Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில்

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில்

திருச்சி:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

 
கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின்  நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடியில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். திருச்சியில் 6,128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.269 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; மேலும் ரூ.200 கோடி வழங்கப்படும். திருச்சியில் தொழில் தொடங்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தைவான், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.495 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முக்கொம்பில் தடுப்பணை கட்டும்பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது நாங்கள்தான்.

ஜூன் 30-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உரிய முடிவெடுக்கப்படும்.

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/26141329/1640015/CM-Edappadi-Palaniswami-comments-Curfew.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு நீடிக்கப்படுவது குறித்து திங்கட்கிழமையே தீர்மானிக்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி-பழனிசாமி-1.jpg

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா என்பது குறித்து திங்கட்கிழமைக்கு பிறகே தெரியவரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “வல்லரசு நாடுகளில் கூட கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியாத சூழலில்,  தமிழகத்தில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான முயற்சி எடுத்து கட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015ல் நடத்தினார்.  அதில் சுமார் 2 இலட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தார்.

தமிழக அரசு 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இன்றைக்கு முதலீட்டை ஈர்த்து  சுமார் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு  அந்தப் பணிகளும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்முனைவோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரினோம். கோரிக்கையின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/ஊரடங்கு-நீடிக்கப்படுவது/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.