Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தோ-பசுபிக் பிராந்திய உறவில் இலங்கையின் தனித்துவமான நிலை கோடிடப்பட்டுள்ளது: அமெரிக்க பிரதி செயலர் ஹெனிக் ஜொனதனின் சிறப்பு செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லியோ நிரோஷ தர்ஷன்)

"மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்ட   முயற்சிகளுக்கு ஒத்தழைத்தல் என்பதன் பின்னணியிலேயே இலங்கையுடனான எமது பாதுகாப்பு உறவை முகாமைத்துவம்  செய்கிறோம். "


இந்தோ-பசுபிக் பிராந்திய உறவில் இலங்கையின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான நிலை வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் இலங்கையின் பிராந்திய தொடர்புக்கான தமது நோக்கத்தை இலங்கை தலைவர்கள்    கோடிட்டுக் காட்டியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசிய பொது இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதி  செயலர் ஹெனிக் ஜொனதன் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்புச்  செய்வதற்கு இலங்கையை நன்கு தயாராக்கி தற்போதைய மற்றும்   வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு இலங்கையின் பாதுகாப்பு படைகளை மறுவடிவமைப்பதற்கு அமெரிக்கா உறுதிப்பாட்டுடன்  உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்க பிரதி  செயலர் ஹெனிக்  ஜொனதன் வீரகேசரி வார வெளியீட்டிற்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

மனித  உரிமைகள்  மற்றும்  பொறுப்புக்கூறல்:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நாம் நெருக்கமாக பணியாற்றியுள்ளதுடன், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின்  ஆற்றலை பலப்படுத்துவதற்கான மற்றும் இழப்பீட்டு அலுவலகம் போன்ற ஏனைய நல்லிணக்க பொறிமுறைகளை ஸ்தாபிப்பதற்கான  முயற்சிகளுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளோம். புதிய அரசாங்கத்துடன் அந்த ஒத்துழைப்பை தொடர்வதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.

நல்லிணக்கத்தையும்  அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கான பொறுப்புக்கூறலையும் ஊக்குவிப்பதற்கு    அமெரிக்கா உறுதிப்பாட்டுடன் உள்ளது. மனித உரிமைகளுக்கான மதிப்பு, ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதை இலக்காக் கொண்ட முயற்சிகளுக்கு ஒத்தழைத்தல் என்பதன் பின்னணியிலேயே நாம் எமது பாதுகாப்பு  உறவை  இலங்கையுடன்  முகாமைத்துவம்  செய்கிறோம்.  

முன்னைய மோதல் வலயத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் அந்த காணிகளை மீண்டும் தனியார் உரிமையாளர்களுக்கு மாற்றுவதை எளிதாக்குவதற்கும்  2006 ஆம் ஆண்டில் இருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேலான தொகையை  வழங்குவதன் மூலம்   நல்லிணக்க   நடவடிக்கைகளுக்கும் நாம் பங்களிப்பு செய்துள்ளோம்.   2020  ஆம் ஆண்டுக்குள்  நாட்டை  கண்ணிவெடி பாதிப்பற்றதாக மாற்றுவதை  இலக்காகக்  கொண்ட இலங்கையின்  தேசிய  கண்ணிவெடி நடவடிக்கைத்  திட்டத்திற்கு (Sri Lanka National Mine Action Plan) இந்த  நிதிகள் உதவுகின்றன.

ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியிருந்தாலும் கூட, அனைத்து இலங்கையர்களுக்குமான நல்லிணக்கம்  மற்றும்   நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதை  முன்னோக்கி  நகர்த்துவதற்கும் சர்வதேச சமூகத்துக்கான – மிக முக்கியமாக இலங்கை மக்களுக்கான- இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாடுகளுக்கு உதவுவதற்காக நாம் தொடர்ந்தும் முழுமையான தொடர்பில்  இருக்கிறோம்.

 

பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட  இலங்கை:
இரு நாடுகளினதும் திறன்கள் மற்றும்  இயங்குதன்மையை அபிவிருத்தி செய்துள்ள  பல்வேறு விதமான கூட்டு நடவடிக்கைகள்  மற்றும்  பயிற்சிகளை அமெரிக்க - இலங்கை  பாதுகாப்பு  ஒத்துழைப்பு உள்ளடக்கியுள்ளது. மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த  நிவாரணம் மற்றும் கடல்சார்  கள விழிப்புணர்வு போன்ற எமது பரஸ்பர பாதுகாப்பு நலன்களுக்கு தீர்வு  காண்பதற்காக இந்த ஒத்துழைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.    

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் உறவில் நாட்டின் இருப்பிடத்தை பிரதிபலிக்கும் மற்றும் இந்த தனித்துவமான நிலை வழங்கும்  வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் இலங்கையின் பிராந்தியதொடர்புக்கான தமது நோக்கத்தை இலங்கை  தலைவர்கள்    கோடிட்டுக் காட்டியுள்ளனர்.   

 

பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பங்களிப்புச்  செய்வதற்கு இலங்கையை நன்கு தயாராக்கி தற்போதைய  மற்றும்  வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு இலங்கையின் பாதுகாப்பு படைகளை மறுவடிவமைப்பதற்கு இலங்கைக்கு உதவ அமெரிக்கா உறுதிப்பாட்டுடன் உள்ளது.  

அமெரிக்க பயிற்சி,  உதவி,  மற்றும் தொடர்புகளின் அடிப்படை  அங்கமொன்றென்ற  வகையில் மனித உரிமைகளுக்கான மதிப்பை , பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வலியுறுத்துவதாக இருக்கும்.

கொவிட்-19  உலகளாவிய பொருளாதார சவால்களை வழங்கியுள்ளதுடன், அவற்றை வெற்றி கொள்வதற்கு  இலங்கைக்கு  அமெரிக்கா  உதவி  வருகிறது.  அமெரிக்கா ஏற்கனவே  இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக   இருப்பதுடன்,   தொழில்வாய்ப்புகளுக்கு ஒத்துழைப்பு  நல்கியும்  கொவிட்-19   இலிருந்து மீண்டு  வருவதற்கு இலங்கையின்  பொருளாதாரத்துக்கு  உதவியும்  அமெரிக்க சந்தைக்கு தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை (Personal  Protective  Equipment - PPE) விநியோகிப்பதற்கு இலங்கை நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளையும் அடையாளம் கண்டுள்ளது.   

உதவிகளை பொறுத்த வரையில், கொவிட்-19  இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில் அதற்கு  உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க   டொலர்களை  அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த நெருக்கடியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்மற்றும் மக்களுக்கான சமூக சேவைகளை இந்த  உதவி அதிகரித்துள்ளதுடன், சிறிய  மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளையும்     பலப்படுத்தியுள்ளது. அத்துடன்,  ஆய்வுக்கூட கட்டமைப்புகளை தயார்படுத்தவும் நோயாளர்-கண்டுபிடிப்பு மற்றும் நிகழ்வு-அடிப்படையிலான கண்காணிப்பை செயல்படுத்தவும் மற்றும் பதிலளிப்பு  மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உதவவும் அரசாங்கத்துக்கு  உதவியுமுள்ளது. 

அமெரிக்க அரசாங்கம்  1956  ஆம்  ஆண்டிலிருந்து இலங்கைக்கு அபிவிருத்தி மற்றும்  மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. கடந்த  20 வருடங்களில் இலங்கைக்கு மொத்தமாக ஒரு பில்லியன் அமெரிக்க  டொலர்களுக்கும் அதிகமான உதவிகளை    அமெரிக்காவழங்கியுள்ளதுடன், அதில் சுகாதாரத்துறைக்காக மாத்திரம்  26 மில்லியன்  அமெரிக்க டொலர்களும் அடங்கும்.

https://www.virakesari.lk/article/90375

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.