Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவேக்சின் பரிசோதனை தொடங்கியது; பக்க விளைவுகள் ஏற்படவில்லை: அரியானா சுகாதாரத்துறை மந்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவேக்சின் பரிசோதனை தொடங்கியது; பக்க விளைவுகள் ஏற்படவில்லை: அரியானா சுகாதாரத்துறை மந்திரி

கோவேக்சின் பரிசோதனை தொடங்கியது; பக்க விளைவுகள் ஏற்படவில்லை: அரியானா சுகாதாரத்துறை மந்திரி

 

சண்டிகார்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியுள்ளது. மனிதா்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரியானாவின் ரோடக் பிஜிஐ மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் செலுத்தும் மருத்துவ பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டதாக அரியானா சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அனில் விஜ் கூறுகையில், “ 3 பேரிடம் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  தடுப்பு மருந்துக்க அவர்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை” என்றார். 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/17154639/Human-trial-with-Corona-vaccine-COVAXIN-of-Bharat.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சோதனை தொடங்கியது

புதுடெல்லி,

ஒரே நாளில் இரண்டு மைல் கல்களை இந்தியா அடைந்துள்ளது.  முதல் மைல் கல், கவலை அளிக்கக்கூடியது. இரண்டாவது மைல் கல், மகிழ்ச்சி தரக்கூடியது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை நேற்று 10 லட்சத்தை கடந்து விட்டது என்பதுதான் முதல் மைல்கல்.


நாட்டிலேயே மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மாநிலங்களாக மராட்டியமும், தமிழகமும் திகழ்வது இரு மாநிலங்களுக்கும் சற்றே கவலை தரக்கூடிய ஒன்றுதான்.

இவ்விரு மாநிலங்களை தொடர்ந்து இப்போது கர்நாடகத்திலும், பீகாரிலும் தினமும் வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு புதிதாய் பாதிப்பு. மொத்த பாதிப்பு, 10 லட்சத்து 3 ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.

இப்படியே கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டே சென்றால் தடுத்து நிறுத்துவது எப்படி என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.

இதற்கு ஒரே பதில் தடுப்பூசிதான்.

இரண்டாவது மைல்கல்...

அந்த வகையில் இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் பாரத் பயோடெக் நிறுவனம், புனேயில் உள்ள இந்திய வைராலஜி நிறுவனத்துடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடனும் இணைந்து தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப்பார்க்கும் முதல் இரு கட்ட சோதனைகளை விரைவுபடுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடவடிக்கை எடுத்தது. இதற்காக சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி உள்பட 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ஒன்று, அரியானா மாநிலம் ரோட்டக்கில் உள்ள பி.ஜி.ஐ.எம்.எஸ். என்று அழைக்கப்படுகிற பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுநிலை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகும்.

அங்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசியை தங்கள் உடலில் செலுத்திக்கொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு 10 நாட்களாக நடந்தது. இதில் சுமார் 100 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் 22 பேரின் மருத்துவ வரலாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அவர்களில் 8 பேர் தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறிப்பாக அவர்கள் வைரசால் முன்னர் பாதிக்கப்பட்டுள்ளார்களா, கல்லீரல், நுரையீரல், சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்களா என்பதையெல்லாம் ஆராய்ந்து 3 பேரை தேர்வு செய்திருந்தார்கள்.

அந்த 3 பேருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி வெற்றிகரமாக நேற்று போடப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போடும் சோதனை தொடங்கி உள்ளது. இதுதான் இரண்டாவது மைல் கல். மகிழ்ச்சி தரக்கூடியது.

மந்திரி தகவல்

இதை அரியானா மாநில சுகாதாரத்துறை மந்திரி அனில் விஜ் டுவிட்டரில் அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி (கோவேக்சின்) பரிசோதனை இன்று (நேற்று) தொடங்கியது. 3 பேருக்கு ஊசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் நன்றாக பொறுத்துக்கொண்டனர். எதிர்மறையான விளைவுகள் எதுவும் இல்லை” என கூறி உள்ளார்.

“இந்தியாவில் உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை வெற்றிகரமான மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனை தொடங்கி உள்ளது” என அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது.

ரோட்டக் பி.ஜி.ஐ.எம்.எஸ்.சில், மேலும் 14 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. அதற்கான அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.

இதே போன்று பிற பரிசோதனை தளங்களிலும் ‘கோவேக்சின்’ தடுப்பூசியை மனிதர்களுக்கு போட்டு பரிசோதிப்பது அடுத்த சில நாட்களில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/18024244/The-trial-of-the-corona-vaccine-for-humans-has-begun.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கண்டு பிடித்த மருந்து... என்றால்,
முதலில்... மாட்டுக்கு தான், சோதனை பண்ணி பார்க்க வேணும்.

இந்தியா...  மற்றவனுக்கு... காதிலை, பூ  வைக்கிறதில் கெட்டிக்கார நாடு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை: எந்த எதிர்மறை விளைவும் இல்லை

bharat-biotech-starts-human-trial-of-its-anti-covid-vaccine-at-pgi-rohtak-minister-vij கோப்புப்படம்

சண்டிகர்

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து மனிதர்களின் உடலில் செலுத்தி நேற்று பரிசோதிக்கப்பட்டது, இதில் முதல்கட்டமாக எந்த பக்கவிளைவுகளும் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம், சண்டிகரின் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் பரிசோதித்து வருகிறது

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான கோவாக்ஸின் என்ற பெயரில் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தாகும். இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் முயற்சி இரு கட்டங்களாகத் தொடங்கப்பட்டுள்ளது.

1595041893756.jpg

இந்த பரிசோதனைகள் அனைத்தும் ரோடக் நகரில் உள்ள உயர்நிலை மருத்துஅறிவியல் கல்வி நிறுவனத்தில் நடந்து வருகிறது.முதல் கட்டமாக நேற்று மூன்று தன்னார்வலர்களுக்கு இந்த கோவாக்ஸின் மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு எந்தவிதமான எதிர்மறையான விளைவுகளும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை, அறிவியல் மற்றும் உள்துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த கரோனாவுக்கான கோவாக்ஸின் தடுப்பு மருந்து மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் பணி ரோடக் நகரில் உள்ள பிஜிஐ நிறுவனத்தில் நடந்து வருகிறது.

3 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக மருந்து உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில், அவர்களுக்கு எந்த எதிர்மறையான விளைவுகளும் வரவில்லை. அனைவரும் தடுப்பு மருந்தை தாங்குகின்றனர். அடுத்து வரும் நாட்களில் தன்னார்வலர்கள் அதிகமாகச் சேர்க்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்

ரோடக் நகரில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் நிருபர்களிடம் கூறுகையில் “ கோவாக்ஸின் மருந்து முதல்கட்டமாக 3 மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. எந்த எதிர்மறையான விளைவும் இல்லை.

1595041957756.jpeg

இந்த பரிசோதனை தொடர்ந்து 6 மாதங்கள்வரை நடக்கும். முதல் 3 மாதங்கள் கோவாக்ஸின் தடுப்பு மருந்தின் தன்மை குறித்தும், உடலில் எவ்வாறு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்குகிறது குறித்தும் ஆய்வு செய்யப்படும். ஏதாவது எதிர்மறையான விளைவுகள் உண்டாக்குகிறதா என பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனைக்கு 30 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
முதல்கட்டமாக 10 நபர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது, இதில் 3 பேருக்கு இப்போதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டத்தில் மருந்தின் அளவு அதிகரிக்கப்பட்டு பலருக்கும் பரிசோதிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

கரோனா வைரஸக்கு எதிராக நாட்டில் 7 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்புகளில் இருக்கின்றன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் நிறுவனத்துக்கு மட்டும் மனிதர்கள் மீதான கிளிக்கல் பரிசோதனை நடத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/india/565089-bharat-biotech-starts-human-trial-of-its-anti-covid-vaccine-at-pgi-rohtak-minister-vij-2.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு -டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனை அறிவிப்பு

புதுடெல்லி

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்றும் தணியாமல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் தொடக்கம் முதல் பாதிப்பு  எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதும் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவிற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து பாரத் பயோடெக் நிறுவனமும், ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனமும் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளன. இவ்விரு  தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆய்வக சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ள இரு மருந்துகளும் அடுத்ததாக மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது. இதற்கான இரண்டு கட்ட  பரிசோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.

ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வேட்பாளர் கோவாக்சின், சமீபத்தில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலில் (டி.சி.ஜி.ஐ) மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான அனுமதி பெற்றுள்ளது.

இந்தியா உருவாக்கிய முதல் உள்நாட்டு தடுப்பூசி இதுதான் என்பதைக் குறிப்பிட்டு, ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பால்ராம் பார்கவா சமீபத்தில் 12 இடங்களின் முதன்மை புலனாய்வாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், மனித மருத்துவ சோதனை ஒப்புதல்களை விரைவாகக் கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

தனது தடுப்பூசியை 1000 பேருக்கு செலுத்தி பார்க்கும் சோதனையை தொடங்கி  உள்ளதாக ஜைடாஸ் கேடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பாரத்பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கோவாக்சின் மருந்து சோதனைக்கு இன்று முதல் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனை அறிவித்துள்ளது.சோதனைக்கு விருப்பம் தெரிவிப்போர் ctaiims.covid19@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 7428847499 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எய்ம்ஸ் தனிநபர்களை பரிசோதனை செய்து அவர்ளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்பு திங்கள் (இன்று) முதல் அவர்களின் உடல்நிலையை மதிப்பீடு செய்யும்.

கோவாக்சினின் முதலாம் மற்றும் இரண்டாம் மனித சோதனைகளை நடத்துவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தேர்ந்தெடுத்த 12 தளங்களில் எய்ம்ஸ்-டெல்லி ஒன்றாகும்.

எய்ம்ஸ், பாட்னா மற்றும் இன்னும் சிலஇடங்களில் சோதனைகள் இதுவரை தொடங்கப்பட்டுள்ளன.

முதலாம் கட்டத்தில், 375 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி பரிசோதிக்கப்படும், அவர்களில் அதிகபட்சம் 100 பேர் எய்ம்ஸிலிருந்து வந்தவர்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/20112201/.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.