Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா

எட்டு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய கொரோனா வைரஸ் மூடி மறைத்த சீனா

 

ஜிங்

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு  இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது.  உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த  கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் வேகமாக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.72-லட்சத்தைக் தாண்டி உள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18-கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.45-கோடியைத் தாண்டியுள்ளது.  

அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55.29- ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில்  36,843- ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  பிரேசிலில் ஒரே நாளில் 22,365 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட்டவர்கள் எண்ணிக்கை  33.40 லட்சமாக உள்ளது

இந்த் நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இறந்தனர். அது மட்டுமின்றி தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், தற்போது அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.மட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.

2012-ல் நோய்த்தொற்றால் இறந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/17172008/Startling-report-suggests-COVID19-may-have-first-appeared.vpf

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மீது கோபம் மற்றும் வெறுப்பு ஏற்படுத்தாள் கூடிய, உணர்ச்சிகரமாக செய்திகள் பிரசுரிப்பதை தவிர்க்கப்பட வேண்டும்.

அல்லது, இத்தகைய செய்திகளை  பிரசுரிக்கும் பத்திரிகைகள் விடயத்தை நன்கு அலசி ஆராயாமல் செய்திகளை பிரசுரிக்கிறார்கள்.

வேறு செய்திகல், அது கொரானாவை ஒத்ததாக இருப்பதாக என்றே சொல்லி உள்ளன. 

முதலாவது, பல இனம் தெரியாத வைரஸ் காய்ச்சல், நிமோனியா என்று பல இறப்புகள் வருடம் தோறும் நடந்தே வருகிறது.

மேற்கில், அநேகமான அப்படியான இறப்புகளும், காரணங்களும், தோற்றமும் மேலதிகமாக ஆராயப்படுவதில்லை, மேலதிக இறப்புகளோ, தாக்கமோ இல்லாவிடில்.

மாறாக, சீனா அப்படியான பல, இனம் புரியாத வைரஸ், மற்றும் பக்டீரியா இனால் வரும் வருத்தங்களை மேலதிகமாக ஆராய்ந்து, ஆய்வு வரைக்குமான தரவுகளை வைத்து உள்ளது.

இதனாலேயே, விஞ்ஞானிகள் முன்பு சீனாவில் வந்த இணைப் புரியாத வைரஸ் வருத்தங்களுடன், இப்போதைய   கொரனவை  ஒப்பிட முடிகிறது.

சீனாவில் வந்திருக்கிறது,, ஆராய்ந்து ஆவணப்படுத்தி விட்டு, மேலதிக தாக்கமில்லை,  பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். 

இதில் இன்னொமொன்று, US, 2019 மாசி மாத்திற்கு முதலான , இனம் புரியதா வைரஸ், மற்றும் பாக்டீரியா இனால் வந்த வருத்தங்கள் பற்றிய அதனிடம் உள்ள தரவுகளை, நான் அரீன்ஹட்ட வரையில் July 2020 இல் கூட பகிர மறுத்து விட்டது.

இதுவும், ஒரு காரணம், கொரானாவின் தோற்றம் பற்றிய மேற்கின் ஆய்வுகள், தன்னை குற்றம் சுமத்தக் கூடியவாறு நடத்தப்படுமோ என்று சீனா வெறுப்புடன் மேற்கத்தி எதிர்பதற்கு.     
 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kadancha said:

முதலாவது, பல இனம் தெரியாத வைரஸ் காய்ச்சல், நிமோனியா என்று பல இறப்புகள் வருடம் தோறும் நடந்தே வருகிறது.

மேற்கில், அநேகமான அப்படியான இறப்புகளும், காரணங்களும், தோற்றமும் மேலதிகமாக ஆராயப்படுவதில்லை, மேலதிக இறப்புகளோ, தாக்கமோ இல்லாவிடில்.

மாறாக, சீனா அப்படியான பல, இனம் புரியாத வைரஸ், மற்றும் பக்டீரியா இனால் வரும் வருத்தங்களை மேலதிகமாக ஆராய்ந்து, ஆய்வு வரைக்குமான தரவுகளை வைத்து உள்ளது.

இதனாலேயே, விஞ்ஞானிகள் முன்பு சீனாவில் வந்த இணைப் புரியாத வைரஸ் வருத்தங்களுடன், இப்போதைய   கொரனவை  ஒப்பிட முடிகிறது.

சீனாவில் வந்திருக்கிறது,, ஆராய்ந்து ஆவணப்படுத்தி விட்டு, மேலதிக தாக்கமில்லை,  பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். 

இதில் இன்னொமொன்று, US, 2019 மாசி மாத்திற்கு முதலான , இனம் புரியதா வைரஸ், மற்றும் பாக்டீரியா இனால் வந்த வருத்தங்கள் பற்றிய அதனிடம் உள்ள தரவுகளை, நான் அரீன்ஹட்ட வரையில் July 2020 இல் கூட பகிர மறுத்து விட்டது.

இதுவும், ஒரு காரணம், கொரானாவின் தோற்றம் பற்றிய மேற்கின் ஆய்வுகள், தன்னை குற்றம் சுமத்தக் கூடியவாறு நடத்தப்படுமோ என்று சீனா வெறுப்புடன் மேற்கத்தி எதிர்பதற்கு.     
 

உண்மை கடஞ்சா. சீனாவின் மேல் உள்ள வெறுப்பினால்... மேற்குலகமும், பத்திரிகைகளும்...
உண்மை நிலவரத்தை.. திசை திருப்புகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.