Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sat Jun 2 7:17:01 EEST 2007

காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம்

காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர்.

அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும்

கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்களும் கொழும்பு வாழ் தமிழர்களும் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி னால் உடனடியாக இக்குழுவுக்கு முறைப் பாடு செய்யலாம் என்றும் ஜனாதிபதி கூறி யிருக்கின்றார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன், பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகி யோரின் ஏற்பாட்டில் காணாமல் போனவர் களின் உறவினர்கள் நேற்றுமாலை ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளி கையில் சந்தித்து காணாமல்போன தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டனர்.

கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர்

இவர்கள் அனைவரும் ஜனாதிபதி முன் னிலையில் கண்ணீர் பெருக அழுது, தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு மன்றாடி யிருக்கின்றனர்.

ஒவ்வொருவரினதும் பிரச்சினைகளை ஜனாதிபதி அமைதியாகச் செவிமடுத்த தோடு காணாமல் போன உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்கான துரித நடவடிக்கை எடுப்பார் என்று அவர்களிடம் உறுதியளித் திருக்கின்றார்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் "உதயனு'க்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

""காணாமல் போனவர்களை மீட்டெடுக் கும் எமது நடவடிக்கைகளில் ஒன்றாக காணா மல் போனவர்களின் உறவினர்களை ஜனா திபதியிடம் அழைத்துச் சென்று அவர்களை ஜனாதிபதியிடம் நேரடியாக முறையிட வைத் தோம்.

""தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் அழுது கேட்டனர். அவர்களின் முறைப்பாட்டை வேண்டுகோளை ஜனாதிபதி அமைதியாகச் செவிமடுத்தார். காணாமற்போனவர்களை மீட்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்வார் என ஜனாதிபதி அவர்களிடம் வாக்குறுதியளித்தார்.

""காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், தற்போது கொழும்பில் தமி ழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக் குத் தீர்வு காண்பதற்குமென அடுத்த வாரமள வில் 5 பேர் கொண்ட குழுவொன்றை அமைக் கவிருக்கிறார் என ஜனாதிபதி அச்சந்தர்ப் பத்தில் கூறினார்.

பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழர் கள் இந்தக் குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும் என்றும் அந்தக் குழு சம்பந்தப் பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

விடுதிகளில் தங்கியிருப்போர் விவகாரம்

அதேவேளை, விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் வெளியேற்றப்பட வேண் டும் என்று பொலிஸாரால் உத்தரவு பிறப் பிக்கப்பட்டமை தொடர்பாகவும் நாம் அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் மீண் டும் முறைப்பாடு செய்தோம்.

அவ்வாறு தமிழர்களை வெளியேற் றும் நிலைப்பாட்டில் அரசு இல்லை என்றும் அவ்வாறு வெளியேற்றப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

கொழும்பில் தமது அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு கிழக்கில் இருந்து வரும் தமிழர்கள் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தமது வேலை முடிந்த வுடன் உடனடியாகத் தமது சொந்த இடங் களுக்குத் திரும்பிப்போவது நல்லது என ஜனாதிபதி கூறினார்.

இச்சந்தர்ப்பத்தில் காணாமல் போன வர்களின் உறவினர்கள் தமது முறைப்பாடு களை எழுத்து மூலம் அங்கு சமூகம் கொடுத் திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரி டம் ஒப்படைத்தனர். இவ்வாறு முறைப் பாடு செய்யுமாறு ஜனாதிபதியே அவர்க ளைப் பணித்தார் எனக் கூறினார்.

இச்சந்திப்பில் 50க்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்கள், அமைச்சர் சந்திரசேகரன், பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ் வரன், அமைச்சர்கள் ராஜித சேனாரத்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம்.பௌஸி, மஹிந்த சமரசிங்க, பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். (சி)

உதயன்

காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம்

நல்ல ஆளிட்ட தான் போய்க் கேட்டாங்கள்... சிறீ லங்காவில் மகிந்து & Co காணாமல் போகும்வரை தமிழர்கள் காணாமல் போவது தவிர்க்கப்படமுடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி என்று ஏன் கௌரவப் படுத்துகின்றீர்கள்? கொலைகார ராஜபக்ஸ.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குத் தெரியாமல் தான் எல்லாம் நடக்கிறது என்று காட்ட ஒரு நாடகம். காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு யார் காலில் விழுந்தாவது தமது உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு. பாவம் அந்த மக்கள் இந்த நாயின் காலிலும் விழ வேண்டிய நிலை. ஆனால் நாடகத்தின் ஏற்பாட்டாளர்களான ராதையின் கிருஷ்ணனுக்கும் சந்தர்ப்பன் சேகரனுக்கும் கூட உண்மை விளங்காமல் போயிற்று பாருங்கோ!அது சரி தான்! அப்படி விளங்கும் புத்தி இருந்தால் இவங்கள் இப்ப பிரதம மந்திரி ஆகியிருப்பாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.