Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் கினிமினி மீது விசாரணை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கினிமினி மீது விசாரணை ஆரம்பம்

கினிமினி என்னும் பிரித்தானியாவின் வர்த்தக இராணுவ (merchant army) நிறுவனத்தின் இலங்கை நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பித்தது, லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ்.

இவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட STF என்னும் இலங்கை போலீசாரின் விசேட பிரிவினரின் முதலாவது அணி, இவர்கள் இரண்டாவது அணிக்கு பயிட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போதே கிழக்கு இலங்கையின் றால் பண்ணை ஒன்றினுள் புகுந்து, 85 பேரை சுட்டுக் கொண்டிருந்தது. இந்த றால் பண்ணை அமேரிக்க நிறுவனத்தினால் நடத்தப்பட்டது. 

இது வெளிநாடு ஒன்றில் நடந்த, பிரித்தானிய நிறுவனம் சம்பந்தப்பட்டு, மறக்கடிக்கப்படட ஒரு யுத்த குற்ற சம்பவம் என லண்டனில் உள்ள, தமிழர் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய வெளிவிவகார அலுவலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட யுத்த குற்ற முறைப்பாட்டின் படி, இந்த விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாக கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகை தெரிவிக்கின்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் வெறும் கண் துடைப்பு 

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மீதான போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

 
SLA-Tank-696x392.jpg
 84 Views

சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா படையினருடன் இணைந்து பிரித்தானியா தனியார் நிறுவனத்தின் கூலிப்படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

1980 களில் சிறீலங்காவின் சிறப்பு அதிரடிப்படையினருக்கு பயிற்சிகளை வழங்கிய பிரித்தானியாவின் கினிமினி என்ற தனியார் அமைப்பின் படையினர்இ பல சந்தர்ப்பங்களில் தாக்குதல் உலங்குவானூர்திகளை செலுத்தி நேரடியான தாக்குதல்களிலும் ஈடுபட்டிருந்ததுடன் பெருமளவான அப்பாவி தமிழ் மக்களையும் சிறீலங்கா படையினருடன் இணைந்து படுகொலை செய்திருந்தனர்.

இவர்களால் பயிற்சி அளிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பான பல ஆதாரங்கள் பிரித்தானியா அரச ஆவணங்கள் மற்றும் ஊடகவிலயலாளர் பிலிப் மில்லர் சமர்ப்பித்த ஆவணங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் நூல் ஒன்றையும் மில்லர் எழுதியிருந்தார்.

இந்த விசாரனைகளை பிரித்தானியாவில் உள்ள 200இ000 தமிழ் மக்கள் அவதானித்து வருவதாகவும் இவர்கள் கினி மினி அமைப்பு சிறீலங்காவில் இருந்தபோது இங்கு புகலிடத்தஞ்சம் கோரி வந்தவர்கள் எனவும் மில்லர் தெரிவித்துள்ளார்.

தமக்கு இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்இ அதன் மீதான விசாரணைகைள ஆரம்பித்துள்ளதாகவும் பிரித்தானியா காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி ஊடகம் இன்று (30) தெரிவித்துள்ளது.

 

https://www.ilakku.org/தமிழ்-மக்கள்-மீதான-போர்க/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினரின் யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பம்.

 

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பிரிட்டனின் கினிமினி கூலிப்படையினர் தொடர்பான விசாரணைகளே ஆரம்பமாகியுள்ளன.

kini-miini-300x169.jpg
பிரிட்டனின் கூலிப்படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான பரிந்துரைகள் மார்ச் மாதத்தில் கிடைத்தன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் விசாரணைகளை முன்னெடுப்பது குறித்த ஆய்வுகளின் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில் இருந்தும்,பத்திரிகையாளர் மில் பில்லர் தகவல் சுதந்திரத்தை பயன்படுத்தி பெற்ற விடயங்கள் மூலமும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாhரணைகள் இடம்பெறுகின்றன.
கினிமினி குறித்த தனது நூலை கடந்த ஜனவரியில் மில் பில்லர் வெளியிட்டிருந்தார்.

kinimini.jpg
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக பிரிட்டனிற்கு தப்பிவந்த 200,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த விசாரணையை உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளனர் என பில்மில்லர் தெரிவித்துள்ளார்.
கினிமினி இலங்கையில் செயற்பட்ட காலத்திலேயே பெருமளவு தமிழர்கள் அகதிகளானார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஹெலிக்கொப்டர்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்குள்ளானதை பலர் நினைவில் வைத்திருக்கின்றார்கள், இந்த ஹெலிக்கொப்டர்களை பிரிட்டனின் கூலிப்படையினரே செலுத்தினார்கள் என்பது இங்கிலாந்தில் உள்ள இலங்கை தமிழர்களிற்கு அதிர்ச்சியை அளிக்கும் என பில் மில்லர் தெரிவித்துள்ளார்.

kini-mini-4-300x255.jpg
முன்னாள் எஸ்ஏ அதிகாரியான டேவிட்வோக்கர் என்பவரே கினிமினியை ஸ்தாபித்தார்.
கினிமினி தற்போது இல்லாத போதிலும் அவர் சலாடின் செக்குரிட்டி என்ற நிறுவனத்தின் இயக்குநராக காணப்படுகின்றார்.
கினிமினியை சேர்ந்த எவரும் இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை என அவர் உறுதியாக தெரிவிக்கின்றார்.
தமிழ் போராளிகளுக்கு எதிராக 1980களில் பிரிட்டனின் கினிமினி கூலிப்படையின் இலங்கையின் விசேட அதிரடிப்படையிருக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.

kini-mi1-300x180.jpg

 

https://thinakkural.lk/article/94068

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.