Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Featured Replies

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

சர்வதேசத்தை நம்புகிறோம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

 

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் சர்வதேசம் நீதியை பெற்றுத் தருமென உறுதியாக நம்புவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று (30) கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இதன்போதே அந்த அமைப்பின் வடக்கு மாகாணத்திற்குரிய திட்டப்பணிப்பாளர் சிவகுமார் விதுரா மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப் பீடமேறிய பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழர் தாயக நிலப்பரப்பில் கிளைமோர்த் தாக்குதல்கள் மூலம் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

செஞ்சோலை சிறார் இல்லம், மருத்துவமனைகள் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொதுமக்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களிலும் தரை மற்றும் கடல் வழித் தாக்குதல்களிலும் பெருமளவான சிறார்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அது மட்டுமின்றி யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்த போராளிகளுடன் சென்ற அவர்களது பச்சிளம் குழந்தைகள் நூற்றுக் கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலமாக காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடிய போதிலும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து 2012ல் இருந்து 2017ம் ஆண்டு காலப்பகுதிவரை சர்வதேச பாதுகாப்பு சபை வரை தேடியும் தங்களிற்கான நீதி கிடைக்கவில்லை.

இந்த நிலையிலேயே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதியை கோரியுள்ளோம். இதனூடாகவெனினும் பாதிக்கப்பட்ட எமக்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத்தர வேண்டும்” – என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

https://newuthayan.com/சர்வதேசத்தை-நம்புகிறோம்/

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்தினம் துக்கதினமே -காணாமல் போனோரின் உறவுகள்…

நாளை கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றையதினம் காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்றுவருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதியினை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. நாளையதினம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை நாம் துக்கதினமாக அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் ஜனநாயக ரீதியான எமது போராட்டங்களுக்கு அரசினால் பல்வேறு அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் பிரயோகிக்கப்படுவதால் போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவான நிலையில் காணப்படுகின்றது.

எமது உறவுகளை தேடியே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’ ‘தமிழ்க்குழந்தைகளும் பயங்கரவாதிகளா?’  ‘பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே?’  ‘அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

http://www.ilakku.org/சிறுவர்தினம்-துக்கதினமே/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.