீதிபதி ஒத்திவைத்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/584632-sathankulam-dual-murder-case-hc-asks-to-file-evidence-documentation-2.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம்: `இரவு முழுவதும் தாக்குதல்; பல இடங்களில் ரத்தக் கசிவு!’ - சிபிஐ அறிக்கையில் பகீர்

`சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் காவல்நிலையத்தில் மிருகத்தனமாக கடுமையாகத் தாக்கப்பட்டதால்தான் இருவரும் உயிரிழந்துள்ளனர். ரத்தக்கறை மாதிரிகளுடன் இருவரின் டி.என்.ஏ பொருந்துகிறது” என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதால் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டது. கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில், இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையை துவக்கும் வரை, சி.பி.சி.ஐ.டி இவ்வழக்கினை விசாரணை செய்யும் என கூறப்பட்டது.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
 
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணையை துவக்கிய அன்றே முதலில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷை கைது செய்தனர். பின்னர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜா, காவலர்கள் வெயிலுமுத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 10 போலீஸாரை கைது செய்து தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர், மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட போலீஸாரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஆய்வாளர் ஸ்ரீதருக்கு கையில் வாதம் ஏற்பட்டது. சில போலீஸாரும், சி.பி.ஐ அதிகாரிகளில் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. காவலர்கள், அதிகாரிகளின் சிகிச்சைக்குப் பிறகு விசாரணை மீண்டும் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல் குற்றப் பத்திரிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சி.பி.ஐ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட காவலர்
 
கைது செய்யப்பட்ட காவலர்

இதையடுத்தும், இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சி.பி.ஐ தாக்கல் செய்த அறிக்கையின் முழு விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. அதில், ``தந்தை, மகன் இருவருமே பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருவர் மீதும் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலால் இருவரின் உடலில், பல இடங்களில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

காவல்நிலையத்தின் கழிப்பறை, சுவர்கள், லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரத்தக் கறைகளை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்கு அனுப்பியபோது இந்த ரத்தக்கறைகள் உயிரிழந்த தந்தை, மகனின் டி.என்.ஏ-வுடன் பொருந்தியுள்ளது. இந்த ரத்த மாதிரிகள் ஜெயராஜின் மனைவி செல்வராணியின் டி.என்.ஏ-வுடனும் பொருந்துகிறது. மேலும் காவல் நிலையத்தில் ரத்தக் கரைகளின் தடயங்களை குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் அழிக்க முயன்றுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
 
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இருவரின் ஆடைகள் களையப்பட்டு டேபிளில் படுக்க வைத்து, மூன்று காவலர்கள் பிடித்துக் கொள்ள, இருவரின் புட்டங்களில் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. சிந்திய ரத்தத்தைக் காயம்பட்ட தந்தை, மகன் இருவரையுமே துடைக்கச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர்.

வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டுவரச் சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வினிலா, இருவரையும் உடல் பரிசோதனை செய்தபோது, இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமின்றி, சிறையில் அடைக்க இவர்கள் தகுதியானவர்கள் என தகுதிச் சான்றும் கொடுத்துள்ளார்.

நீதிமன்றம் அழைத்து வரப்படும் போலீஸார்
 
நீதிமன்றம் அழைத்து வரப்படும் போலீஸார்

இருவரையும் சிறையில் அடைத்த போது சிறைக்காவலர்கள், சிறை மருத்துவர் ஆகியோரின் ஆவணங்களில் இவர்களின் உடலில் பல இடங்களில் ரத்தக் காயங்கள் இருந்தது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சி.பி.ஐ அதிகாரிகளின் விசாரணை, ஆவணங்களின் மூலம் குற்றம்சாட்டப்பட்ட சாத்தன்குளம் காவல் நிலைய காவலர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://www.vikatan.com/news/crime/sathankulam-father-and-son-duo-died-of-police-brutality-says-cbi-in-court

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.