Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலிருந்து வந்த உத்தரவு: விஷேட சி.ஐ.டி. குழு விக்கினேஸ்வரனிடம் 2 மணி நேரம் கடும் விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்து வந்த உத்தரவு: விஷேட சி.ஐ.டி. குழு விக்கினேஸ்வரனிடம் 2 மணி நேரம் கடும் விசாரணை

 
July 24, 2020

cv-wigneswaran-300x185.jpg

 

உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவையடுத்தே இந்த விசாரணை இடம்பெற்றதாகத் தெரிகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியிலுள்ள முன்னாள் முதலமைச்சரின் இல்லத்துக்கு இன்று காலை திடீரெனச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் தலைமையிலான சி.ஐ.டி. குழுவினரே இந்த விசாரணையை நடத்தியுள்ளனர்.

கடந்த டிசெம்பர் மாதம் முதலமைச்சரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று தொடர்பாகவே இவர்கள் விசாரணையை அமைந்திருந்தது. கேள்வி – பதில் வடிவில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தது.

குறிப்பிட்ட அறிக்கை  சிங்கள இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இனங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அந்த அமைந்திருப்பதாகவும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விக்கினேஸ்வரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மையானவையா இல்லையா என்பதை உறுதிப்படுத்துமாறு விசாரணைக்காக வந்திருந்த பொலிஸ் அதிகாரிக்கு உயர் மட்டம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக விக்கினேஸ்வரனிடம் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி கேள்வி எழுப்பினார்.

உடனடியாகவே இது தொடர்பான ஆவணத்தை கையளித்த விக்கினேஸ்வரன், அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் விக்கினேஸ்வரன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மேலிடத்துக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி, தேவை ஏற்பட்டால் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் வருவதாகவும் தெரிவித்துச் சென்றுள்ளார்.

 

http://thinakkural.lk/article/57501

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தால் களமிறக்கப்பட்டவர்களை சி ஐ டி விசாரிக்குது. தமிழரின் உண்மையான பேரம் பேசும் சக்திகளுக்கு சிங்கள ஆயுதப் படை பாதுகாப்பு கொடுக்குது. ஆச்சரியமாய் இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

சிங்களத்தால் களமிறக்கப்பட்டவர்களை சி ஐ டி விசாரிக்குது. தமிழரின் உண்மையான பேரம் பேசும் சக்திகளுக்கு சிங்கள ஆயுதப் படை பாதுகாப்பு கொடுக்குது. ஆச்சரியமாய் இருக்குது

சரியான விளக்கம் கிடைக்காததால் தான் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
 

14 hours ago, satan said:

சிங்களத்தால் களமிறக்கப்பட்டவர்களை சி ஐ டி விசாரிக்குது.

“றோ” வால் களமிறக்கப்பட்டவர்களை சி ஐ டி விசாரிப்பது எதிர்பார்க்கப்பட வேண்டியது இல்லையா?

14 hours ago, satan said:

தமிழரின் உண்மையான பேரம் பேசும் சக்திகளுக்கு சிங்கள ஆயுதப் படை பாதுகாப்பு கொடுக்குது. ஆச்சரியமாய் இருக்குது. 

தமிழரின் உண்மையான பேரம் பேசும் சக்திகளுக்கு “றோ” வால் உயிராபத்து இருப்பதால், ஆயுதப் படை பாதுகாப்பு கொடுக்குது. ஒருமித்த நாட்டுக்குள், “றோ” வின் தேவைகளுக்காக ஒருவரை ஒருவர் கொல்லாமல் வாழ இந்த பாதுகாப்பு தேவை தானே?

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.