Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு சுய பரிசோதனை செய்து பாதையை மாற்றியமைக்க வேண்டும்; ஜனா நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு சுய பரிசோதனை செய்து பாதையை மாற்றியமைக்க வேண்டும்; ஜனா நேர்காணல்

August 25, 2020

jana.jpeg
 

“கடந்த போராட்ட காலங்களில் எமது மாவட்ட மக்களும் மாவட்டமும் அபிவிருத்தியில் பின்தங்கி அந்நியப்பட்டிருப்பதனால் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டிய காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் சிரேஷ்ட அரசியலாளர் என்ற ரீதியில் ஏனையவர்களை அரவணைத்து பயணிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது அந்த கடமையினை செவ்வனே நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பு தன்னை சுய பரிசோதனை செய்து தமிழ் மக்களின் மனநிலைக்கேற்றவாறு தங்களது பாதையை மாற்றியமைக்க வேண்டும்” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஞாயிறு தினக்குரலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். 

கேள்வி :- உட்பூசல்களுடன் கட்சிக்குள் தவறாக செயற்பட்டுக்கொண்டு பிற கட்சிகளே கூட்டமைப்பின் சரிவு வீழ்ச்சிக்கு காரணம் என கட்சியிலுள்ளோர் கூறுவது ஆரோக்கியமானதா ?

 

பதில் :- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கின்ற அதிகார போட்டியும்இ கடந்த காலங்களில் தமிழ் மக்களது எதிர்பார்ப்பை கூட்டமைப்பு பூர்த்திசெய்யவில்லை என்ற ஆதங்கமுமே சரிவு வீழ்ச்சிக்கு காலாயமைந்தது.

கூட்டமைப்பிற்குள் மூன்று அங்கத்துவ கட்சியிருந்தாலும் ஒரு கட்சியை இன்னுமொரு கட்சி வீழ்த்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தங்களது கட்சிக்கு மாத்திரமே அதிகூடிய வாக்கு கிடைத்து ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற போட்டித் தன்மையே, வடகிழக்கில் கடந்த காலங்களில் 20 ஆக, 16 ஆக கிடைக்கப்பெற்ற ஆசனங்கள் ஒன்பது ஆசனங்களாக கிடைக்கப்பெறுவதற்கு ஏதுவாக இருந்தது.

 

அது மாத்திரமின்றி கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சு பதவியை விட்டுக்கொடுத்தது என்ற பொய் பிரசாரமும் கிழக்கின் வாக்கு வீழ்ச்சிக்கு ஏதுவாயமைந்தது. 2015 பங்குனியில் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியதிகாரம் மாறும்போது கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரசிக்கு 07 உறுப்பினர்களும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் முதலமைச்சு பதவியை பெற்றுக்கொண்டதே தவிர கூட்டமைப்பு முதலமைச்சு பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு தாரை வார்த்துக்கொடுக்கவில்லை.

 

கேள்வி :- சவால்களுக்கு மத்தியிலேயே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்த நிலையில் ஒருவேளை கிடைக்காமல் இருந்திருந்தால் அம்பாறை தமிழர்களினதும் கட்சியினதும் எதிர்கால இருப்பு எவ்வாறு இருந்திருக்கும் ?

பதில் :- வடகிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டமும் எட்டு நிர்வாக மாவட்டமும் உள்ள நிலையில் தமிழ்மக்கள் பிரதிநிதி அம்பாறைக்கு மாத்திரமே கிடைக்காமல் இருந்திருந்தது. அந்த அடிப்படையில் அம்பாறைக்கு பிரதிநிதித்துவத்தை கொடுக்க வேண்டும் என்பது எல்லோரதும் அபிப்பிராயமுமாகும். அதன் அடிப்படையில் தேர்தல் முடிந்தவுடன் எனது கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அனுமதியைப் பெறாமல் ஒரேயொரு தேசிய பட்டியல் ஆசனத்தை அம்பாறைக்கு கொடுக்க வேண்டும் என்று முதன் முதலில் நானே கூறியிருந்தேன். ஒரு வகையில் கொடுக்காமல் விட்டிருந்தால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அம்பாறை தமிழர்கள் பல துன்பங்களை அனுபவித்திருப்பதுடன் கூட்டமைப்பை பரிபூரணமாக வெறுத்திருப்பார்கள்.

 

இள வயதிலிருந்து தமிழ் இளைஞர் பேரவையின் ஊடாக அரசியலுக்கு வந்து மிக நீண்ட காலமாக அரசியலில் பயணித்துக்கொண்டிருப்பவரான மாவை சேனாதிராஜா தேர்தலில் தோற்றதனால் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு சிலர் அவ்வாறான நினைப்பில் இருந்தனரே தவிர தமிழரசுக்கட்சியின் பொரும்பாலானோரும் ஏனைய பங்காளிக் கட்சியினரும் அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியில் வேட்பாளராக போட்டியிட்ட கலையரசனுக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருத்தார்கள்.

கேள்வி :- 2/3 பெரும்பான்மை அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் ?

 

பதில் :- கூட்டமைப்புடன் இனப்பிரச்சினை சம்பந்தமாக நாங்கள் பேச மாட்டோம். தமிழ் மக்கள் மத்தியிலிருந்து தங்களுக்கு சார்பாக தெரிவுசெய்யப்பட்டவருடன் மாத்திரமே பேசுவோம் என்று அரசாங்கத்தின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியிருக்கின்றார். அதே போல் இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்த சட்டத்தினால் மாகாண சபைகள் முறைமை வந்தது. 13 ஆவது திருத்தச்சட்டம் ஏற்பட பல தியாகங்கள் செய்யப்பட்டிருக்கின்றது. அந்த வகையிலே 13 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரான சரத் வீரசேகர கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு எக்காரணம் கொண்டும் இந்தியா இடமளிக்காதென்பது எங்களது கட்சியின் திடமான நம்பிக்கை. புதிய அரசாங்கம் தமிழ்மக்களது புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் 2/3 பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை காண வேண்டும். அப்படியில்லாது போனால் இந்த நாடு இருண்ட யுகத்திற்குள் தள்ளப்பட வேண்டியதொரு நிலைக்கு உள்ளாகும்.

கேள்வி :- கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாக வரலாற்று முக்கியத்துவ மகுல் மடுவ மண்டப அமைச்சரவை பதவியேற்பு வைபவத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் :- பதவியேற்பு வைபவ நிகழ்வை இனக் குரோத செயலாகவே பார்க்கின்றேன். அந்த சந்தர்ப்பத்தை கண்டிக்கின்றேன். வெறுக்கின்றேன். ஏனென்றால் இலங்கை நாட்டின் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் மஞ்சள், பச்சை நிறத்துடன் கூடிய தேசியகொடி உருவாக்கப்பட்ட போது சிறுபான்மையினரின் அடையாளங்கள் தவிர்ந்த கண்டி இராஜதானிய கொடியை பறக்கவிட்டது வெறுக்கத்தக்க விரும்பத்தகாத செயல் மாத்திரமல்ல அரசாங்கம் சிறுபான்மையினரை ஒடுக்கி ஒட்டுமொத்தமாக அதிகார போக்கிற்குள் முனைவதை காணக்கூடியதாகவுள்ளது.

கேள்வி :- சிங்கள தேசியவாதத்தையும் இராணுவ பின்னணியையும் கொண்ட அரசை எதிர்கொண்டு தமிழ்மக்களின் இருப்பினை உறுதிப்படுத்த தமிழ்பிரதிநிதிகள் ஆயத்தமாகவில்லை என்று கூறப்படுகிறதே ?

பதில் :- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கடந்த காலங்களை போலல்லாமல் தேசியபட்டியலுடன் 10 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன. 2015 இல் 16 ஆசனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், அகில இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து இருவரும் க.வி.விக்னேஷ்வரனும் தெரிவாகியுள்ளனர். நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட தமிழ்மக்களின் இருப்பை தக்க வைக்க ஒரே கொள்கையில் பயணிப்பவர்கள்.

தமிழ் கட்சிகளுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைந்து தமிழ்மக்களின் புரையோடிப்போயுள்ள எதிர்கால அரசியல் அபிலாசை இருப்பை தக்க வைத்து இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண ஒருமித்து பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

கேள்வி :- எதிர்வரும் காலங்களில் மொட்டும் படகுமே கிழக்கின் ஆட்சியதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்படுகிறதே ?

பதில் :- மொட்டும் படகும் ராஜபக்‌ஷ ஆட்சியிலே பங்கெடுப்பதற்கு இருக்கிறார்கள். ராஜபக்‌ஷக்களின் ஆட்சி எப்படி இருக்கப்போகின்றது என்பதை அமைச்சரவை பதவியேற்பு வைபவமே எதிர்வு கூறுகின்றது. தமிழ்மக்கள் நியாயமாக சிந்திப்பார்கள். அந்த வகையில் சரியான தீர்ப்பை மாகாண சபை தேர்தலிலே வழங்குவார்கள். தமிழ் மக்கள் எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசியத்துடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்பது கூட்டமைப்பின் நம்பிக்கையாக இருக்கிறது.

கேள்வி :- தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதி என்ற வகையில் பொதுமக்களுக்கு கூற விழைவது ?

பதில் :- தமிழ் மக்களாகிய நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதையுணர்ந்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்த அரசியல் தீர்வை காண்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். தமிழ்மக்களது வாழ்வாதாரம் முன்னேற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் தீர்விலும் அபிவிருத்தியிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்குள் நேர்த்தியான சேவையாற்றுவதற்கு எண்ணியிருக்கின்றேன்.

  • பாக்கியராஜா மோகனதாஸ்
     

http://thinakkural.lk/article/64433

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டமைப்பு இனியும் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது எனபது குதிரை கொம்பே,🤔

சுமத்திக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போய்விட்டது, இனி எந்த முகத்துடன் போய் வாக்கு கேட்க போகின்றார்??? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.