Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sritharan-1.jpg

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும் தமிழர்களின் மாற்று அணியாக தங்களைக் காட்டிக் கொள்கின்றார்கள்.

மக்களுடைய எண்ணங்கள் சரியானதாக அமைவதற்காகவே, நாங்கள் சரியான சகவாழ்வுடனும், சமயோசித்துடனும் எங்களுடைய அரசியலை செய்து வருகிறோம். ஆனால், சிங்கள பேரினவாதிகளும் அவர்களின் எலும்புத்துண்டை காவித்திரியும் கைக்கூலிகளும், தமிழர்கள் தங்களுக்கென்று தனியான ஆட்சியொன்றை ஏற்படுத்திவிடக்கூடாது என முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்கான ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தங்கள் உயிரை கொடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் சில காட்டுப்பூனைகள் இப்போது கரகம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்கள் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக ராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றோம். நம்மவர்கள் ஒட்டுக் குழுக்கள் போல கடந்த காலத்தில் ஆயுதங்களை விரும்பி கையில் எடுத்தவர்கள் அல்ல.

இதனை தமிழீழ விடுதலை போராட்டத்தின் மூத்த போராளியாக பேசப்படுகின்ற தங்கத்துரை, 1983 ஆம் ஆண்டு, நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று இலங்கை நீதிமன்றத்தில் கூறினார்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 1985ஆம் ஆண்டு, இந்திய பத்திரிகையாளர் அனித்தா பிரதாப்பிற்கு பேட்டி அளிக்கும் போது, நாங்கள் ஆயுதங்கள் மீது விருப்பம் கொண்டு அவற்றை எடுத்தவர்கள் அல்ல. ஆயதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டன என தெரிவித்தார்.

ஆகவே நாங்களும் இப்போது யாரையும் துப்பாக்கிகளை தூக்குங்கள் என்றும் சொல்லவில்லை. எங்கள் உரிமைகள் வேண்டும் என்றே கேட்கின்றோம் அதனை பெற அரசியல் ரீதியாக போராடிவருகின்றோம் ஆகவே எங்கள் கைகளை பலப்படுத்த வேண்டிய கடமை தமிழர்களாகிய உங்களிடமே உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/அரசின்-கைகூலிகள்-தமிழ்ர்/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம்

1uQJIa.gif

தன்னை தானே கலாய்த்து கொள்ளுதல் - " தற்கலாய்ப்பு " ..

டிஸ்கி

நாமும் தமிழ் உலகிற்கு புதிய சொற்களை அறிமுகபடுத்த வேணுமெல்லொ தோழர்..👌

நீங்கள் என்ன பெற்றுத்தரப்போகிறீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். இவ்வளவு காலமும் மக்கள் உங்கள் கைகளை பலப்படுத்தினர்கள்தானே. என்னத்தை செய்து கிழித்தீர்கள்? உங்களை பலப்படுத்தீனீர்களே ஒழிய வேறொன்றும் செய்யவில்லை. கிளிநொச்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு ஒரு துண்டு காணி உங்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அவர்கள் கால காலமாக விவசாயம் செய்த பூமியும் வன இலக்கவினால் கையகப்படுத்தப்பட்ட்து. அந்த மக்கள் தனியாக போராடினார்கள். நீங்கள் கதிரையை சூடாக்கிக்கொண்டு இருந்தீர்கள். இரணைமடு குளத்துக்கு கீழே உங்களுக்கு காணி பிடித்தீர்கள். அந்த அப்பாவி மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியாக ஒரு ஊடகம் இதை வெளிப்படுத்தியதனூடாக மக்களுக்கு இப்போது அந்த காணியை மீண்டும் மக்களுக்கு கிடைக்க செய்திருக்கிறார்கள். எனவே நீங்கள் இனி வேணுமென்றால் இரணைமடு குளத்தின் கிழே இருக்கிற கொள்ளையடித்த காணியில் விவசாயம் செய்துகொண்டு இருங்கள். மக்களிடம் வந்து உங்கள் கையை பலப்படுத்த கையேந்த வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.