Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.

ஜூன் 06, 2007

சென்னை: எனக்கு 59 வயதாகிறது. எனது வாழ்நாளில் ஒருமுறை கூட மதுவைத் தொட்டதில்லை, எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுக தலைமைக் கழகத்தை இடிப்பது தொடர்பாக சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து கண்ணியம் இல்லாமல் பேசி வருகிறார் முதல்வர் கருணாநிதி.

சைதாப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகிறபோது, சிலேடையாகப் பேசியுள்ளார். தற்போது கேள்வி, பதில் பேட்டியில், கழகத்தை அழிப்பேன், சபதம் ஏற்கிறேன், இது சத்தியம் என்றெல்லாம் ஜெயலலிதா சவால் விட்டிருப்பது பற்றி என்ற கேள்விக்கு நேற்று கொஞ்சம் 'அதிகமாகி' விட்டது போலும், அதாவது கோபம் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இதற்கான விளக்கங்களை நீதிமன்றத்தில் சொல்ல வாய்ப்பில்லாததால், இந்த அறிக்கையில் விளக்குகிறேன். எனக்கு 59 வயதாகிறது. இன்று வரை எனது வாழ்நாளில் நான் மதுவைத் தொட்டது கிடையாது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும், என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் இது நன்றாகத் தெரியும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்னுடைய இல்லப் பணியிலோ, அலுவலகப் பணியிலோ இருக்க முடியாது என்பதும் அனைவருக்கும் நன்கு தெரிந்த விஷயம்.

தலைமைக் கழகத்தைப் பற்றி நான் பேசினால் அதற்கு சம்பந்தமே இல்லாத கொடநாடு எஸ்டேட் குறித்துப் பேசுகிறார் கருணாநிதி. அதுனுடன் என்னைத் தொடர்புப்படுத்திப் பேசுகிறார். 50 கோடி ரூபாயில் கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், 90 அறைகள் உள்ளன என்றும் அவதூறு செய்திகளைப் பரப்பி வருகிறார்.

அந்தக் கட்டடம் 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவும் இல்லை, அதில் 90 அறைகளும் இல்லை. அங்கு கட்டப்படுகின்ற கட்டடத்திற்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

பெண் என்றும் பாராமல் என்னைப் பற்றி கருணாநிதி பேசியும், எழுதியும் வருவதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

முன்பு விஜயகாந்த்தை குடிகாரர், குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று படு காட்டமாக விமர்சித்திருந்தார் ஜெயலலிதா. இதற்கு பதிலடி கொடுத்த விஜயகாந்த், அவர்தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தாரா என்று தடாலடியாக அறிக்கை விட்டார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மீதே அந்த அஸ்திரம் கருணாநிதி மூலமாக திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2007/06/06/jaya.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மதுவைத் தொட்டதே இல்லை: ஜெ.

மதுவை நக்கி குடிப்பதானால் கையால் தொடத்தேவையிலைத்தானே :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவை நக்கி குடிப்பதானால் கையால் தொடத்தேவையிலைத்தானே :D

நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டிங்க.

கோடநாடு பங்களா விவகாரம்: ஜெயலலிதா புகாருக்கு கருணாநிதி பதில்:

"அரசுக்குச் சொந்த மானடான்சி நிலத்தை நான் வாங்கவில்லை. பத்திரத்தில் போட்டுள்ள கையெழுத்தும் நான் போடவில்லை'' என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொன்னார். ஆனால் நீதியின் முன்னே அவர் கையெழுத்துத்தான் அது என்றும் - அவர் விதிகளுக்கு மாறாக வாங்கி விட்ட அரசு நிலத்தைத் திரும்பக் கொடுத்து விட வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது ஜெயலலிதா "உண்மை விளம்பி'' என்பதற்கு ஓர் உதாரணம்!

கருணாநிதி முதல் அமைச் சராக இருந்த போது அவர் மீதுள்ள வழக்குகளை பிரதமர் இந்திரா காந்தி வாபஸ் வாங்குவது என்று பேரம் பேசி, காவிரி பிரச்சினைக் காக கர்நாடக அரசு மீது போட்டிருந்த வழக்கை கருணாநிதி வாபஸ் வாங்கிக் கொண்டார் என்ற ஒரு தக வலை ஜெயலலிதா சட்டப் பேரவையில் சொன்னார். உடனே எஸ்.ஆர். பாலசுப் பிரமணியம் எழுந்து, காவிரி வழக்கைத் தமிழக தி.மு.க. அரசு அனைத்து கட்சித் தலை வர்களிடம் ஆலோசனை கேட்டு "வாபஸ்'' வாங்கியது 1976க்கு முன்பு, ஆனால் கலைஞர் மீது வழக்கு 1976க்கு பின்பு என்கிற போது, ஜெயலலிதா இரண்டையும் தொடர்புபடுத்தி பேசுவது எந்த வகையில் நியாயமும் உண்மையும் ஆகும்ப என்று கேட்டவுடன், ஜெயலலிதா திணறிப்போனாரே, அதுவும் அவர் "உண்மை விளம்பி'' என்பதற்கு மற்றொரு உதாரணம்!

இப்போது "கோடநாடு மாளிகையில் நான் ஓரிரு நாள் விருந்தினராகத் தங்குவதற்குத்தான் போனேன், உண்மையில் அந்த மாளிகைக்கும் எனக்கும் தொடர்பே இல்லை'' என்று கூறிவிட்டு, இப்போது தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்கள் புறப்பட்டதும் அலறித் துடிக்கிறாரே; இது இன்னொரு உதாரணம். உயிர்த் தோழிகள் இருவரும் தலா ரூ.2 கோடி முதலீடு செய்ததை மூடி மறைக்க முடியாமல் தவிக்கிறார்களே, அது மேலும் ஒரு உதாரணம்.

என்னுடைய பிறந்த நாள் அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "கருணாநிதி நயவஞ்சக மனிதர், துரியோ தனன், துச்சாதனன், சகுனி, கம்சன், ஜார்மன்னன், கிட்லர், முசோலினி, இடி அமீன் அத்தனை பேரும் சேர்ந்த மொத்த உருவம் தான் முதல்- அமைச்சர்.

பொய், புரட்டு, வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, வன்மம் பாராட்டுதல், இழிவான எண்ணங்கள் ஆகியவைகளின் பிறப்பிடம் அவர்'' என்றெல்லாம் கடுஞ்சொற்களால் சாடிவிட்டு, அதற் கடுத்த மூன்றாவது நாளே விடுத்த அறிக்கையிலே அவர் ஏதோ அமைதி விரும்பி என்பது போலவும், அவரை நான் ஏதோ கடுஞ்சொற்களால் விமர்சித்து விட்டேன் என்பது போலவும் பம்மாத்து செய்திருக்கிறாரே, அதுவும் அவர் "உண்மை விளம்பி'' என்பதற்கு மற்றொரு உதாரணம்.

1996ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு தனது உடன்பிறவா சகோதரியுடன் வைத்திருந்த நட்புதான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று கூறி பகிரங்கமாக அறிக்கையே விடுத்தார் ஜெயலலிதா. பிறகு சில மாதங்களுக்குள்ளாகவே அந்த அறிக்கையைத் திரும்பப் பெற்று அவர்களுக்குள் உள்ள நட்பைத்தவிர்க்க முடியாது என்று மீண்டும் ஒரு அறிக்கை விடுத்தார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான உதாரணம் தான்.

தமிழக மாநில ஆளுநராக இருந்த சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பேரவையி லேயே தெரிவித்தவர் தான் ஜெயலலிதா, இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற் கானசான்று தான்.

தமிழகத்திலே நடைபெறும் கொலை, வழிப்பறி கொள்ளை களுக்கு காரணம் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் தலை மையிலே உள்ள மத்திய அரசு தான் என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். அது போலவே ராஜீவ் காந்தி யின் மரணத்திற்குக் கார ணம் மூப்பனார் தான் என்று சேலம் பொதுக் கூட்டத்திலேயே பேசினார். இவைகள் எல் லாம் அவர் எத்த கைய "உண்மை விளம்பி'' என்பதற் கான சான்று தான்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணப்பன் பொடா சட்டத்தில் கைது செய்யப்போவ தாக செய்தியாளர் களிடம் ஜெயலலிதா கூறிவிட்டு, பிறகுதான் அப்படி கூறவே இல்லை என்றார். உடனே 7.10.2003 தேதிய "இந்து'' நாளிதழ் ஜெயலலிதா செய்தி யாளர்களிடம் கூறிய "டேப்'' தங்களிடம் இருப்பதாக வெளி யிட்டது. இதுவும் அவர் எத்த கைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்று தான்.

எம்.ஜி.ஆரின் மரணம் இயற்கையானதல்ல, அது படுகொலை, மோரில் விஷம் வைத்து வி.என். ஜானகி கொன்று விட்டார் என்று பேட்டி அளித்ததும் ஜெயலலிதாதான். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

2004ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் இயந்திரத்தில் மோசடி என்று ஜெயலலிதா கூறினார். பின்னர் தேர்தல் கமிஷனே அதை மறுத்து செய்தி வெளியிட்டது. இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

அமெரிக்காவிலிருந்து வந்த கோடிக்கணக்கான தொகையை தன்னுடைய வங்கி கணக்கிலே டெபாசிட் செய்து கொண்டார் ஜெயலலிதா. யார் அனுப்பியது என்றே தனக்குத் தெரியாதென்றார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

தனது வளர்ச்சியைக் கண்டு எம்.ஜி.ஆர். பொறாமைப்படுகிறார் என்று ராஜிவ்காந்திக்கு தன் கைப்படவே கடிதம் எழுதி ஜெயலலிதா கொடுத்தனுப்பினார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

அரசு அலுவலர்களுக்கு அரசின் மொத்த வருவாயில் 94 சதவிகிதம் ஊதியமாகத் தரப்படுகிறது என்றார் ஜெயலலிதா. பின்னர் அரசு அலுவலர் சங்கத்தினர் எல்லாம் மறுப்புத் தெரிவித்தபிறகு வாயை மூடிக் கொண்டார். இதுவும் அவர் எத்தகைய "உண்மை விளம்பி'' என்பதற்கான சான்றுதான்.

நான் சொல்ல நினச்சன் நீங்க சொல்லீட்டிங்க.

நானும் சொல்ல நினைத்தனான் அதுகுள்ள நீங்க சொல்டிட்டீங்க

:P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.