Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு ஓரிரு வாரங்களுக்குள் தூக்கி வீசும்: கேகலிய ரம்புக்வெல

Featured Replies

வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது:

நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை.

போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெனில் களத்தின் நிலவரம் போர்நிறுத்த உடன்பாட்டுடன் சமாந்தரமாக செல்ல முடியாது உள்ளது. எனவே அது தவறானது. அதனை திருத்துவதற்கு அல்லது கைவிடுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம்.

இதனை கவனத்தில் எடுக்குமாறு நாம் நோர்வேயைக் கேட்டுள்ளோம், அவர்கள் கவனம் எடுக்காது விட்டால், போர் நிறுத்தத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பை அரசு எடுக்கும் அல்லது அதற்கான நிலைமைகளை சந்திக்கும்.

விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஏனெனில், அதில் இருந்து அரசு விலகிவிட்டால், அரசே போர் நிறுத்தத்தை முறித்து விட்டதாக பிரச்சாரங்களை மேற்கொள்வது அவர்களுக்கு சாதகமானது என்றார் கேகலிய ரம்புக்வெல.

எனினும், போர் நிறுத்த உடன்பாட்டை மாற்றி அமைப்பது தொடர்பாக தமது தூதரகத்துடன் உத்தியோகபூர்வமாக தொடர்புகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது.

போர்நிறுத்தத்தை மாற்றி அமைப்பதற்கு விடுதலைப் புலிகள் தொடர்ந்து தமது மறுப்பை தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசின் இந்த வியூகம் மிகவும் ஆபத்தானது, அது மோசமான வன்முறைகளை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தை சேர்ந்த றொகான் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

puthinam.com

கோமாளி ரம்புக்வெலவின் பேச்சை யாரும் கருத்தில் எடுப்பதில்லை.

இவர் சிங்கள அரசின் பேச்சாளராக இருந்தாலும் கூட இவரது அறிக்கைகளும் பேட்டிகளும் உத்தியோகபூர்வமானவையாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லுறாங்கள். எழுதின உடன்பாட்டைத் தூக்கி எறியுறது என்ன அவ்வளவு லேசா. இப்பவே மேற்கு நாடுகள் உதவியை நிறுத்திப் போட்டுது. உடன்பாட்டையும் தூக்கியெறிஞ்சா என்ன நடக்கும்? பெரிய வரவேற்பா கிடைக்கப்போகுது.

தமிழர் தரப்பினாயே ஒப்பந்தம் முறிக்கப்படும் முறிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. இந்த முயற்சிக்கு சர்வதேசமும் ஒருவகையில் உடன்பாடுதான். ஆனாலும் தமிழர் தலைமையின் இராஜதந்திர நகர்வுகள் எய்தவனையே திரும்பிப்போய்த் தாக்கும் அம்பினைப்போல தற்போது அனைத்து மீறல்களும் எதிர்த்தரப்பினாலேயே நடத்தப்பட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகியோடும் நிலைக்குத் தள்ளிவிட்டது. கேகலியவின் கூற்றுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற கேள்வியை விடவும் ஒரு அரசதரப்பு சர்வதேசங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலையிலிருப்பவர்கள் இவ்வாறான கருத்தை வெளியிடுவது அவர்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு சொன்னால் யாராவது ஓடிவந்து தங்களுக்கு உதவுவார்கள் என்ற எண்ணந்தான். இலங்கை அரசிற்கு உதவிசெய்தே சர்வதேசம் சோர்வு நிலையை அடைந்துவிட்டது. கேகலிய சொன்னது போலவே ஒப்பந்தத்தைத் தூக்கியெறியட்டும் எறிந்து பார்க்கட்டும் .

போர்நிறுத்த உடன்படிக்கையினை அரசாங்கம் முடியுமானால் ரத்துச்செய்யட்டும் பார்க்கலாம்

அரசாங்கம் முடியுமானால் போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்யட்டும் பார்க்கலாம். அரசாங்கம் என்னதான் போர்நிறுத்த உடன்படிக்கை குறித்து குறை கூறினாலும் அதனை ரத்துச்செய்யமுடியõது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாரõளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

போர்நிறுத்த உடன்படிக்கையின் தற்போதைய நிலைமை பரிதாபகரமாக உள்ளது. சமாதான பேச்சுவார்த்தைகள் மீள ஆரம்பிக்கப்படவேண்டுமானால் போர்நிறுத்த உடன்படிக்கை பலப்படுத்தப்படவேண்டியது அவசியமாகும். போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்கப்போவதாக கூறிக்கொண்டு அரசாங்கம் நாடகமாடுகின்றது என்றும் அவர் கூறினார்.

போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டிய காலம் வந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது :

போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்யும் செயற்பாடு மிகவும் இலகுவானது. 14 நாட்களுக்கு முன்னர் நோர்வே நாட்டிற்கு அறிவித்தால் போதுமானது. ஆனால் அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச்செய்யும் நிலையில் இல்லை.

போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவேண்டியுள்ளது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறு தடவைகள் கூறிவிட்டார். ஆனால் அதற்கு அப்பால் எதனையும் செய்வதாக தெரியவில்லை. அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவும் வெளிநாடுகளுக்கு சென்று போர்நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக விமர்சனம் செய்வதாக தெரிகின்றது.

http://www.virakesari.lk/

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தூக்கிஎறியாவிட்டாலும் அரசாங்கத்துக்கு பாரிய பிரச்சினை உள்ளது

புலிகள் யாழ்ப்பாணத்தையோ அல்லது ஏனைய அரசகட்டுப்பாட்டில் உள்ள வேறுபகுதிகளையோ கைப்பற்றினால் போர்நிறுத்த கண்காணிப்பிடமோ நோர்வேயிடமோ:புலிகள் போர்நிறுத்தத்தை மீறி எங்கள்இடத்தைபிடித்துவிட்டா

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

அதாவது இன்னும் 02 கிழமைகளில் கூண்டோடு கைலாசம் போவதற்கு மகிந்து குடும்பம் தயாராகிவிட்டது... பிரேமதாசாக்கு Direct Flight கிடைத்தது... சந்திரி ஒற்றைக் கண் இழந்தாள்... மகிந்துவிற்கு என்ன பரிசு கிடைக்கின்றது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.