Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை குறித்த சிறப்பு நிகழ்வுகளை மனித உரிமைகள் பேரவை நடத்த வேண்டும்: ஜெனீவாவில் கோரிக்கை

Featured Replies

இலங்கை குறித்த சிறப்பு நிகழ்வுகளை மனித உரிமைகள் பேரவை நடத்த வேண்டும்: ஜெனீவாவில் கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று ஜெனீவாவில் கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.

“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் வழமைபோன்று இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டுள்ள தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு ஆகியவற்றிற்கான நீதியினை கோரி குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மூன்றாவது வாரத்தில் கடந்த திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 4 – ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் ( Item 4 – Human rights situations that require the Council’s attention – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் குழும ஆற்றல்படுத்துவதற்கான, வளர்ச்சிக்கான அமைப்பு சார்பாக உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை உரையாற்றிய போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார். அவரது உரையின் விபரம் வருமாறு;

“அனைத்து நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய மனித உரிமை பேரவை உறுப்பினர், உயர் மனித உரிமை ஆணையரது அறிக்கை, உறுப்பினர்களின் குறுக்கீடுகள் ஆகியவற்றை வரவேற்கின்றேன். ஆனால் அந்த அறிக்கைகளில், தலையீடுகளில் பாலஸ்தீனர்களின் நில ஆக்கிரமிப்பு, இந்தியா, பாகிஸ்தான் ஆட்சிசெய்யும் காஷ்மீர், கொங்கொங் சிறப்பு நிர்வாகப்பகுதி, சிங்சியாங் உய்கூர் தன்னாட்சி பகுதி, ரோகின் நாட்டில் ரோகிங்கிய மக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தமிழர்கள் இன அழிப்பினை சந்தித்தனர். அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் (28 டிசம்பர், 2008 முதல் மே 2009 வரை) 1,47,000 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்தது. தமிழர்களின் தாயகத்தை இராணுவம் அபகரித்தது. 80 மில்லியன் மக்கள் தேர்வு செய்த வடக்கு மாகாண சபை தமிழின அழிப்பிற்கு எதிராக பன்னாட்டு விசாரணையை நடத்த வேண்டுகோள் வைத்தது. 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தாலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பாகுபாட்டை காட்டி வருகின்றனர்.

அதனால் இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்த்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்று கோரிக்கையை முன்வைத்தார்.

 

https://thinakkural.lk/article/75439

  • தொடங்கியவர்

பாதுகாப்பு தரப்பினர் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை- ஜெனீவாவில் இலங்கை

இலங்கையில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து வெளியிட்டுள்ள பதிலில் ஜெனீவாவில் ஐக்கியநாடுகளுக்கான இலங்கையின் பிரதிநிரந்தர வதிவிடப்பிரதிநிதி டயானி மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

dayani-300x143.jpg
அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சட்டஅமுலாக்கல் அதிகாரிகளிடமோ அல்லது தேசிய மனித உரிமை ஆணையகம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பேர்ன்றவற்றிடம் முறைப்பாடு செய்யலாம் என இலங்கையின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

srilanka-army.jpg
இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம் சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ள டயானி மென்டிஸ் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நலன் தொடர்பில் வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்;குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீனவழிமுறைகளை பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில் தனது தேசிய பாதுகாப்பு தொடர்பில் பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்த சூழமைவின் அடிப்படையில் இந்த யதார்த்த்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

https://thinakkural.lk/article/75555

எந்த மக்கள் குழுவையும் பாதுகாப்பு தரப்பு கண்காணிக்கவில்லையாம்! – ஐநாவில் இலங்கை!

இலங்கையில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.


 
இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சார்பாக விளக்கமளிக்கும்போதே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.


 
இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள டயானி மென்டிஸ், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு நலன் தொடர்பாக வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில், தனது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://newuthayan.com/எந்த-மக்கள்-குழுவையும்-ப/

!

  • கருத்துக்கள உறவுகள்

பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டும்- ஜெனீவாவில் கோரிக்கை

பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என ஜெனீவாவில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் கொரோனா வைரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது. ஒக்டோபர் 07ம் திகதிவரை இடம்பெற இருக்கும் இக்கூட்டத்தொடரில் உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில் இடம்பெற்ற பிரிவு 4-ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனம் தேவைப்படும் மனித உரிமை சூழ்நிலைகள் ( Item 4 – Human rights situations that require the Council’s attention – General Debate) தொடர்பான பொது விவாதத்தில் குழும ஆற்றல்படுத்துவதற்கான, வளர்ச்சிக்கான அமைப்பு சார்பாக உரையாற்றிய கெவின் கணபதிபிள்ளை,

“அனைத்து நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய மனித உரிமை பேரவை உறுப்பினர், உயர் மனித உரிமை ஆணையரது அறிக்கை, உறுப்பினர்களின் குறுக்கீடுகள் ஆகியவற்றை வரவேற்கின்றேன். ஆனால் அந்த அறிக்கைகளில், தலையீடுகளில் பாலஸ்தீனர்களின் நில ஆக்கிரமிப்பு, இந்தியா, பாகிஸ்தான் ஆட்சிசெய்யும் காஷ்மீர், கொங்கொங் சிறப்பு நிர்வாகப்பகுதி, சிங்சியாங் உய்கூர் தன்னாட்சி பகுதி, ரோகின் நாட்டில் ரோகிங்கிய மக்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் தமிழர்கள் இன அழிப்பினை சந்தித்தனர். அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் (28 டிசம்பர், 2008 முதல் மே 2009 வரை) 1,47,000 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்தது. தமிழர்களின் தாயகத்தை இராணுவம் அபகரித்தது.  மக்கள் தேர்வு செய்த வடக்கு மாகாண சபை தமிழின அழிப்பிற்கு எதிராக பன்னாட்டு விசாரணையை நடத்த வேண்டுகோள் வைத்தது. 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தாலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பாகுபாட்டை காட்டி வருகின்றனர்.

அதனால் இலங்கைக்கான சிறப்பு அமர்வுகளை நடத்த வேண்டும், பன்னாட்டு குற்றவியல் மன்றத்தில் இலங்கையை குற்றவாளியாக நிறுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளர்களை நியமித்து, உலகிற்கு உண்மையை எடுத்துரைக்கவேண்டும். இராணுவ மயமாக்குவதையும் காலனியாக்குவதையும் நிறுத்தவேண்டும்” என்றார்.

 

http://www.ilakku.org/பன்னாட்டு-குற்றவியல்-மன்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.