Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

′′ஆவணம்” என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 6

ஆவணகத்தில் ஆவணங்களை ஆவணப்படுத்தல்

நோர்வே வாழ் தமிழர்களின் ஆவணங்கள் என்று 1970கள், 1980கள் மற்றும் 1990 களில் உருவாக்கப்பட்டவையே நோர்வேயிய ஆவணகங்களில் (archive institution/ archive depot) உள்ளன. அவை «Redd Barna» (சிறுவர்களின் நலனை மையப்படுத்திய நோர்வேயிய தன்னார்வ அமைப்பு), «Innvandreretaten» (புலம்பெயர்வோர் நிர்வாகம்), «tolkeseksjonen» (பொழிபெயர்ப்புப் பிரிவு/ interpreting section), «Flyktning og Innvandreretaten» (அகதிகள் மற்றும் குடிவரவு சேவை) (குடிவரவு சேவை மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான செயலகம் ஆகியவற்றின் இணைப்பு). இதோடு 2000 ஆம் ஆண்டுகளின் மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட முதுகலை மற்றும் முனைவர் ஆய்வறிக்கைகள்.

இதில் சிலவற்றை நோர்வேயிய எண்ணியம் (digital) ஆவணத் தளமான «Arkivportalen.no» இல் “Tamil” என்ற தேடலின் முடிவாக காணலாம்:https://www.arkivportalen.no/search?text=tamilஏனைய ஆவணங்கள் குறைந்தபட்சம் 60 ஆண்டுகளுக்கு பொது அணுகலிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இது தனிநபர்களின் தனியுரிமைக் கொள்கையைப் (privacy policy/ personvern) பாதுகாக்க செய்யப்படுகிறது.

இவை நோர்வே அரசாங்க அமைப்புகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகளின் ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்களின் அடிப்படையில் நோர்வே வாழ் தமிழர்கள் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன் இங்கு அகதிகளாக புலம்பெயர்ந்த காலத்திலேயே உறைந்து போய் நிற்கின்றது. இந்த தமிழர்களின் வளர்ச்சியைப் பற்றி சொல்லும் வரலாற்று ஆவணங்கள் எங்கே? நோர்வேக்கு புலம்பெயர்ந்த அனைத்து தமிழர்களும் அகதிகளாகத்தான் வந்தார்களா? புலம்பெயர்ந்த தமிழர்களின் 40-50 வருட கால வாழ்க்கைப் பயணம் எப்படி இருந்து வந்துள்ளது? – இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் தமிழ் நிறுவன/ அமைப்பு ஆவணங்களிலேதான் (organisational archive) உள்ளன. கவலைக்குரிய நிலை என்னவென்றால் இத்தகைய ஆவணங்கள் பொது அணுகலுக்கு கிடைப்பதில்லை.

இன்றும் பல புலம்பெயர் அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளைக் கொண்டுள்ளவர்கள் புலம்பெயர் தமிழர்களின் முதல் தலைமுறையினர் ஆவர். அவர்கள் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்கள் ஆவர். இவர்கள் இலங்கையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ்ப்பாண நூலக எரிப்பு மற்றும் அரச உதவியில் மெற்கொள்ளாப்பட்ட பிற அரிச்சிகரமான பண்பாட்டு இனப்படுகொலைகளை (cultural genocide) அனுபவித்தவர்கள்.தமிழ் கவிஞரான மயில் வாகனார் புலவர் 1736 ஆம் ஆண்டு எழுதிய “யாழ்பாண வைபவ மாலை” இன் ஒரே மூல நகலை உள்ளடக்கிய 97 000 தனித்துவமான நூல்கள் மற்றும் ஆவணங்கள் சாம்பலாக்கப்பட்டன. இச் சந்தர்ப்பத்தில், இரண்டாம் உலகப் போரின் கீழ் ஜேர்மன் படையெடுப்பால் நோர்வேயிய ஆவணங்களில் சில பகுதிகள் பறிமுதல் செய்யப்பட்டதை குறிப்பிட விரும்புகிறேன்.அடக்குமுறையின் வடுக்கள் தமிழரிடம் தொடர்கின்றன. இது ஆவணங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியார் கைகளில் வைத்திருப்பதற்கான பல காரணங்களில் ஒன்று. தம்மிடம் எஞ்சியிருப்பதை இழக்க நேரிடும் என்ற அச்சமே. அதோடு எண்ணியமயமாக்கல் (digitalising) மற்றும் மூலப் பிரதியை பல பிரதிகளாக்கி வைத்திருப்பதும் இந்த வரலாற்று அதிர்ச்சி அனுபவத்தின் மற்றுமோர் பிரதிபலிப்பாகும்.

இருப்பினும், அந்த வரலாற்று அனுபவத்தை ஒரு தடையாக வைத்துருப்பதைத் தவிர்த்து ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இது ஒரு நீண்டகால சமூக தேவையாக உள்ளது.“ஈழம்” என்ற சொல்லை நாம் ஒரு எடுத்துக்காடாக எடுத்துக் கொள்ளலாம். “ஈழம்”[ii] என்பது இலங்கைத் தீவின் பூர்வீக பெயர். இன்றுமுதல் DsporA Tamil Archive இந்த அர்த்தத்தின் அடிப்படியிலே ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தும். ஈழத் தமிழர்கள் தங்களது முன்னோர்களின் வரலாற்றிற்கான அனைத்து ஆவணங்கள் மற்றும் தொல்பொருள் சான்றுகளை சேகரிக்க வேண்டும் என்ற ஓர் புதுப்பிக்கப்பட்ட சமீப தேடலைக் கொண்டுள்ளனர். அதனை அவர்கள் கல்வெட்டுகள், அச்சிடப்பட்ட நூல்கள், சங்க காலம் தொடக்கம் (கி.மு. நூற்றாண்டுகள்) பிற்காலம் வரையிலான தொல்பொருள் சான்றுகள் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கண்டறிந்து முன்வைக்கின்றனர். “ஈழம்” என்ற சொல்லை பல்வேறு வடிவங்களில் பதிவுகளாக செய்யப்பட்டதாலும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாலும், அவை தமிழர்களின் பூர்வீக உரிமை மற்றும் வரலாற்றிற்கான சான்றுகளாகின்றன. அதேபோல், தாயக வாழ் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழ் சந்ததியினரின் அறியப்படாத, எதிர்கால பயன்பாடுகளிற்கும் மற்றும் நோக்கத்திற்கும் சமகால பதிவுகள் ஆவப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு.

புலம்பெயர்ந்த தமிழரின் மூத்த தலைமுறையினர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்த ஆவணங்கள் மட்டுமே பெறுமதிமிக்க ஆவணம் என்று கருதுகின்றனர் என்பதை மீண்டும் குறிப்பிடுவது முக்கியம் ஆகின்றது. ஆனால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உருவாக்கிய ஆவணங்களும் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பெறுபதிமிக்க ஆவணங்கள் என்பதனை மறந்துவிடாதீர்கள்.

அதில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் உருவாக்கிய தாயக விடுதலைப் போராட்டம் சார்ந்த ஆவணங்களும் பெறுபதியானவைகளே. அதில் அனைத்து போராட்ட வடிவங்களும் மற்றும் போராட்ட அமைப்புகளும் உள்ளடங்கும். எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்க நான் அடிக்கோடிட்டுக் கூற விரும்புகிறேன். கடந்த 30-40 ஆண்டுகால விடுதலைப் போராட்டமானது முதல் தலைமுறையினருக்கு ஒர் அரசியல். அது இரண்டாம் தலைமுறையினருக்கு பகுதி அரசியலாகவும் மற்றும் பகுதி வரலாறாகவும் உள்ளது. ஆனால் இங்கு மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை தமிழர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றனர். அவர்களுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் கடந்த 30-40 வருடகால தமிழர் விடுதலைப் போராட்டமானது ஓர் வரலாறாக உள்ளது!சங்க கால வரலாற்றைப் போலவே அக்காலமும் ஈழத் தமிழ் இருப்பின் தொடர்ச்சியைக் கூறும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சான்றுகள்! ஒரு ஆவண நெறிமுறை (archive ethics) பார்வையில், ஆவணச் செயற்பாடு புறநிலை கொண்டு (objectivity), வரலாற்றுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

ஆவணகம் – சில ஆவணச் சொற்கள்:

Clause (klausul): இரகசியத்தன்மையின் கடமைக்கு உட்பட்ட தகவல்களை பொது அணுகலிலிருந்து தடுத்து வைத்தல்Access (tilgang) – அணுகல்: ஒரு ஆவணத்தை அடையாளம் கண்டு, பல்வேறு பயன்பாட்டிற்காக ஒரு ஆவணப் பொருளைப் பெற்றுக் கொள்தல்.Ownership (eierskap) – உரிமை: ஒரு ஆவணத்தின் உரிமையாளர் மற்றும் ஆவண உருவாக்குனர். அது ஒரு தனி நபர், ஒரு அமைப்பு அல்லது ஒரு திணைக்களமாக இருக்கலாம்.

ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுக்கு முறைவகள்:

நோர்வே ஆவணச் சட்டத்தின்படி, தனியார் ஆவணங்களை (private archive) ஓர் ஆவணகத்தில் இரண்டு வெவ்வேறு ஒழுக்கு முறைகளின் கீழ் ஆவணப்படுத்த முடியும்.

  1. ஒப்படைத்தல் (handing over/ avlevering)
வைப்பு (depositing/ deponering)

இதன் முக்கிய வேறுபாடு ஆவணங்களின் உரிமையில் உள்ளது.“ஒப்படைத்தல்” ஒழுக்கு முறையில், ஆவணங்களின் உரிமை ஆவணகத்திடம் முழுமையாக வழங்கப்படுகிறது. அதாவது ஆவணப் பொருட்களில் பாதுகாக்க வேண்டியுள்ள இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை  (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) கருத்தில் கொண்டு ஆவண அணுகலுக்கான மதிப்பீட்டு  அதிகாரம் ஆவணகத்திடம் கொடுக்கப்படும். இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்கள் அடிப்படியில், ஆவணப் பொருட்கள் (archival materials) அல்லது முழு ஆவணமும் (archive) 60-100 ஆண்டுகள் (பொதுவாக 60 ஆண்டுகள்) இரகசியத்தன்மையின் கடமைக்கு உட்பட்டு, தகவல்களை பொது அணுகலிலிருந்து தடுத்து வைக்கலாம் (Clause/ klausul). இது நோர்வே ஆவணச் சட்டத்தின் அடிப்படையின் கீழ் தனிநபரின் இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை  (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) பாதுகாக்க செய்யப்படுகின்றது. ஆவணங்களில் உள்ள இரகசிய மற்றும் தனிப்பட்ட விவரங்கள் (privacy policy/ personvern) இருந்தால் மட்டுமே இந்த தடுப்பு செய்யப்படுகின்றது. இல்லையெனில் நோர்வே ஆவணச் சட்டம் அணுகல் / வெளிப்படைத்தன்மை (access/ transparency – innsyn)கொள்கையின் அடிப்பையில் செயல்படுகிறது. முடிந்தவரை அதிக அணுகல் / வெளிப்படைத்தன்மையை வழங்கும் சட்ட ஒழுங்கை ஆவணகங்கள் கொண்டுள்ளது (more access/ transparency – mer innsyn).

மறுபுறம், “வைப்பு” என்பது ஆவண உருவாக்குனரிடம் முழு உரிமையும் இருக்க, ஆவணங்கள் ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும்.உதாரணமாக, “DsporA Tamil Archive” இந்த இடுகைகளை ஒரு ஆவணகத்தில் வைப்பு செய்ய முடிவு செய்தால், இந்த பதிவுகள் எதிர்காலத்திற்காக ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும். இடுகைகளை அணுக யாராவது விண்ணப்பிக்கும்போது, அந்த ஆவணகம் என்னிடம் அந்த அணுகலுக்கான கோரிக்கையை அனுப்பும். பின்னர் நான் கோரிக்கையை பரிசீலித்து அணுகலை அனுமதிக்கலாம் அல்லது இடுகைகளுக்கான (ஆவணப் பொருட்கள்) பகுதி அணுகலை (partial access) அனுமதிக்கலாம். அல்லது அணுகல் கோரிக்கையை நிராகரிக்கலாம். இதைச் செய்வதன் மூலம் ஆவணப் பொருட்கள் எதிர்காலத்திற்காக ஆவணப்படுத்தப்படும் அதே நேரத்தில் ஆவண அணுகலை ஆவண உருவாக்குனர் (archive creator) கண்காணிக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், “DsporA Tamil Archive” ஆவணகத்தில் வைப்பு செய்யப்பட்ட ஆவணப் பொருட்களை திரும்பப் பெற முடியும். இது வைப்பு ஒழுங்கில் இருக்கும் ஓர் பிரதிகூலம் (disadvantage). ஆவணத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று அந்த ஆவணத்தில் தொடர்புபட்ட சமூகம் விரும்பினாலும், ஆவணப்பொருள் எதிர்காலத்திற்காக ஆவணப்படுத்தும் முடிவு ஆவண உருவாக்குனரின் கைகளில்தான் தங்கியுள்ளது.

இவ்விரு ஒழுக்குகளில் ஒன்றின் அடிப்படியில் உங்கள் ஆவணத்தை ஒரு ஆவணகத்தில் கொடுக்கும்போழுது, ஆவண பெறுமதி உள்ள ஆவணங்களை மதிப்பிட்டு இனம்காண உங்களுக்கு உதவுவார்கள். ஆவண பெறுபதி அற்ற ஆவணங்களை அவர்கள் இனம் கண்டால், அவற்றினை குப்பையில் எறிவதை தவிர்த்து, உங்களுக்குத் திருப்பித் தருவார்கள்.இரண்டாவதாக, தனியுரிமைக் கொள்கைகளின் (privacy policy) அடிப்படையில், நீங்கள் விரும்பும் அளவிற்கு ஆவணப் பொருட்களை அணுகலுக்கு வழங்கலாம். மேலும் அவற்றை “Digitalarkivet.no” (எண்ணிய (digital) வழி அணுகலுக்கான வலைத்தளம்) இல் கிடைக்கச் செய்யலாம். ஆவணகத்துடன் உங்கள் “ஒப்படைத்தல்” அல்லது “வைப்பு” ஒப்பந்தத்தில் இந்த வகையான விவரக் குறிப்புகள் அனைத்தும் செய்யலாம்.

ஒரு ஆவணகத்தில் ஆவணப் பொருட்களை ஆவணப்படுத்துவதில் உள்ள நன்மைகள்:
  • காகித ஆவணப் பொருட்கள் தண்ணீர், தீ மற்றும் வெப்பநிலை போன்ற இயற்கை அழிவு மற்றும் சிதைவிலிருந்து பாதுகாக்கப்பட்டு, ஆவணப்படுத்தப்படும். காலப்போக்கில் வெப்பநிலை மற்றும் காற்று நிலை ஆகியவைகூட ஒரு காகித ஆவணப் பொருளில் உள்ள எழுத்தையும் அதன் காகிதத்தையும் சிதைக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியடையும் பொழுது எண்ணியப் பொருட்கள் (digital materials) வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய தளங்களிற்கு மாற்றப்படும். சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் ஒரு இடுகையை வெளியிடுவது ஒரு பதிவை (record) உருவாக்குவதற்கான முதல் படியாகும். அந்த பதிவு உங்கள் அல்லது உங்கள் அமைப்பின் செயற்பாட்டை உலகிற்கு அறியப்படுத்தும் செயல் ஆகும். ஆனால் அது ஆவணப்படுத்தல் அல்ல! ஆவணப்படுத்தல் என்பது ஒரு மையப்படுத்தப்பட்ட தளத்தில் அல்லது இடத்தில் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினர் தமது தேவைக்கேற்ப தாம் தேடும் ஆவணத்தை எளிதாக இனம் கண்டு பாவனைக்கு உட்படுத்துதல் ஆகும். இணையத்தில் பதியும் இடுகைகள் என்பது கடலில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது போன்றதாகும்.
ஆவணகத்தில் ஆவணப்படுத்தலாமா? இல்லையா?

உங்கள் ஆவணத்தை ஒரு ஆவணகத்தில் “ஒப்படைத்தல்” அல்லது “வைப்பு” ஒழுக்கில் வழங்குவதற்கான நம்பிக்கை ஒரு கால வளர்ச்சியின் அடிப்படியில் உருவாகும் ஓர் செயல் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் முதல் கட்டமாக, ஆவணப்படுத்தல் பற்றிய புரிதலை ஏற்படுத்த ஒரு ஆவணகத்தைச் சென்று பார்வையிட ஒர் வாய்ப்பளியுங்கள். அதன்மூலம் ஆவணகத்துடனான ஒர் உறவை உருவாக்குங்கள்.

நான் முன்பு குறிப்பிட்டபடி, இவ்வாறான நம்பிக்கையையும் ஆவணப் புரிதலையும் உருவாக்குவது ஓர் சமூக செயல்முறை (social process) ஆகும். ஆனால் குறைந்தபட்சம், “ஆவணம் என்றால் என்ன?” என்ற இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள அடிப்படை விவரங்களை கருத்தில் கொண்டு உங்கள் உள்ளூர் ஆவண சேகரிப்பு செயற்பாடுகளை (local archival collection activity) செய்யுமாறு ஓர் தாழ்மையான வேண்டுகோள். மேலும் முக்கியமாக உங்கள் உள்ளூர் ஆவண சேகரிப்பு செயற்பாடுகளை (local archival collection activity) அடுத்த தலைமுறை பெற்றுக்கொள்வதற்கான சில திறவுகோல்களை உருவாக்குமாறும் ஓர் தாழ்மையான வேண்டுகோள். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் தமிழர்களின் வரலாற்றைக் கூறும் ஆவணங்களை தொடர்ந்து ஆவணப்படுத்த முடியும்.

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.


மேற்கோள்கள்:

 Journeyman Pictures (Producer). (2009, 19.07.2020). The Library Which Sparked a Civil War in Sri Lanka. Hentet fra https://youtu.be/cT6z8irTXHg

Nihari Film Circle and Productions (Producer). (2008, 19.07.2020). Burning Memories/எரியும் நினைவுகள். Hentet fra https://youtu.be/8kY0_Q0XYUM

[ii] IBC Tamil News (Producer). (2020, 19.07.2020). ஈழம் இலங்கையின் பூர்வீக பெயர்? | Eelam is Ancient Name Of Sri Lanka | Eelam history. Hentet fra https://youtu.be/hQjgraa5OUE

TamilNet. (2008). Eezham Thamizh and Tamil Eelam: Understanding the terminologies of identity. Hentet fra https://www.tamilnet.com/art.html?catid=99&artid=27012

Veluppillai, Alvappillai. (1997). Language.  Hentet fra https://www.tamilnet.com/img/publish/2015/11/Tamil_Language_and_Eelam_Tamils_by_Prof_A_Veluppillai_July_1997.PDF

படத்திற்கான மேற்கோள்:

Sri Kantha, Sachi. (2013). Book Burning in 1933 and 1981: Nazi and Sinhalese goons: style comparisons. Hentet fra https://sangam.org/book-burning-1933-1981/

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 5

03. யூலை 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

எந்த பதிவுகள் ஆவணம் ஆகின்றன?

1-1.jpg

அனைத்துப் பதிவுகளும் ஆவணப் பொருளாக இருக்காது. அடிப்படையில், ஒரு பரிவர்த்தனை அல்லது செயல்முறையின் விளைவாக உருவாக்கப்பட்ட பதிவே ஒரு ஆவணப் பதிவாகிறது.இதை ஓர் தமிழ் அமைப்புச் சூழலில் பார்த்தால்:ஒரு ஆண்டு விழாவை ஏற்பாடு செய்ய ஒரு அமைப்பு (organisation) முடிவு செய்துள்ளது. அமைப்பின் வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாக ஆண்டு விழாவில் ஒரு சிறு மலரை வெளியிடுவது என்ற முடிவு எட்டப்படுகின்றது. ஓர் மலர் ஆக்கக்குழு உருவாக்கப்படுகின்றது. அந்த அமைப்பு ஆண்டு விழா நிகழ்வில் அம்மலரை வெளியிடுகின்றது. பின்னர் அம்மலர் ஒரு ஆவணமாகின்றது. அம்மலரை உருவாக்குவது தொடர்பான ஏனைய பதிவுகளும் குறிப்பிட்ட செயல்பாட்டிற்கான ஆவணமாகின்றன.பொதுவாக, ஒரு நாட்டுக் குடிமகன் ஒரு சேவை / உதவி / ஆலோசனைகளுக்காக ஒரு அரசாங்கத்தையோ அல்லது ஒரு தனியார் அமைப்பையோ தொடர்பு கொள்ளும்போது பரிவர்த்தனைக்கான (transaction) செயல்முறை தொடங்குகிறது. உதாரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கான மழலையர் காப்பக விண்ணப்பம் ஒன்றை அனுப்பும் பொழுது, அல்லது ஒரு நபர் தனது விடுமுறையை மாற்றியமைக்க ஒரு பயண முகவருக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது பரிவர்த்தனைக்கான (transaction) செயல்முறை தொடங்குகிறது.

இதை ஒரு தமிழ் சூழலில் பார்த்தால், ஒரு தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்த ஒரு உதைபந்தாட்ட சுற்றுக்கிண்ணப் போட்டியில் பங்கேற்க ஒரு உதைபந்தாட்டக் கழகம் தனது விண்ணப்பப் படிவத்தை (காகிதம் அல்லது மின்னணு) நிரப்பும்போது ஒரு செயல்முறை அல்லது பரிவர்த்தனை ஆரம்பிக்கின்றது. பின்னர் உதைபந்தாட்டக் கழகம் ஏனைய உதைபந்தாட்டக் கழகங்களுடன் போட்டியில் கலந்துகொள்கின்றது. போட்டியின் முடிவில், உதைபந்தாட்டக் கழகம் வெற்றி தோல்வியைக் காணுகின்றது.

 

இதனை ஒழுங்கமைத்த தமிழ் அமைப்பால் இந்த உதைபந்தாட்டப் போட்டியின் பதிவுகளை உருவாக்கி ஆவணப்படுத்தினால், அந்த குறிப்பிட்ட நிகழ்வு 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் பல்வேறு கதைகளைச் சொல்லும். ஆவணப் பொருட்கள் ஒரு நிகழ்வின் விவர (detail level) மட்டத்திலும் (micro level) மற்றும் சமூக மட்டத்திலும் (macro level) தகவல்களை வழங்கும். உதாரணமாக, எத்தனை உதைபந்தாட்டக் கழங்கள் பங்கேற்றன, பங்கேற்பாளர்களின் வயது. இவை ஒரு காலம், மற்றும் சமூக கட்டுமானம் பற்றிய தகவல்களை வழங்கும். இப்பதிவு ஒரு உதைபந்தாட்டக் கழகம் பங்கேற்பதற்கான உறுதிப்படுத்தலாக அமையும், மேலும் அக்கழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் ஒர் சான்றாக அமையும்.எதிர் வரும் சந்ததியினருக்கு 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன் இவ்வமைப்பு குறிப்பிட்ட காலத்தில் மற்றும் இடத்தில் செயற்பட்டுள்ளது என்பதற்கு இவ்வாறான ஆவணங்கள் ஒரு சான்றாக அமையும். இந்த ஆவணப் பொருட்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடந்த காலத்தைப் பற்றிய பல்வேறு அறியப்படாத கதைகளை சொல்லும். அந்த ஆவணங்கள் தமிழரின் கலை, பண்பாடு, விளையாட்டு, வாழ்வியலை பிரதிபலிக்கும்.

இதைத் தவிர்த்து உதாரணமாக விளையாட்டு அல்லது சுகாதார மாணவர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்களுக்கான ஆராய்ச்சி பொருட்களாக அமையும்.இவை பதிவுகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பொது அணுகலுக்குக் கிடைக்கப்பெற்றால் மட்டுமே சாத்தியமாகும்.இந்த வகையான ஆவணப் பொருட்கள் (documents) கவலைக்குரிய நிலையில் உள்ளன. அவை தனியார் நபர்களின் கைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய ஆவணப் பொருட்கள் குப்பையில் எறியப்பட்டு, அழிக்கப்பட்டு மற்றும் இழக்கப்பட்டுள்ளன. பல ஆவணங்கள் இருக்கிறதா அல்லது இல்லையா என்று பலர் கவலை கொள்கின்றார்கள். ஏனெனில் அந்த பதிவுகள் உருவாக்கப்பட்டது அவர்களுக்குத் தெரியும்.மறுபுறம், நிறுவனங்கள் தங்கள் அன்றாட செயற்பாடுகளில் தாம் அறியாமலேயே பதிவுகளை உருவாக்குகின்றனர். ஆனால் அவைகளை பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்பதில் உள்ள பெறுமதியைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் உள்ளார்கள். இருப்பினும், தமிழ் அமைப்புகளுக்கு தங்களது சொந்த அமைப்பு அல்லது பிற அமைப்புகளின் வெளியீடுகள் மட்டுமே ஆவணம் என்ற பொதுவான புரிதலை கொண்டுள்ளனர். நூல், கையேடு, ஒளியும் ஒலியும், ஒலி நாடா, இறுவட்டு, பத்திரிகை போன்றவை. ஆனால் இவைகூட கவலைக்குரிய நிலையிலேயேதால் உள்ளன.

 

எதிர்காலம்:நீங்கள் வெளியீடுகளை (நூல், கையேடு போன்றவை) உருவாக்கினாலும், அல்லது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அன்றாட செயற்பாடுகளின் பதிவுகளை உருவாக்கினாலும், ஆவணப் பொருட்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க பின்வரும் மூன்று கூறுகளை கவனத்தில் கொள்ளுங்கள்.1. தோற்றம் (origin) – பதிவை உருவாக்கியவர், எந்த அமைப்பு அதை வெளியிட்டது2. நோக்கம் (purpose) – பதிவு ஏன் உருவாக்கப்பட்டது. பொதுவாக உள்ளடக்கம் இதனை கூறும்.3. சூழல் (context) – பதிவின் திகதி, நேரம், விளக்கம், பதிவிற்கு முன் மற்றும் பின் நிகழ்ந்த செயற்பாட்டுப் பதிவுகள்.

இதனை கையேடு உருவாக்க செயல்முறையில் பார்த்தால்:ஒரு தமிழ் அமைப்பு ஒரு ஆண்டு மலரை உருவாக்கும் போது, மலரில் பின்வருவனவற்றின் தகவல்களை சேர்க்க வேண்டும்.• கையேட்டை உருவாக்கியவர்கள் – மலர்க் குழு• இதை வெளியிட்டவர் – அமைப்புபின் பெயர்· பலரின் உள்ளடக்கம் கையேட்டின் நோக்கத்தைக் கூறும்• திகதி, வெளியீட்டு இடம்· ISBN எண் இருக்கலாம் – இந்த எண் நூலகங்களில் விநியோகிக்க எளிதாக இருக்கும்.

இதனை ஒரு அமைப்பின் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் தினசரி பதிவுகள் உருவாக்கும் செயல்முறையில் பார்த்தால்:எனது இடுகைகளை உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். உதாரணத்திற்கு “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” ஒரு அமைப்பு என்று கற்பனை செய்யுங்கள். எனது தோழி, இச் சந்தர்பத்தில் இவ்வமைப்பின் பயனாளர் (user) ஏன்று வைத்துக் கொண்டால், அவர் தனது விசாரணையை (inquiry) இந்த அமைப்பிற்கு அனுப்பி தகவல் / ஆலோசனை / வழிகாட்டல் / சேவை கேட்டார். அவ்விசாரணை இந்த அமைப்பு பெற்றுக் கொண்டவுடன் ஒரு பதிவு உருவாக்கும் செயல்முறை தொடங்குகிறது. இந்த விசாரணை முகநூல் இடுகைகளாக பரிசீலிக்கப்பட்டு, அந்த பயனாளரின் (user) விசாரணைக்கு பதில் அளிக்கப்படுகின்றது. எனவே, ஒவ்வொரு இடுகையும் ஒரு பரிவர்த்தனையின் ஒரு பகுதியாகும்.ஒரு அமைப்பின் உள்ளக பதிவேட்டு முறைமையை பற்றி செயல் விளக்கமளிக்க, முன்னர் குறிப்பிட்ட மூன்று கூறுகளுடன் எனது இடுகைகளை உருவாக்கியுள்ளேன்.

1) தோற்றம்:முகநூல் இடுகையின் (document) எழுத்தாளர், (கு. பகீரதி).இடுகையின் வெளியீட்டாளர் / அனுப்புநர் (நோர்வே வாழ் தமிழர் ஆவணம்).இந்த இடுகைகளில் பயன்படுத்தப்பட்ட பிற வலைத்தளங்கள் / வெளியீடுகள் / தகவல்களை உருவாக்கியவர்கள் அல்லது வெளியீட்டாளரையும் குறிப்பிடப்பட்டுள்ளது.2) நோக்கம்:ஆவணக்காப்பக விழிப்புணர்வு மற்றும் ஆவணக்காப்பக பணிகள் பற்றிய தகவல்கள்.3) சூழல்:ஒவ்வொரு இடுகையின் உள்ளடக்கமும் சூழலைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. உதாரணமாக, “கடந்த இடுகையிலிருந்து சில குறிப்புகள்” மற்றும் “கடந்த இடுகையின் திகதி”, “தற்போதைய இடுகைக்கான திகதி மற்றும் இடம்”, “அடுத்த இடுகையில் என்ன எதிர்பார்க்கலாம்”. இந்த தகவல் ஒரு ஆவணப் பொருளைச் (document) சுற்றி இருக்கும் சூழலை விளக்கும். இவை ஒரு இடுகைக்கு (இங்கு இது ஒரு ஆவணப் பொருள் – document) முன்னும் பின்னும் தொடர்புபட்டுள்ள பிற இடுகைகளை குறித்த தகவலை தரும். இதனூடாக ஒரு தொடர்ச்ரியைப் பேணலாம். இறுதியில், இந்த இடுகைகள் ஜூன் 13 ஆம் தேதிக்கு முன்னர் வைக்கப்பட்ட விசாரணையின் ஆவணப் பொருட்களாகின்றன (archival materials).எனவே, இந்த ஆவணப் பொருட்களின் பதிவு உருவாகுனர் (records creator) “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” ஆகும். இந்த ஆவணப் பொருட்கள் ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்திற்கு வழங்கப்படும்போது, அந்த பொருட்கள் “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” என்ற பெயரில் பாதுகாக்கப்படும். இருப்பினும், தனிப்பட்ட சேகரிப்புக்கள் (personal colletion, personal archive), ஆவணச் சேகரிப்பாளரின் பெயரில் ஆவணப்படுத்தப்படும்.

Metadata – தகவல் பற்றிய தகவல்“தோற்றம்”, “நோக்கம்” மற்றும் “சூழல்” பற்றிய தகவல்கள் Metadata என்று அழைக்கப்படுகின்றன. அவை குறிப்பாக மின்னணு (electronically) முறையில் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட (digitalised) ஆவணங்களுக்கு முக்கியமானவை. Metadata ஆவணங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதி முக்கியமான கூறுகள்.ஒரு அமைப்பிற்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விசாரணைகளின் பதிவுகளை மேலாள அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் பதிவேட்டிற்கான கணினி நிரலைப் பயன்படுத்துகின்றன. இவை மின்னணு முறையில் உருவாக்கப்பட்ட பதிவுகள் மற்றும் scan/ digitalise பண்ணப்பட்ட பதிவுகளில் Metadata வை பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகளில் பல தமிழ் அமைப்புகளும் தனிநபர்களும் ஈடுபடுகின்றனர். டிஜிட்டல் மயமாக்கும்போது “தோற்றம், நோக்கம் மற்றும் சூழல்” ஆகிய மூன்று கூறுகளும் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும். டிஜிட்டல் மயமாக்கல் எனும் செயற்பாடு ஒரு அசலை பிரதி எடுக்கும் செயற்பாடு என்பதனை மறந்துவிடக்கூடாது. டிஜிட்டல் மயமாக்கலைச் சுற்றியுள்ள நடைமுறைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க நோர்வேயிய ஆவண நிறுவனங்களை தொடர்பு கொண்டேன். எனக்குக் கிடைக்கப் பெற்ற ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்:“அவர்களது செயற்பாடுகள் குறித்த பொதுக் கூட்டங்கள், வருடாந்த கூட்டங்கள், வாரியக் கூட்டங்கள் மற்றும் பிற தொழில்முறை ஆவணங்களை அவர்கள் வைத்திருப்பது முக்கியம். எல்லா வகையிலும், scan/ digitalise செய்யும் போது கூட காகித மூலங்களை வீசி எறிந்துதிடக்கூடாது.”அதாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மூலத்தை பேணிப் பாதுகாத்தல் இன்றியமையாதது!

தொடரும்…அடுத்த இடுகை: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 6: ஆவணக்காப்ப நிறுவனத்தில் ஆவணங்களை பேணுவது.

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.

உள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறுஉருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 4

25. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

ஆவணப் பொருட்கள் (archival materials) என்றால் என்ன?

  • article-2017-11-17-0836-ess_17-0836-03.j
புகைப்படம்: Ørnelund, Leif

நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, ஒரு ஆவணம் என்பது «எதிர்கால வாசிப்பிற்காக, கேட்டலுக்காக, காண்பிப்பிற்காக அல்லது பரிமாற்றத்திற்காக ஒரு ஊடகத்தில் பதியப்படும் தர்க்கரீதியாக வரையறுக்கப்பட்ட தகவல்கள்» (“ei logisk avgrensa inforasjonsmengd som er lagra på eit medium for seinare lesing, lyding, framsyning eller overføring ”.)ஒரு பதிவு / ஆவணம் என்பது «ஒரு நிறுவனத்தின் முடிவு, வழக்கு மேலாண்மை (case mangement) மற்றும் நிர்வாக செயற்பாட்டின் ஒர் அங்கமாக உருவாக்கப்பட்ட அல்லது செயற்பாட்டில் வந்த ஆவணங்கள்/ பத்திரங்கள் (documents)» (“Dokument som vert til som lekk i ei verksemd»).

பாரம்பரியமாக, ஒரு ஆவணம் காகிதத்தை மையப்படுத்தியே இருந்தது. ஆனால் மின்னணு யுகத்திலிருந்து, ஒரு ஆவணம் தொழில்நுட்ப நடுநிலை மற்றும் சுயாதீன நிலையை அடைந்தது. எனவே, ஒரு ஆவணப் பொருள் பல்வேறு தகவல் தாங்கிகளில் காணலாம். உதாரணமாக அவை காகிதத்தில் வாசிக்கக்கூடிய எழுத்தாக, தரவுத்தளங்களில் டிஜிட்டல் கோப்புகளாக, வரைபடங்களாக, புகைப்படங்களாக, திரைப்படங்களாக, ஒளி நாடாக்களாக மற்றும் வேறு பலவகையாக இருக்கலாம். “பதிவேடு” மற்றும் “ஆவணம்” ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு: (1) பாவனையில் உள்ள ஆவணம் “பதிவேடு”. இது ஆவணத்தை உருவாக்கும் நிறுவனத்தில் (records creator/ பதிவேட்டு உருவாக்குனர்) தினசரி பயன்பாட்டில் உள்ளவை மற்றும் (2) முடிக்கப்பட்ட, வரலாற்று ஆவணங்கள் – “ஆவணம்”. அதாவது பதிவுகள் உருவாக்கிய நிறுவனத்தின் பயன்பாட்டில் இல்லாத ஆவணங்கள். எனவே, முடிவிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் சுமார் 5-8 ஆண்டுகள் பழமையான ஆவணங்களே ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றன.

கீழே பல்வேறு வகையான ஆவணங்களின் சில எடுத்துக்காட்டுகள் இணைத்துள்ளேன். பல்வேறு வகையான தகவல் தாங்கிகளாக ஒரு ஆவணப் பொருள் இருக்கலாம் என்பதை சித்தரிக்கவே இந்த ஒரு சில எடுத்துக்காட்டுகளை எடுத்துள்ளேன்.

ஆவணப் பொருள்: கடிதம்Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: Norwegian Tamil Health Organisationமுன்னர், இவ்வாறான கடிதங்கள் காகிதத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது இது மின்னணு கோப்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் இந்த அமைப்பின் நாளாந்த பாவனையில் உள்ள பதிவிற்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த ஆவணப் பொருள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

ஆவணப் பொருள்: புகைப்படம்புகைப்படக்காரர்: தெரியவில்லைRecords creator/ பதிவேட்டு உருவாக்குனர்: முத்தமிழ் அறிவாலயம் (ஒஸ்லோவில் உள்ள ஓர் தமிழ் பள்ளி)

ஆவணப் பொருள்: புகைப்படம்Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: Prateesh Memography (Photographer)ஒஸ்லோவில் நடைபெற்ற தமிழ் முரசம் வானொலியின் நிகழ்வை சுயாதீன புகைப்பட கலைஞர் பதிவு செய்ததின் புகைப்படங்கள்.

ஆவணப் பொருள்: வரைகலைRecords creator/ பதிவேட்டு உருவாக்குனர்: கிரி திருணாவுக்கரசுஇக்கலைஞர் பல்வேறு நோக்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் வரைகலை உருவாக்கியுள்ளார்.

ஆவணப் பொருள்: ஆண்டு மலர்Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: நோர்வே தமிழ் சங்கம்வலைத்தள ஆவணக்காப்பகமான நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு பொது அணுகலுக்கு விடப்பட்டுள்ளது. இது ஒரு முடிவிற்கு கொண்டுவரப்பட்ட மற்றும் சுமார் 5-8 ஆண்டுகளிற்கு மேற்பட்ட பழமையான ஒரு ஆவணப் பொருளுக்கான எடுத்துக்காட்டு.

ஆவணப் பொருள்: இணையத்தளப் பக்கம் (கட்டுரை)Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: நமது மலையகம்நமது மலையகம் நோர்வே தமிழ் சங்கத்தின் 1983 ஆம் ஆண்டு ஆண்டு மலரை மையப்படுத்தி எழுதிய கட்டுரை.

ஆவணப் பொருள்: ஒலியும் ஒளியும்Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: தாய்நிலம் கலையகம்ஒசுலோவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடமான அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படம்.

 

ஆவணப் பொருள்: ஒலியும் ஒளியும்Records creator/ பதிவேட்டு உருவாக்குனர்: Vaseeharan Creationsஇப்பதிவில் ஒரு கனேடிய தமிழரை நேர்காணல் செய்தாலும், இத்தயாரிப்பு நோர்வேயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பைச் சேர்ந்தது. எனவே இந்த ஆவணம் நோர்வேயில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

 

ஆவணப் பொருள்: ஒலிRecords creator/ பதிவேட்டு உருவாக்குனர்: தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பிரான்சில் உள்ள அமைப்பு. புலம்பெயர் தமிழர்களுக்கான கற்பித்தல் பொருட்களை உருவாக்கும் செயற்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த ஒலிக்கோப்பு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை பிரான்சில் உருவாக்கியிருந்தாலும், நோர்வேயில் உள்ள தமிழ் பள்ளிக்கூடங்கள் தமது கற்பித்தல் செயற்பாட்டில் பயன்படுத்தியிருந்தால், அவை நோர்வே பள்ளியின் செயற்பாட்டு ஆவணங்களிலும் இருக்க வேண்டும்.

நோர்வே தமிழ் சங்கத்தின் 1983 ஆம் ஆண்டு ஆண்டு மலரைத் (1983) தவிர, ஏனைய பதிவுகள் அனைத்தும் சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் மட்டுமே உள்ளன. அனைத்து செயற்பாடுகளும் பதிவு உருவாக்கல் நிலையில் (பதிவேடு) உள்ளன. ஆனால் அவை ஆவண நிலைக்கு நகர்த்தப்பட வேண்டும்.ஒருவேளை வலைத்தளம் மூடப்பட்டால் அல்லது சமூக ஊடகங்கள் இப்பதிவுகளை முடக்கினால் அல்லது இழந்தால், ஆவணப் பொருட்கள் என்றென்றும் இழக்கப்படும். இல்லாவிடில், தனிநபர்கள் தங்கள் வீடுகளில் பிரதி அல்லது அசல் வைத்திருக்க வேண்டும். சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் பரவியிருக்கும் பதிவுகளின் மற்றொரு சிக்கல் என்னவென்றால், பொருட்களைத் தேடுவதற்கு அதி கூடிய நேரம் எடுக்கும். பெரும்பாலான நேரங்களில், தேடுவோர் பொருத்தமான பதிவுகளை கண்டுபிடிக்க மாட்டார். மறுபுறம் ஒழுங்கற்றதாகவும் நம்பகத்தன்மை அற்றதாகவும் இருக்கலாம். ஆனால் பதிவுகள் ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்தில் பாதுகாத்தால், அவை ஒரே இடத்தில் சேகரிக்கப்படும். இது நேரச் சிலவை மிச்சப்படுத்தும். இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் சேமித்து பாதுகாக்கப்படும் ஆவணங்கள் உலகத் தமிழர்களுக்கான ஆவணப் பாரம்பரியமாக வடிவெடுக்கும். தமிழரின் சமூக ஆவணங்களாக (social documentation) அமையும்.

தமிழர்களின் ஆவணக்காப்புக் குறித்து தமிழர்கள் மீண்டும் கலந்துரையாட தொடங்கியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்த உள்ளக மற்றும் சமூக மட்டக் கலந்துரையாடல்கள், தமிழர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை எவ்வாறு மற்றும் எங்கு பாதுகாப்பது என்பது குறித்து தகுந்த தீர்வைக் காண அவர்களுக்கு உதவும். ஆனால் அமைப்புகளிற்குள் கைப்பற்றப்பட்டு (captured) பதியப்படும் பதிவுகள் (பதிவேடு) இல்லாமல், ஆவணம் எதுவும் இருக்காது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தகவலுக்கு:https://tamilarchive.ca/project/about

தொடரும்…

அடுத்த இடுகை: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 5: எந்த பதிவுகள் ஆவணம் ஆகின்றன?

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 3

21. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்?

  • screenshot-2020-06-21-at-13.33.55.png?w=
Ole Friele Backer

பதிவேடு என்பது ஒரு நிறுவன கட்டமைப்பின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறைமை ஆகும்.ஒரு நிறுவன கட்டமைப்பில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் செயற்பாடுகளின் தகவல்களை அவை கைப்பற்றி பதிவு செய்யும் முறைமை. 1990 க்கு முன்னர், காகிதத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்து பதிவேட்டு முறைமையும் இருந்தது. மின்னணு (electronic) சகாப்தம் தொடங்கியபோது, பதிவுவேட்டு முறைமையும் கணினி நிரலில் பதிவு செய்யும் முறைமைக்கு மாற்றப்பட்டது. என்றலும் இன்றும் சில நிறுவனங்களில், சில நாடுகளில் காகித அடிப்படையிலான பதிவுவேட்டு முறைமுமை நடைமுறையில் உள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த நாடுகளில் பல்வேறு வகையான நிறுவன கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். தொண்டு நிறுவனங்கள் ஒருபுறமும். அதாவது, சங்கங்கள், கழகங்கள், அறக்கட்டளை போன்ற இலாப நோக்கற்ற நிறுவன கட்டமைப்புகள். மறுபுறம், இலாபம் ஈட்டும் நிறுவன கட்டமைப்புகள். அதாவது அங்காடிகள், ஏனைய வணிக நிறுவனங்கள்.இருப்பினும், இந்த இரண்டு வகைகளிற்கு இடையிலும் சில நிறுவன கட்டமைப்புகள் உள்ளன.

அனைத்து தமிழ் அமைப்பு கட்டமைப்புகளையும் (“இலாப நோக்கற்ற” மற்றும் “இலாபம் ஈட்டும்” மற்றும் “இடை நிலை”) வகைப்படுத்தினால், இவ்வாறு இருக்கலாம்:

• கல்வி நிறுவன கட்டமைப்புகள் – தமிழ் பள்ளிகள், கலைப்பாட நிறுவனங்கள், பாடநூல் மற்றும் தேர்வு வாரிய நிறுவனங்கள் போன்றவை.• ஊடக நிறுவன கட்டமைப்புகள் – தொலைக்காட்சி, வானொலி, வலைத்தளம், செய்தித்தாள் போன்றவை.• அரசியல் நிறுவன கட்டமைப்புகள் – ஒரு அரசியல் கோட்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு• மனித உரிமைகள் / உதவி நிறுவன கட்டமைப்புகள்• மத நிறுவன கட்டமைப்புகள்• சமூகம்சார் நிறுவன கட்டமைப்புகள் – தமது தாயகத்தில் உள்ள ஓர் ஊரின் பெயரில் புலம்பெயர் நாட்டில் இயங்கும் சங்கம் / இணையம் / மன்றம் போன்றவை. அதோடு பொதுவான தமிழ் சங்கங்களும் உள்ளடங்கும்.• (வேறு ஏதேனும் வகையில் தமிழ் நிறுவனக் கட்டமைப்பு இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள்)

எவ்வாறாயினும், “மனித உரிமைகள் / உதசி நிறுவன கட்டமைப்புகள்” தவிர ஏனைய பல நிறுவன கட்டமைப்புகளும் புலம்பெயர் மற்றும் தாயகம் வாழ் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கான செயற்பாடுகளையும் அவர்களின் செயல்நோக்கின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன.

இன்று முதல் எளிமைபடுத்துவதற்காக, அனைத்து நிறுவன கட்டமைப்பு வகைகளையும் குறிக்க “அமைப்பு” (organisation) எனும் சொல்லை ஒரு பொதுவான சொற்கூறாகப் பயன்படுத்துவேன். தேவையின் அடிப்படையில் தமிழ் அமைப்புகளின் வகைப் பெயரைக் குறிப்பிடுவேன்.நான் «அமைப்புகளை» மையப்படுத்தினாலும், தனிப்பட்ட கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களின் பணி தமிழர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்திற்கு (historical and cultural heritage) முக்கிய பங்கையும் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. உதாரணமாக, புகைப்படக் கலைஞர்களும் அவர்களின் புகைப்படங்களும் அத்தியாவசிய ஆவணக்காப்பகப் பொருட்கள் (archival materials). ஒரு படம் 1000 சொற்களுக்கு சமமானவை என்று கூறுவர்.தமிழ் அமைப்புகள் ஒழுங்கமைக்கும் அனைத்து நிகழ்வுகளின் புகைப்படங்கள் தமிழ் freelance புகைப்படக் கலைஞர்களிடம் உள்ளன. இதே போன்று தனிப்பட்டமுறையில் செயல்படும் தமிழ் எழுத்தாளர்கள், மற்றும் ஆய்வாளர்களும் உள்ளடங்கும். இவர்கள் தமிழர்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்திற்கு பெரும் பங்களிப்பாளர்கள்.

இங்கே நோர்வே தேசிய ஆவக்காப்பகத்திற்கான இணைப்பு உள்ளது. இரண்டாம் உலகப் போரில் போர் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய Ole Friele Backer பற்றி அவர்கள் எழுதுகிறார்கள். புகைப்படங்கள் digital அணுகலுக்கு விடப்பட்டுள்ளது. பெற இரண்டாவது இணைப்பைக் அழுத்துங்கள். 

உலகெங்கிலும் பல தமிழ் அமைப்புகள் பல்வேறு நிலைகளில் பல்வேறு செயற்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் பெரும்பான்மையான அமைப்புகளில் பதிவுவேட்டு முறைமை ஒரு கவலைக்குரிய நிலையிலேதான் உள்ளது. ஏதேனும் பதிவுகள் வைக்கப்பட்டிருந்தால், அவை பொது அணுகலுக்கு இல்லாமல் உள்ளது. அவ்வமைப்பின் உள்ளக பயன்பாட்டிற்கும் அணுக முடியாமல் உள்ளது. எனது எதிர்கால இடுகைகளில் அணுகல் மற்றும் பயன்பாட்டின் நோக்கத்தைப் எழுதுகின்றேன்.

எனவே இந்த தமிழ் அமைப்புகள் ஏன் பதிவுகளை வைத்திருக்க வேண்டும்? (இணைக்கப்பட்ட படங்களை பாருங்கள்)

1) பதிவேடு – record keeping:ஒரு அமைப்பின் நிர்வாக கட்டுப்பாட்டைக் கையாளுவதே பதிவுகளை உருவாக்குவதன் முதன்மை நோக்கம். உள்ளக நிர்வாக கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பதிவேடு அவசியம். இது நிறுவனத்தின் உரிமைகளையும், வாடிக்கையாளர் / நுகர்வோர் / பயனாளிகளின் உரிமைகளையும் பாதுகாக்கும். இதன்மூலம் பதிவேடு ஒரு அமைப்பிற்குள்ளும் சமூகத்திலும் ஜனநாயகத்தை மேம்படுத்தும்.

  • screenshot-2020-06-13-at-22.40.17-2.png?

பதிவுகளின் இரண்டாம்நிலை நோக்கம் சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான தகவற்பெறுமதி (informational value) மற்றும் ஆதாரப் பெறுமதி (evidential value).தகவற்பெறுமதி (informational value): ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளின் பதிவுகள் ஒரு சம்பவம், நிகழ்வு, சமூகச் சூழல் (phenomenon) அல்லது ஒரு சகாப்தம் பற்றிய தகவல்களைத் தரும்.ஆதாரப் பெறுமதி (evidential value): ஒரு பதிவு என்பது ஒரு செயல், செயல்பாடு அல்லது ஒருவரின் உரிமைக்கான ஆதாரம் ஆகும்.

2) தெரிவு» – Appraisal:பதிவின் தகவற்பெறுமதி மற்றும் ஆதாரப் பெறுமதியின் அடிப்படையில் பதிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்திற்கு நீண்ட கால ஆவணப்படுத்தலுக்கு வழங்கப்படும்.தகவற்பெறுமதி மற்றும் ஆதாரப் பெறுமதிக் கொண்ட பதிவுகள் ஒரு வரலாற்று மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை நமக்குத் தருகின்றன. இந்த பாரம்பரியம் பல்வேறு சமகால பயன்பாடுகளுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கு நாம் கணிக்க முடியாத எதிர்கால பயன்பாடுகளிற்கான ஆவணங்களாகக் உள்ளது.

3) ஆவணக்காப்பு – Archive:பதிவுகள் நீண்ட கால பாதுகாப்பட்ட ஆவணப்படுத்தலுக்கு ஒரு ஆவணக்காப்பக நிறுவனத்தில் வழங்கப்படும். நோர்வேயிய ஆவணக்காப்பகச் சட்டத்தின் அடிப்படியில் ஒரு தனிநபரைப் பற்றிய தனிப்பட்ட அல்லது இரகசிய தகவல்களைக் (personal and confidential information) கொண்டிருக்காத ஆவணங்கள் பொது அணுகலுக்கு விடப்படும்.

மனிதர்கள் தமது நினைவுத்திறண்களை இழக்கலாம். அதனால் தகவல்கள் திரிவுபடுத்தப்படலாம். அவர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் மனநிலை அல்லது நிலைப்படுகளில் மாற்றம் கொள்ளலாம். ஆனால் பதிவுகள்/ ஆவணங்கள் ஒரு செயற்பாடு நிகழ்ந்த அந்த நேரத்தை உறைய வைத்து காலம் காலமாக பாதுகாத்து நிற்கும்.என்றாலும் ஒரு பதிவை/ ஆவணத்தை நேர்மையான முறையில் அனைத்து ஆவணப் பெறுமதிகளும் கொண்ட உருவாக்கியிருந்தாலும், அவ்வாவணம் கூறும் தகவல் உண்மையானதாக இருக்கும் என்பது இல்லை.

அடிப்படையில் பதிவு/ ஆவணம் எங்கள் செயல்பாட்டிற்கான நினைவுகளையும் ஆதாரங்களையும் கைப்பற்றி பாதுகாக்கும் செயல்முறையாகும்.

தொடரும்…

அடுத்த இடுகை: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 4: ஆவணப் பொருள்கள் (archival materials) என்றால் என்ன?

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகலுக்கு (public access) வழியமையுங்கள்.

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – 2

16. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய போதிய புரிதல் இல்லை?

கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்ட தமிழ் சங்க காலம் மற்றும் தமிழ் எழுத்துவடிவமான «தமிழ் பிராமியை », கீழடி தொல்பொருள் சான்றுகள் இன்னும் சுமார் 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. அதாவது கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் பெற்ற ஓர் குடியாக வாழ்ந்தார்கள் என்றதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டது.ஏனெனில், சுமார் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் நாகரீகம் பெற்ற ஓர் குடியாக வாழ்ந்தார்கள் என்றால், எப்பொழுது தமிழ் நாகரீகம் வளர ஆரம்பித்தது என்ற கேள்வி எழுகின்றது.

  • 2nd_century_bce_tamil_brahmi_inscription
தமிழ்-பிராமி (தெரியாத மூலம்)

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் பானைகளின் கீறல்கள், தமிழர் அன்றே தமிழ் எழுத்துக்களான தமிழ் பிராமியை பயன்படுத்தி, அவை யாருக்கு சொந்தமானவை என்பதை அடையாளப்படுத்தியுள்ளனர். இதுவும் ஒர் பதிவுதான். இன்னும் ஓர் உதாரணம், தமிழ் மன்னர்கள் தமது வரலாற்றை பதிய கல்வெட்டுகளாக ஆவணப்படுத்தியுள்ளார்கள்.

ஒப்பிடுவதற்கான தகவலுக்கு:https://www.bbc.com/tamil/india-49754995https://worldtamilforum.com/his…/14th-century-inscription-2/https://www.tamilnet.com/art.html?catid=13&artid=37488https://www.tamilnet.com/art.html?catid=79&artid=35707http://conf.jfn.ac.lk/…/JUICE2014-Tamil%20Brahmi%20Inscript…https://www.archaeology.lk/6532

தமிழர்கள் புலம்பெயர்ந்த காலம் முதல், புலம்பெயர் நாடுகளில் உருவான தமிழ் அமைப்புகளுக்கான இயக்க சக்திகளாக இருந்து வந்துள்ளனர். மறுபுறம், பல தமிழர்கள் தனி மனித கலைஞர்களாக அல்லது படைப்பாளிகளாக செயற்பட்டு வருகின்றனர்.தனிநபர்களால் உருவாக்கப்பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட பதிவுகள் பொதுவாக “சேகரிப்பு” (collection) அல்லது “தனிப்பட்ட ஆவணம்” (personal archive) என்று அழைக்கப்படுகின்றன. தனிநபர்களால் உருவாக்கப்பட்ட பதிவுகள் சமூகத்துடனான தொடர்பாடலின் விளைவாக இருக்கலாம், ஆனால் அவசியமில்லை. இருப்பினும், தமிழ் அமைப்புகள், ஏனைய அமைப்புகளைப் போலவே, சமூக தொடர்பாடலின் அடிப்படையிலே செயல்படுகின்றன.

நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, அரசாங்க அமைப்புகளைத் தவிர அனைத்து நிறுவன கட்டமைப்புகளும் “தனியார் நிறுவனங்கள்” (private organisation). எனவே, அவை “தனியார் ஆவணத்தை” (private archive) உருவாக்குகின்றன. “தனியார் ஆவணம்” பல பிரிவுகளில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பதிவுகள் ஒரு “நிறுவன ஆவணம்” (organisational archive) ஆகும். “தனிப்பட்ட ஆவணம்” மற்றும் “சேகரிப்பு” என்பது “தனியார் ஆவணத்தின்” மேலும் இரண்டு பிரிவுகளாகும்.நோர்வே ஆவணக்காப்பகச் சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்பது கடமை அல்ல (பொருளாதாரம் சார்ந்த ஆவணத்தைத் தவிர்த்து). அதோடு தனியார் நிறுவனங்கள் தமது பதிவுகளை நீண்டகால ஆவணக்காப்பிற்காக கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இல்லை. ஆயினும்கூட, பெரும்பாலான நோர்வேயிய தனியார் நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது சொந்த நிர்வாக பயன்பாட்டிற்காக, மேற்பார்வை ஒழுங்கிற்காக மற்றும் ஜனநாயகத்திற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பதிவேட்டு நடைமுறையை மேற்கொள்கின்றனர்.இன்நிலையால் நோர்வே ஆவணக்காப்பக நிறுவனங்கள் «தனியார் ஆவணங்களை” (private archive) விரும்பவில்லை என்பது அர்த்தம் அல்ல என்பதை அழுத்திக் கூற விரும்புகின்றேன். அவர்களிடம் «தனியார் ஆவணங்கள்” (private archive) பற்றாக்குறையாக உள்ளது. அதிலும் புலம்பெயர் சமூகங்களுடைய ஆவனங்கள் பற்றாக்குறையாக உள்ளது.

பதிவேடு மற்றும் ஆவணப்படுத்தல் “கட்டாயக் கடமையாக” இல்லாததன் விளைவு தனியார் நிறுவனங்களுக்கு பெரும் ஆபத்தைத் தருகின்றன. குறிப்பாக புலம்பெயர்ந்த சமூகத்தினரின் அமைப்புகள் ஆவணக்காப்பிலிருந்து விடுபட்டுப் போகும் ஆபத்தை இன்னும் அதிகரிக்கினறது. ஏனெனில் ஆவணங்கள் எங்கள் உரிமைகளை நிலைநாட்டி, வரலாற்றில் எமது இருப்பை நிலைநிறுத்துகின்றன.05ம் திகதி யூன் மாதம் 2020 அன்று எனது இடுகையில் நான் எழுதியது போல, நோர்வே ஆவணக்காப்பக நிறுவனங்களில் தமிழ் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் (historical and cultural heritage) தடயங்கள் எதுவும் இல்லை.மறு புறம், தமிழர்கள் தங்கள் ஆவணங்களை அரச ஆவணக்காப்பக நிறுவனங்களுக்கு வழங்குவதில் சந்தேகமும் அச்சமும் கொண்டிருப்பதையும் நான் அவதானித்தேன். இதைப் பற்றி எனது எதிர்கால இடுகைகளில் எழுதுகின்றேன்.

«ஆவணக்காப்பக கடமை” இல்லாதது ஆவணக்காப்பகத்தைப் பற்றிய புரிதல் அல்லது விழிப்புணர்வை மட்டுப்படுத்துகின்றது. ஏனெனில் ஆவணகாப்பகத்தைப் பற்றி சிந்திப்பதற்கான தேவையை அது வலியுறுத்தவில்லை. என்றாலும் தனியார் நிறுவனங்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த சமூகத்தினரின் அமைப்புகளுக்கு அவர்களின் நிர்வாகக் கட்டுப்பாடு, ஜனநாயகம் மற்றும் பண்பாட்டு, வரலாற்று நடவடிக்கைகளை பதிவு செய்ய ஆவணக்காப்பக விழிப்புணர்வு அத்தியாவசியமானது.

ஆவணக்காப்பு பற்றிய புரிதல் அல்லது விழிப்புணர்வு இல்லாததற்கான இன்னுமோர் முக்கிய காரணி என்னவென்றால், தமிழர்கள் ஏற்கனவே தன்னார்வலர்களாக பணியாற்றுகிறார்கள். ஒரு தமிழ் அமைப்பை இயக்குவதற்கான பங்களிப்பை செய்வதற்காக தங்களது ஓய்வு நேரத்தை தியாகம் செய்கிறார்கள். தமிழ் அமைப்புகளுக்கு ஏற்கனவே மனிதவளம், பொருள் வளம் மற்றும் நேரப்பற்றாக்குறை உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு சமூகப் பொறுப்பையும் தாங்கி நிற்கின்றார்கள் என்பதை அவர்கள் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றி எனது அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

தொடரும்…

அடுத்த இடுகை: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 3: ஏன் தமிழ் அமைப்புகள் பதிவுகளை உருவாக்க வேண்டும்?

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகளுக்கு (public access) வழியமையுங்கள்.

′′ஆவணம்” என்றால் என்ன? – 1

13. யூன் 2020 அன்று “நோர்வே வாழ் தமிழர் ஆவணம்” எனும் முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் ஆவணக்காப்பு பற்றிய ஒர் புதிய அதிர்வலை அல்லது ஒரு பொதுச் சிந்தனை காணப்படுகின்றது. அவர்கள் பல்வேறு வலைத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கதைகளை உலகுக்கு சொல்ல வேண்டும் என்ற தூண்டுதலுக்கு உள்ளாக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் தங்கள் கதைகளை பாதுகாக்கவும் ஆவணப்படுத்தவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, வரலாறு, கலை, பண்பாடு சார்ந்த கடந்த கால மற்றும் சமகால காணொலிகள், புகைப்படங்கள், போன்ற ஆவணங்களை இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடுகிறார்கள்.

“ஆனால் ஆவணம் என்றால் என்ன?” என்று ஒரு தோழி என்னிடம் கேட்டார். ′′ஆவணம்′′ என்ற சொல் கூட பலருக்கு தெரியாத ஒரு சொல்லாக இருக்கும் என்று என்னிடம் சுட்டிக் காட்டினார். ஆகவே, “ஆவணம்” என்றால் என்ன என்பதை ஒரு தொடராக விவரிக்க முயல்கின்றேன்.

′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 1:

  • screenshot-2020-06-13-at-22.40.17-1.png?
இந்த படத்தின் அடிப்படையில் எனது அடுத்தடுத்த இடுகைகள் அமையும்.

சொற்கூறுகளைப் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்குதல்:

எந்த மொழியாக இருந்தாலும், சொற்களின் மொழிபெயர்ப்பு என்று வரும்போது, துல்லியமான மொழிபெயர்ப்பை உருவாக்குவது கடினம்.

தமிழரின் வாழ்க்கைச் சூழலில், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், வாழும் நாட்டின் மொழியின் அடிப்படையில் ஒரு மொழிபெயர்ப்பு பல்வேரு விதமாக உணரப்படலாம். ஏனெனில் ஒரு சொல்லின் அர்த்தமும் விளக்கமும் அதன் பிரதேசம், பண்பாடு, வரலாறு மற்றும் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றது. எனவே, நான் ′′Archive′′ மற்றும் ′′Recording keeping′′ என்ற ஆங்கில சொற்களை எடுக்கின்றேன். அவை ஒரு பொதுவான புரிதலை உருவாக்குவதுக்காக எடுக்கப்படுகின்றது.

சொற்கூறுகள் (Terms):

  • “Record keeping” என்றால் “பதிவு”, “ஏடு”, “பதிவேடு”.
(“Record management” என்றால் “பதிவேட்டு முகாமை”.) “Archive” என்றால் “ஆவணம்”, “ஆவணக்காப்பு”.

தமிழரிடத்தில் சொற்கூறுகளின் பாவனை:

′′பதிவு இருக்க வேண்டும் ′′ அல்லது ′′பதிய வேண்டும்′′ என்று தமிழர் பேச்சு வளக்கில் கூறுவார்கள். «பதிவு» என்ற சொல்லை பரவலாகப் பயன்படுத்துவார்கள். அது ′′பதிவேடு′′ (record keeping) என்பதையே குறிக்கும். ஆனால், எவ்வாறு ஒரு பதிவு உருவாக்கப்பட வேண்டும் என்ற முழுமையான புரிதல் அவர்களிடத்தில் இருக்கும் ஓர் அறியாமை. அதோடு ஒரு ′′ பதிவிற்கும்′′ ′′ ஆவணத்திற்கும்′′ இடையில் உள்ள தொடர்பின் புரிதலும் அறியாமையாக உள்ளது.

மறு பக்கம், “ஆவணப்படுத்த வேண்டும்” என்று கூறுவார்கள்.

′′ஆவணம்′′ என்றால் வேறு ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெளியிட்ட கடந்த கால வரலாற்றுப் படைப்புகள் என்பதையே பொதுவாக நினைக்கின்றார்கள். உதாரணத்திற்கு புத்தகங்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒளியும் ஒலியும் என்று கடந்த கால படைப்புகளையே ஆவணம் என்று கருதுகின்றனர். என்றாலும் இந்த படைப்புகள் முக்கியமான “ஆவணங்கள்” என்பதை நான் இங்கு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஆனால் ′′ஆவணம்′′ என்பது இன்னும் பல பக்கங்களை உள்ளடக்குகின்றது.

தொடரும்….

அடுத்த பதிவு: ′′ஆவணம்′′ என்றால் என்ன”? – பகுதி 2: ஏன் தமிழரிடத்தில் «பதிவு» / «ஆவணம்» பற்றிய அறியாமை உள்ளது?

தமிழ் பண்பாடு, வரலாறு, பாரம்பரியத்தின் (cultural and historical heritage) ஒரு சிறிய பகுதியை உங்கள் வீட்டில் வைத்திருக்கின்றீர்கள் என்பதை என்றும் மறந்துவிடாதீர்கள். அதனை பொது அணுகளுக்கு (public access) வழியமையுங்கள்.

https://dspora.wordpress.com/category/′′ஆவணம்-என்றால்-என்ன/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு பெருமாள்👍, ஆறுதலாக வாசிக்க வேண்டும் இந்த பெரிய கட்டுரையை,

கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் பகுதி 1-6 வரை, திருத்தி போட்டால் வாசிக்க இலகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, உடையார் said:

நல்ல பதிவு பெருமாள்👍, ஆறுதலாக வாசிக்க வேண்டும் இந்த பெரிய கட்டுரையை,

கீழிருந்து மேலாக வாசிக்க வேண்டும் பகுதி 1-6 வரை, திருத்தி போட்டால் வாசிக்க இலகு

நன்றி முயற்ட்சிக்கிறேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.