Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

காவியக்காதல் முதல்

கலியுக காதல்வரை

இதிகாசம் முதல்

இலக்கியம் வரை

கனவுமுதல் கற்பனைவரை

அப்பப்பா

பெண்கள்பாடே

பெரும் பாடு

எதற்காக இத்தனை

ஆர்ப்பாட்டங்கள்

ஆதிமுதல் அந்தம்வரை

அத்தனையும்

உங்கள் கற்பனைக்குள்

ஆனால் இவர்கள்

கோலங்கள் தான்

இங்கே அழங்கோலமானது

எதற்காய் இத்தனை

பரிகாசம்

யார் இவர்கள்

பொம்மைகளா?

மாற்றங்களே இல்லாது

வாழ்வதற்கு

இல்லை

அதிசய பிறவிகளா?

இல்லை

உணர்ச்சியற்ற

ஜடங்களா?

எதற்காக

இவர்கள் மீது

இத்த வெறுப்பு

இதை

புரியாது தவிக்கின்றது

இந்த வெள்ளை

ரோஜா

Edited by கஜந்தி

ஓ கவிஞனின் பெண் வர்ணனைகள்

முள்ளாக தோன்றியதோ?

நல்ல சிந்தனை தொடருங்கள் கஜந்தி

  • தொடங்கியவர்

ஓ கவிஞனின் பெண் வர்ணனைகள்

முள்ளாக தோன்றியதோ?

நல்ல சிந்தனை தொடருங்கள் கஜந்தி

பெண்கள் காதல் இங்கே படும் பாட்டை பார்த்தால்

தோன்றிய கவிதைதான் இது என் சித்தனைக்கு

வித்திட்டது சிலரின் கருத்துக்கள் அவ்வளவுதான்

பெண்கள் காதல் இங்கே படும் பாட்டை பார்த்தால்

தோன்றிய கவிதைதான் இது என் சித்தனைக்கு

வித்திட்டது சிலரின் கருத்துக்கள் அவ்வளவுதான்

ஆண்களை ஒரு கவிஞையும் கவிபாடவில்லையே :wub:

பெண்கள் கொடுத்துவைத்தவர்கள் :D:D

  • தொடங்கியவர்

ஆண்களை ஒரு கவிஞையும் கவிபாடவில்லையே :wub:

பெண்கள் கொடுத்துவைத்தவர்கள் :D:D

பாடாத வரை மகிழ்ச்சி பாடிவேதனை படுத்தாதவரை

நின்மதி தானே எத்தனை கவிதைகள் வேண்டும்

கஜந்தி, உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதன் கருத்துப்படி, பெண்களுக்கு ஏற்பட்ட துரங்களை நினைத்து ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. பெண்கள் தங்களை அழகுப் பொருட்களாக தாங்களே காட்டிக் கொள்வது எக்காலத்திலும் மாறவில்லை.

இது இயற்கையே. ஆனால் உணர்ச்சியற்ற ஜடங்களாக பெண்கள் தங்களைத் தாங்களாகவே ஆக்கிக்கொண்டுள்ளனர். இந்த நூற்றாண்டிலாவது பெண்கள் இந்தப் பிடியிலிருந்து தாங்களாகவே வெளியே வரவேண்டும்.

நல்ல கவி அக்கா வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

கஜந்தி, உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இதன் கருத்துப்படி, பெண்களுக்கு ஏற்பட்ட துரங்களை நினைத்து ஒப்பாரி வைப்பதில் எந்தப் பயனும் இல்லை. பெண்கள் தங்களை அழகுப் பொருட்களாக தாங்களே காட்டிக் கொள்வது எக்காலத்திலும் மாறவில்லை.

இது இயற்கையே. ஆனால் உணர்ச்சியற்ற ஜடங்களாக பெண்கள் தங்களைத் தாங்களாகவே ஆக்கிக்கொண்டுள்ளனர். இந்த நூற்றாண்டிலாவது பெண்கள் இந்தப் பிடியிலிருந்து தாங்களாகவே வெளியே வரவேண்டும்.

இதற்கு காரணம் எழுத்தாலர்கள் பெண்களை ஒரு மோகப்பொருளாக

கற்பனை பன்னிப்பன்னி எழுதியது. அழகாக இருந்தால் தான் ரசிக்கப்படுவோம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் அழமாக பதியப்பட்டு விட்டது

எல்லக் காலத்திலும் கற்பனைகள் மாறவில்லைத்தானே

எப்போது ஆண் பெண் என்று பிரித்து பார்க்காது பிரச்சனைகளை

ஆராய்வோமோ அப்போது நிச்சயம் மாற்றம் வரும்

நல்ல கவி அக்கா வாழ்த்துகள்.

நன்றிகள் என் இனிய உறவிற்கு என்றும்

இதற்கு காரணம் எழுத்தாலர்கள் பெண்களை ஒரு மோகப்பொருளாக

கற்பனை பன்னிப்பன்னி எழுதியது. அழகாக இருந்தால் தான் ரசிக்கப்படுவோம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் அழமாக பதியப்பட்டு விட்டது

எல்லக் காலத்திலும் கற்பனைகள் மாறவில்லைத்தானே

எப்போது ஆண் பெண் என்று பிரித்து பார்க்காது பிரச்சனைகளை

ஆராய்வோமோ அப்போது நிச்சயம் மாற்றம் வரும்

முதல் உங்கள் கவிதை என் மனதை தொட்டு விட்டது நன்றிகள்!!

நீங்கள் சொல்வது அனைத்து உண்மை தான் கஜந்தி,

அழகா இருந்தால் நாங்கள் ரசிக்கக படுகிறோம்,

ஆண்ணுக்கும் அது தானே பிடிக்கின்றது இல்லை லிசான்,

இது எப்ப மாற்றம் அடையும்???

  • கருத்துக்கள உறவுகள்

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் தான் சொந்தமா?

ரசனையும் அப்படித்தான் எல்லோருக்கும் பொதுவானது.

பெண்களே! துயரங்கள், இழப்புக்கள், தோல்விகள் ஆண்களுக்கும் நிகழ்வதுண்டு.

கவிதைகளில் பெரும்பாலானவை கற்பனைகளில் தோன்றுபவை.

ஆகவே கவிதை ரசிப்பதிற்கு மட்டுமேயொழிய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்காதையுங்க.

உங்களால் ஆக்கப்படும் கவிதைகளில் சில எங்களின் வாழ்ககையோடு சிலநேரங்களில் ஒத்துப்போகலாம்

ஆகவே தான் உங்கள் கவிதைகளை அளவுக்கு அதிகமாக சிலபேரால் புகழப்படுவதுமுண்டு. ஏன் நானும் இதற்கு விதிவிலக்கல்ல.___________

கஜந்தி உங்கள் கற்பனையில் உருவாகிய வரிகள் பாரட்டப்படவேண்டியவை.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு காரணம் எழுத்தாலர்கள் பெண்களை ஒரு மோகப்பொருளாக

கற்பனை பன்னிப்பன்னி எழுதியது. அழகாக இருந்தால் தான் ரசிக்கப்படுவோம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் அழமாக பதியப்பட்டு விட்டது

எல்லக் காலத்திலும் கற்பனைகள் மாறவில்லைத்தானே

எப்போது ஆண் பெண் என்று பிரித்து பார்க்காது பிரச்சனைகளை

ஆராய்வோமோ அப்போது நிச்சயம் மாற்றம் வரும்

அழகு என்பதால் நீங்கள் வெளித் தோற்றம் பற்றிப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது அழகு என்பதன் வரைவிலக்கணம் வெளித் தோற்றத்தைத் தாண்டி வளர்ந்து விட்டது. உதாரணத்திற்கு எனக்கு ஐஸ்வர்யா ராயை விட எந்த மேக்கப்பும் இல்லாமல் வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றும் படித்த நம் நாட்டுப் பெண்கள் அழகாகத் தெரிகிறார்கள்!

  • தொடங்கியவர்

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் தான் சொந்தமா?

ரசனையும் அப்படித்தான் எல்லோருக்கும் பொதுவானது.

பெண்களே! துயரங்கள், இழப்புக்கள், தோல்விகள் ஆண்களுக்கும் நிகழ்வதுண்டு.

கவிதைகளில் பெரும்பாலானவை கற்பனைகளில் தோன்றுபவை.

ஆகவே கவிதை ரசிப்பதிற்கு மட்டுமேயொழிய வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்காதையுங்க.

உங்களால் ஆக்கப்படும் கவிதைகளில் சில எங்களின் வாழ்ககையோடு சிலநேரங்களில் ஒத்துப்போகலாம்

ஆகவே தான் உங்கள் கவிதைகளை அளவுக்கு அதிகமாக சிலபேரால் புகழப்படுவதுமுண்டு. ஏன் நானும் இதற்கு விதிவிலக்கல்ல.___________

கஜந்தி உங்கள் கற்பனையில் உருவாகிய வரிகள் பாரட்டப்படவேண்டியவை.

இங்கே நான் ஆண்கள் பெண்கள் என்று வேறுபாடு கொள்ளவில்லை ரசனைபொதுவானது

அந்த ரசனை யாரையம் காயப்படுத்தாது ரசிக்கலாமே எல்லா விடையங்களும்

பொதுவானது நானும் ஏற்றக்கொள்கின்றேன் காயங்கள் மனிதனுக்கு பொதுவானது

இங்கே ஆண் பெண் என்று காயங்களை வேறுபடுத்தவில்லை எழுத்தாலர்கள்

பெண்களை ஒரு தப்பான நிந்தனைக்கு தள்ளிவிட்டார்கள் அதில்தான் மாற்றங்கள்

தேவை அவர்களை அழகு கவர்ச்சி என்னும் விடையங்களை எழுதி எழுதி

அவர்களை அப்படியான சிந்தனைக்குள் தள்ளி விட்டார்கள் இதில்தான் மாற்றம்

தேவை என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருள் நிறைந்த அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் கஜந்தி.

  • 2 weeks later...

எத்தனையோ பெண்கள் தங்களை ஆண்கள் புகழ்வதைப் பார்த்திட்டு கொடுப்புக்குள் சிரிப்பது சகோதரிக்கு தெரியல போல... அட நம்மளையும் கிளி ... மைனா (சும்மா) என்று புகழ்கிறானே என்ற ஆச்சரியத்தின் வெளிப்பாடு... இன்னும் சில பெண்கள் புகழ்ச்சியா ஒரு வார்த்தை சொல்லாட்டி எவ்வளவு கோபப் படுகினம் என்று தெரியுமோ? புகழ்ச்சி உண்மையோ பொய்யோ அதை விரும்பிற பெண்கள் இருக்கத் தான் செய்கினம்... சகோதரி உணர்ச்சி வசப்படாதீங்க... (உங்களை யாரும் புகழவில்லை என்ற கவலையில் பிறந்த கவியோ....? )

  • கருத்துக்கள உறவுகள்

காவியக்காதல் முதல்

கலியுக காதல்வரை

இதிகாசம் முதல்

இலக்கியம் வரை

கனவுமுதல் கற்பனைவரை

அப்பப்பா

பெண்கள்பாடே

பெரும் பாடு

எதற்காக இத்தனை

ஆர்ப்பாட்டங்கள்

*******************

இதை ஏன் ஆர்ப்பாட்டம் என்கின்றீர்கள்?

காதல் என்பது அதாவது உண்மைக்காதல் என்பது பெரும்பாலும் உணர்சிகளின் வெளிப்பாடு.

இதில் ஆண்கள், பெண்கள் என்ற விதிவிலக்கில்லை ஆணால் பெண்கள் இதை வெளிக்காட்டுவதில்லை.

இதில் உங்கள் ஆதங்கம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது. என்னைப்பொறுத்தவரை பெண்களாகிய நீங்கள் இந்த விடயத்தில் சந்தோஷப்படவேண்டிய விடயம் நிறைய இருக்கின்றது.

அதை மட்டும் ஏன் கருத்தில் கொள்கின்றீர்கள் இல்லை.

நான் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் எவ்வளவு பெருமைப்பட்டிருப்பேன் தெரியுமா?

  • தொடங்கியவர்

எத்தனையோ பெண்கள் தங்களை ஆண்கள் புகழ்வதைப் பார்த்திட்டு கொடுப்புக்குள் சிரிப்பது சகோதரிக்கு தெரியல போல... அட நம்மளையும் கிளி ... மைனா (சும்மா) என்று புகழ்கிறானே என்ற ஆச்சரியத்தின் வெளிப்பாடு... இன்னும் சில பெண்கள் புகழ்ச்சியா ஒரு வார்த்தை சொல்லாட்டி எவ்வளவு கோபப் படுகினம் என்று தெரியுமோ? புகழ்ச்சி உண்மையோ பொய்யோ அதை விரும்பிற பெண்கள் இருக்கத் தான் செய்கினம்... சகோதரி உணர்ச்சி வசப்படாதீங்க... (உங்களை யாரும் புகழவில்லை என்ற கவலையில் பிறந்த கவியோ....? )

தோலின் அழகு சிலகாலம் உள்ளத்தின்அழகே சாகம் வரை காதலில்வெற்றி

பெற்றவர் அதிகம் உள்ளத்தை நேசித்தவர்கள் தான் நான் நிஜத்தை யோசிக்கின்றேன்

  • தொடங்கியவர்

பொருள் நிறைந்த அருமையான கவிதை வரிகள். வாழ்த்துக்கள் கஜந்தி.

நன்றிகள் பொருள் விளங்கி ரசித்ததிற்கு

இங்கே கருத்து எழுதிய அணைவருக்கும் நன்றிகள்

எல்லா கருத்தையும் கவிதைக்குள் கொண்டுவரமுடியது

அதனால் எனது பதிவை எறு்றுக்கொள்ளும் அணைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கஜந்தி அக்கா உங்க கவிதை சுப்பர்.

இந்த ஆண்கள் இருக்கிறாங்க...நாங்கள் இறங்கிப்போனால் திமிர் பிடித்தலைவாங்க இது எனது அனுபவம்.

  • தொடங்கியவர்

நன்றி கஜந்தி அக்கா உங்க கவிதை சுப்பர்.

இந்த ஆண்கள் இருக்கிறாங்க...நாங்கள் இறங்கிப்போனால் திமிர் பிடித்தலைவாங்க இது எனது அனுபவம்.

நன்றிகள் இதை நான் ஆண்களை தாக்கு வதற்காக எழுதவில்லை

இது கற்பனைகளில் மாற்றம் தேவை என்பதற்காக எழுதப்பட்டவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.