Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுக்கு அரசு தயார் என்கிறது மகிந்து!

Featured Replies

பேச்சுக்கு அரசு தயார் என்கிறார் மகிந்த ராஜபக்ச

[சனிக்கிழமை, 2 யூன் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் வேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்தவின் பேச்சாளரான சந்திரபால லியனகே அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகள் சம்மதித்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இன்றுகூட பேச்சுக்களை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார்.

நான் ஒரு ஜனநாயகவாதி, எனவே அமைதியான பேச்சுக்களின் மூலமே தீர்வைக்காண விரும்புகின்றேன். போர்நிறுத்த உடன்பாடு 8,000 - 9,000 தடவைகள் மீறப்பட்டுள்ளது. எனினும் நாம் அதனைக் கைவிடவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறியதாக லியனகே மேலும் தெரிவித்தார்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தைக்கான அழுத்தத்தை மதத்தலைவர்கள் கொடுக்கவேண்டும்!

வீரகேசரி நாளேடு

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மோதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதற்கு இந்த நாட்டின் மதத்தலைவர்கள் அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்று மன்னார் மாவட்ட ஆயர் வண.இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மீரிகம ராமஞ்ஞ தவுல்தென ஞானேஸ்வர தேரரை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் வடக்கு கிழக்கு நிலைமை குறித்து தேரரும் ஆயரும் ஆராய்ந்துள்ளனர். அத்துடன் மடு தேவாலயப் பகுதி யுத்த பிரதேசமாக மாறிவருகின்றமை குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது கருத்து தெரிவித்த மன்னார் ஆயர் கூறுகையில் :

இந்த நாட்டின் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கவேண்டும். யுத்தம் காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவேண்டும். அதற்கான அழுத்தங்களை மதத்தலைவர்கள் கொடுக்கவேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த ராமஞ்ஞ தவுல்தென ஞானேஸ்வர தேரர் கூறுகையில் : இந்த நாட்டின் இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படுகின்ற அரசியல் தீர்வின் மூலமே தீர்க்கமுடியும். எனவே இதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் என்றார்.

செய்தி மூலம்: வீரகேசரி, நன்றி!

பேச்சுக்கு அரசு தயார் என்கிறார் மகிந்த ராஜபக்ச

[சனிக்கிழமை, 2 யூன் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் வேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்தவின் பேச்சாளரான சந்திரபால லியனகே அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகள் சம்மதித்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இன்றுகூட பேச்சுக்களை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார்.

நான் ஒரு ஜனநாயகவாதி, எனவே அமைதியான பேச்சுக்களின் மூலமே தீர்வைக்காண விரும்புகின்றேன். போர்நிறுத்த உடன்பாடு 8,000 - 9,000 தடவைகள் மீறப்பட்டுள்ளது. எனினும் நாம் அதனைக் கைவிடவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறியதாக லியனகே மேலும் தெரிவித்தார்.

செய்தி மூலம்: புதினம், நன்றி!

:rolleyes::lol::lol::D:D:D :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 2 7:20:04 EEST 2007

யுத்தத்தை நடத்திக் கொண்டே பேசலாம் என்கிறார் ஜனாதிபதி

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரச படைகள் ஒருபுறம் யுத்தம் நடத்திக்கொண் டிருக்கையிலே மறுபுறத்தில் அமைதித் தீர்வு குறித்து புலிகளுடன் பேசுவதற்குத் தாம் தயார் என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

புலிகள் இணங்குவார்களானால் ஒக்டோ பர் 2006இல் பேச்சுகள் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து அதனைத் தொடரலாம் என்றும் அதற்கு ஜனாதிபதி தயார் என் றும் அவரின் பேச்சாளர் சந்திரபால லிய னகே நேற்றுத் தெரிவித்தார்.

""இன்று இப்போதுள்ள நிலைமை யில்கூட நான் பேசத்தயார். நான் முழுமை யான ஜனநாயகவாதி. அமைதித் தீர்வில் நம்பிக்கை கொண்டவன்'' என்று கூறி யிருக்கிறார் ஜனாதிபதி.

""யுத்த நிறுத்த ஒப்பந் தம் சுமார் 8 ஆயி ரம் முதல் 9 ஆயி ரம் தட வைகள் மீறப்பட்டுவிட்டன. ஆனால் நாங்கள் இன் னும் யுத்த நிறுத்தத்தைக் கைவிட வில்லை. '' என்றார் ஜனாதிபதி. (சி)

உதயன்

நாம் பேச்சுக்குத் தயார், பேச்சுவார்த்தைக்காம கதவு எப்போதுமே திறந்துள்ளது....

இப்படியான கருத்துக்களை அவ்வப்போது எல்லா சிங்களத் தலைவர்களும் சர்வதேசத்தின் பார்வையைத் திருப்புவதற்காக கூறுவது வழக்கம்.

யுத்தத்தையும் நிறுத்தாமல், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்தாமல், தீர்வுத் திட்டமொன்றையும் முன்வைக்க இயலாமல், ஒற்றையாட்சியில் மாற்றமில்லை என்றும் கூறிக்கொண்டு பேச்சுவார்த்தைக்குத் தயார் எறு சொல்வதில் அர்த்தமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நாங்களும் பேச்சுக்கும் தயார், போராடவும் தயார் ஆனால் வேஷம் போட மட்டும் தயாரில்லை.

இது தமிழர் தரப்பு ...

அத்துடன் ஒரு நிபந்தனை: அதாவது ராணுவத்துடன் மட்டும் தான் நாங்கள் போராடுவோம் அதாவது சிங்கள மக்களை தாக்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் அவர்களது எல்லைகளை பற்றி பேச்சு வார்த்தை நடாத்த தயார் என்பதை தமிழ் மக்கள் இத்தால் உறிதிப்படுத்துகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.