Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
-கனகராசா சரவணன்-
மட்டக்களப்பு பொலிசாரால்; பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேஜர்.ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்குதல் செய்யப்பட்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இது தவறான செயல் என நீதிபதி தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த 26 ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைந்வேந்தல் செய்ய முற்பட்டார்கள் எனக் குற்றச்சாட்டு சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா. அரியேந்திரன், சீ.யோகேஸ்வரன், மட்டு மாநகர சபை மேயர் ரி.சரவணபவான், நா.சங்கரப்பிள்ளை (நகுலேஸ்) ஆகியோருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்குதல் இசய்து இன்று வெள்ளிக்கிழமை (02) நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்ற அழைப்பாணை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன், இவர்களுக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினார். இவருடன் நீதிமன்றில் பல சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் எடுக்கப்பட்டு இதில் உள்ள பல விடயங்களை சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டியதை அடுத்து நீதிபதி இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என அத்தனை பேரையும் விடுதலை செய்தார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.சுமந்திரன் தெரிவித்தாவது,
இந்த மாவட்டத்தில் முக்கிய பிரைஜைகள் என்பவர்கள் மீது எதிரிகளுக்கு கொடுக்கின்ற அழைப்பாணை வழங்கப்பட்டது. அவர்கள் நீதிமன்றில் தோன்றினர். இவர்கள் சார்பாக நான் ஆஜராகினேன் என்னுடன்; அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகினர்.
இப்படியான பொலிஸ் நடவடிக்கை முற்று முழுதாகத் தவறானது என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம். எந்தவித குற்றமும் செய்ததாக அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை. அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் பொய்யானவை. திலீபன் யுத்தத்தில் மரணித்ததாகவும், அறிக்கையிடப்பட்டுள்ளது திலீபன் உண்ணாவிரதம் இருந்து 12 நாட்களில் மரணித்தவர். அவருடைய நினைவு நாளை நாங்கள் வருடாவருடம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
ஆகையினால் பொலிசாருக்கு கூட அந்த தகவல் தெரியாமல் அல்லது வேணும் என்றே தவறாக அதிலே எழுதப்பட்டிருந்தது. இந்த 6 பேரும் எவ்வித குற்றமும் செய்தார்கள் என்று சொல்லப்படவில்லை. தடை உத்தரவு பெற்பட்டதாக நீதிமன்றில் பொலிசார் தெரிவித்தனர். அதன் போது நீதவான் தடை உத்தரவு கொடுக்க முடியாது எனப் பொலிசாருக்கு அறிவுறுத்தியிருப்பதாக நாங்களும் அதனை வலியுறுத்தி சொன்னோம்.
பொதுமக்கள் நடமாடுவதற்கு பொது இடங்களிலே இடையூறு விளைவித்தால் மட்டும்தான் அப்படியான தடை உத்தரவு கொடுக்கப்பட முடியுமே தவிர பொலிசாரின் கற்பனையிலே ஏதோ எங்கோ நடக்கப் போகின்றது எனத் தடை உத்தரவு பெற முடியாது. அது நீதிமன்றச் செயற்பாடுகளைத் தவறாக இட்டுச் செல்லுகின்ற செயற்பாடு. ஆகவே இந்தத் தருணத்தில் நீதிமன்றத்திலே பொய்யான அறிக்கை சமர்ப்பித்து இந்த முக்கியமானவர்களையும் பொலிஸ் நீதிமன்றத்துக்கு கொண்டுவந்து நிறுத்திய செயலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம்.
நீதிபதியும் அதனை ஏற்றுக் கொண்டு திறந்த நீதிமன்றத்தில் இது தவறான செயல் என்பதைச் சொன்னார். போலிசார் இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்வார்கள் என நம்புகின்றோம். ஆனால் பொலிசார் முறைதவறி நடந்த காரணத்தாலே பொலிசாருக்கு எதிராக நாங்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுப்போம்.
ஏன் என்றால் இது இப்போது வழக்கமாக வந்துள்ளது. இப்பொழுது அவர் அதை செய்கிறார். கோயிலுள் கும்பிடுகின்றார், வீட்டிலே விரதம் இருக்கப் போகின்றார்...என அதைத் தடுங்கள் என நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவு பெறும் வழக்கம் ஒன்று ஆரம்பமாகிறது. அதை முளையிலே கிள்ளியெறியவேண்டும்.
அப்படியான தடை உத்தரவு கொடுப்பதற்கு எங்கள் நாட்டின் சட்டத்திலே இடமே கிடையாது. ஆகவே தவறான விதத்திலே நீதிமன்றத்தை நடாத்தும் பொலிசாருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து இந்த போக்கை தடுப்போம்.
இன்று கௌரவ நீதிபதி, இந்த நடைமுறை தவறு என்பதை அவராகவே ஒரு முறைக்கு மேல் சொன்னார். அதனை மதிப்போது நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் அத்தனை பேரும் விடுவிக்கப்பட்னர் என நீதிமன்றம் உத்தரவிட்டது .
எனவே இதற்குப் பிறகாவது பொலிசார் இப்படி முறை தவறி நடக்க கூடாது என பொலிசாருக்கு நாங்கள் எச்சரிக்கை விடுகின்றோம் என அவர் தெரிவித்தார்!
(தினக்குரல்)
120661446_10158058364389130_154250638611
 
 
120527814_10158058366774130_877968684131
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் எடுக்கப்பட்டு இதில் உள்ள பல விடயங்களை சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டியதை அடுத்து நீதிபதி இதற்கு மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என அத்தனை பேரையும் விடுதலை செய்தார்.

1977ம் ஆண்டு அனுராதபுரத்திலுள்ள தமிழர்களின் வீடுகளையும், வியாபார நிலையங்களைக் கொள்ளையடித்த கூட்டத்தினாலேயே நாங்கள் பாதுகாக்கப்பட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.