Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தியில் இதயசுத்தி வேண்டும்

Featured Replies

பெருந்தோட்டத்துறை அபிவிருத்தியில் இதயசுத்தி வேண்டும்

பா.நிரோஸ்

இலங்கையின் பொருளாதார, சமூகக் கட்டமைப்பில், பிரத்தானியரின் வருகை பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. பிரத்தானியர் ஆட்சியின் இறுதிக் காலத்தில், நாட்டின் பிரதான வருவாயை ஏற்படுத்திக் கொடுக்கும் தொழிற்றுறையாக, பெருந்தோட்டக் கைத்தொழில் காணப்பட்டதோடு, தேயிலை, தென்னை, இறப்பர் என்பன, பெருந்தோட்டத் துறையின் பயிர்களாக இருந்தன.

நாட்டில் ஆட்சிப் பீடமேறிய அரசாங்கங்களும் ஆட்சியாளர்களும், பெருந்தோட்டத் தொழிற்றுறையில் ஈடுபடும் பெருந்தோட்டச் சமூகத்தை வஞ்சித்து வருவதால், பிரித்தானியர் காலத்தில் இலங்கைப் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த பெருந்தோட்டத் தொழிற்றுறை, இன்று பின்தள்ளப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிற்துறையை மேவிக்கொண்டு, சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில் என்பன முன்னிலை வகிக்கின்றன.

இத்துறையின் வீழ்ச்சிப்போக்கு, ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது. பெருந்தோட்டத் தொழிற்றுறை என்பது, வெறுமனே ஒரு தொழிற்றுறையாக மாத்திரமல்லாது, ஒரு சமூகத்தின் இருப்பாக இருப்பதால், இந்த வீழ்ச்சி பற்றிய தேடல் முக்கியமானது.

பிரித்தானியரின் நிர்வாகத்தின் கீழ், பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகவிருந்த காணிகள், 1972ஆம் ஆண்டு காணி மறுசீரமைப்பு சட்டத்தின் மூலமாக, அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. அரசாங்கம் வசமிருந்த பெருந்தோட்டக் காணிகள், 1992ஆம் ஆண்டு 23 தனியார் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை ஆகிய அரச திணைக்களங்கள் என மொத்தமாக 25 நிறுவனங்களுக்கு, 99 வருடங்கள் குத்தகையின் அடிப்படையில் தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பயிர் நிலங்கள் வழங்கப்பட்டன.  

மேற்குறித்த சில கம்பனிகளின் உரிமம், மாற்றம் பெற்றுள்ளன. இதேவேளை, பெருந்தோட்டக் கம்பனிகள் சிலவற்றின் பெயரும் உரிமமும் மட்டுமே சில கம்பனிகளில் மாற்றம் கண்டுள்ளன.
இப்பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்பில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சிடமிருந்து,  தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கியமான சில தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வருடம் ஜனவரி 27ஆம் திகதி விண்ணப்பித்திருந்த தகவல் கோரிக்கைக்கு, ஜூலை 21ஆம் திகதியே பதில்கள் கிடைத்தன. தமிழ் மொழியில் தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆங்கில மொழியிலேயே தகவல்கள் கிடைத்துள்ளன.

23 பெருந்தோட்டக் கம்பனிகளில் (RPC), சிலாபம், குருநாகல் ஆகிய இரு கம்பனிகளைத் தவிர்ந்த ஏனைய 21 கம்பனிகளே, தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அக்கரப்பத்தனை கம்பனி தேயிலையையும் சிலாபம் கம்பனி - தென்னையை மாத்திரமும் பயிர்ச் செய்கின்றன. 23 கம்பனிகளில் 18 கம்பனிகள், தேயிலை, தென்னை, இறப்பர் மூன்று பயிர்களையும் உற்பத்திச் செய்கின்றன.

மலையகத்தில் எத்தனை தோட்டங்கள் உள்ளன?
23 கம்பனிகள் தொடர்பான தகவல்களைக் கோரியிருந்த போதிலும், 20 கம்பனிகளின் தகவல்களே தரப்பட்டுள்ளன. சிலாபம், எல்கடுவ, குருநாகல் ஆகிய கம்பனிகளில் உள்ள தோட்டங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வழங்கப்படவில்லை என்பதால், தகவல்கள் வழங்கப்பட்டுள்ள கம்பனிகளின் அடிப்படையிலேயே தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்திலேயே, ஏனைய மாவட்டங்களைவிட அதிகளவான (128) தோட்டங்கள் காணப்படுகின்றன. (தோட்டங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 அல்லது 5க்கும் மேற்பட்டப் பிரிவுகளைக் கொண்டிருக்கும்) இரண்டாவதாக, பதுளையில் 67 தோட்டங்கள் காணப்படுகின்றன. ஆகக் குறைவான தோட்டங்களைக் கொண்ட மாவட்டமாக, மாத்தளை மாவட்டம் காணப்படுகின்றது. மாத்தளை - யட்டவத்த தோட்டம், உடபுஸ்ஸல்லாவ கம்பனியால் நிர்வகிக்கப்படுகிறது.

(நுவரெலியா - ஹங்குரங்கெத்த பிரதேசத்திலும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அதிகமான பிரதேசங்களிலும் உள்ள பெருந்தோட்டங்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன)

தொழிலாளர்களின் எண்ணிக்கை
23 பெருந்தோட்டக் கம்பனிகளின் பல்வேறு காரணிகள் காரணமாக, தொழிலாளர் பரம்பல் குறைவடைந்து வருகின்றது. இதற்கு, கூட்டு ஒப்பந்தச் சம்பள நிர்ணய முறைமை, மிகப் பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனை, மத்திய வங்கியின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பள நிர்ணயச் சபை சட்டத்தின் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்படும் தொழிற்றுறைகளில், தொழிலாளர் பரம்பல் அதிகரித்துச் செல்கின்ற விடயம் குறித்தும், அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

கடந்த 9 வருடங்களுக்கு முன்பு, 2 இலட்சத்து 2 ஆயிரத்து 48ஆகக் காணப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை (202,448), 2018ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 34 ஆயிரத்து 463ஆக (134,463)குறைவடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2 இலட்சத்து 31 ஆயிரத்து 660ஆக (231,660) அதிகரித்திருக்கின்றது. 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2014ஆம் ஆண்டில் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 29 ஆயிரத்தால் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

தேயிலை உற்பத்தியில், தற்போதைய சர்வதேச கேள்வியை ஈடுசெய்யும்  தரப்படுத்தலில், இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. சீனா முதலாம் இடத்திலும் இரண்டாம் இடத்தில் இந்தியாவும், ஆபிரிக்க நாடான கென்யா மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்டக் கம்பனியில், 2009ஆம் ஆண்டு 16,173 தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், 2018ஆம் ஆண்டில், அவர்களின் எண்ணிக்கை 9,701ஆகக் குறைவடைந்துள்ளது. 6,472 தொழிலாளர்கள் குறைவடைந்துள்ளனர். சிலாபம், எல்கடுவ ஆகிய கம்பனிகளே, ஆகக் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட கம்பனிகளாக இருக்கின்றன.

இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய 14 மாவட்டங்களில், அதிக தேயிலை விளைச்சலுடைய மாவட்டமாக நுவரெலியா மாவட்டமும் குறைந்த விளைச்சலுடைய மாவட்டமாக குருநாகல் மாவட்டமும் காணப்படுகின்றது.
கடந்த 5 வருடங்களில் தேயிலை மீள் நடுகையானது, சிறுதோட்ட உடமையாளர்களிடத்தில் 1,027 ஹெக்டெயராகக் காணப்படுகின்ற அதேவேளை, பெருந்தோட்டக் கம்பனிகளின் மீள் நடுகை, வெறுமனே 257 ஹெக்டெயராகக் காணப்படுகின்றது.

இதுவும், இந்தத் தொழிலாளர் பரம்பலின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். சிறுதோட்ட உடமையாளர்களின் (Small Holders) எழுச்சி, இன்றைய தேசிய, சர்வதேச கேள்வியை ஈடுசெய்வதாக அமைகிறது.
2007ஆம் ஆண்டில், 90,752 ஹெக்டெயர் பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டிருந்த அதேவேளை, 2018இல் அது, 77,553 ஹெக்டெயராகக் குறைவடைந்துள்ளது. ஆனால், 2007ஆம் ஆண்டில் சிறுதோட்ட உடைமையாளர்களால் 119,492 ஹெக்டெயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், 2018இல் அது, 122,448ஆக அதிகரித்தது.

பெருந்தோட்டப் பகுதிகளில், 13,199 ஹெக்டெயர் நிலப்பகுதி, பயிரிடப்படாத தரிசு நிலங்களாகியுள்ளன. அதுவும், இந்தத் தொழிலாளர் பரம்பலைப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சிறுதோட்ட உடமையாளர்கள் பயிரிடப்படும் நிலம், 2,956 ஹெக்டெயராக அதிகரித்துள்ளது. இதேபோன்றதொரு நிலைமையே, ஏனைய இறப்பர், தென்னை ஆகிய தொழிற்றுறைகளிலும் காணப்படுகின்றன.

தனியார் ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்பான தொழில் திணைக்களத்தின் தகவல்படி, பெருந்தோட்டங்களிலேயே கடந்த பத்து வருடங்களில், அதிகளவான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இலங்கையின் வேலைநிறுத்த வரலாற்றில், பெருந்தோட்டங்களிலேயே அதிகளான வேலைநிறுத்தங்கள் ஏற்படுவதாகப் பதிவாகியுள்ளது.

இதன்படி, 2018ஆம் ஆண்டிலேயே அதிகளவான (29) போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் அனைத்தும், பெருந்தோட்டங்களிலேயே நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வைக் கோரியிருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம், கூட்டு ஒப்பந்தமென்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே, கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. இதன்படி, வருடமொன்றுக்கு வெறும் 10 ரூபாய் சம்பள அதிகரிப்பே வழங்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை, தொழிற்சங்கங்கள் ஒருபோதும் அதிகரித்ததில்லை என்பதற்கு இதுவே சாட்சி.

ஆக, பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சிக்குக் காரணமான தொழிலாளர்களின் எண்ணிக்கையும், கடந்த 9 வருடங்களில் வீழ்ச்சியடைந்து இருப்பதற்கு, இதய சுத்தியற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பங்கும் நேரடியாகவே இருக்கிறது.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெருந்தோட்டத்துறை-அபிவிருத்தியில்-இதயசுத்தி-வேண்டும்/91-256438

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ரூபா 1000ம் வழங்க முடிவு

1-104-696x392.jpg
 41 Views

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக  உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம்  தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

மேலும்  2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்,

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் ஓய்வூதிய வயதை 60 ஆக நிர்ணயிக்க ஊழியர் சேமலாப நிதி சட்டம் திருத்தப்பட வேண்டும்

ஒற்றை பயன்பாட்டு பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுக்கு 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் தடை

நிதி திருத்தச் சட்டம் அடுத்த ஆண்டு திருத்தப்பட உள்ளது

உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் பின்னர் நிர்வாகமற்ற அரச அதிகாரிகளுக்கு மேலதிக தொழில்களில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்

அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதிக்கான வங்கி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களையும் 7% வரை குறைக்கப்படும்

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டம் மேலும் திருத்தப்பட வேண்டும்

வங்கி சாரா நிதி நிறுவனங்களை கண்காணிக்க வலுவான புதிய சட்டங்கள் அமுலில் இருக்க வேண்டும்

உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க நடவடிக்கை

இரத்தினக்கல் மற்றும் நகைகளுக்கு மூன்று வருடங்கள் ஏற்றுமதி வரி விலக்கு அளிக்க தீர்மானம்

சுற்றுலாத் துறையினரால் பெறப்பட்ட கடன்களுக்கான தற்காலிக தடை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய வங்கியால் நீடிக்கப்படும்

கொழும்பின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் இலங்கையின் முக்கிய நகரங்களில் வீட்டு வசதிகள் மேம்படுத்தப்படும்

நாட்டில் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மக்கள் தொகையில் 54% பேருக்கு மட்டுமே சுத்தமான குடிநீர் கிடைக்கிறது. அனைவருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கவும் அதற்காக 1000 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்யவும் தீர்மானம்

கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இயற்கை எரிவாயு மின் நிலையமாக மாற்ற தீர்மானம்

600 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் நாட்டில் கட்ட அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையின் எரிசக்தி விநியோகத்தில் 70 சதவீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து 2023 க்குள் பெறப்படும்

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 2021 ஜனவரி முதலாம் திகதி முதல் 1000 ரூபாயாக அதிகரிக்க தீர்மானம்

உலர் மீன் மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட மீன்களுக்கான வரியை அதிகரிக்க தீர்மானம்

மீன்வளத் தொழிலுக்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கிராமப்புறங்களில் உள்ள வழிபாட்டு தலங்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பால் பண்ணை அபிவிருத்திக்கு 500,000 ரூபாய் கடன் வழங்க முன்மொழிவு

பால்மா இறக்குமதிக்கு பதிலாக உள்ளூர் பால் உற்பத்திக்காக அரசாங்கம் நடத்தும் பண்ணைகளுக்கு கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

விவசாய நோக்கங்களுக்காக விளைநிலங்களைப் பயன்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களுக்கு அதிகாரம் வழங்க விவசாய அபிவிருத்தி சட்டத்தில் திருத்தம்

விவசாயிகளுக்கு விதை மற்றும் உரங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும் அதேவேளை மஞ்சள், இஞ்சியை இறக்குமதி செய்த் தடை

விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு கொள்முதல் விலை உத்தரவாதம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 45,000 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை

வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

சமுர்தி பயனாளிகளுக்கு 7% வட்டி விகிதத்தில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்

50 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் அதன் தொழிலாளர்களுக்கு (முதலாளியின் பங்களிப்பு 0.25) காப்பீட்டுத் திட்டம்

தொழிற் பயிற்சி மாணவர்களுக்கு மாதாந்தம் 4000 ரூபாயினை உதவித்தொகையாக வழங்க தீர்மானம்

100,000 ஆக உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை வருடத்துக்கு 200,000 மாணவர்களாக அதிகரிக்கப்படும்

தொழில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை, கல்வி தொலைக்காட்சி சேவைக்கு மேலதிகமாக 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கர்ப்பிணி மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் அவர்களது போஷாக்கினை மேம்படுத்தவும் நடவடிக்கை. திரிபோஷ உற்படுத்தியை அதிகரிக்க 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஆசிய அபிவிருத்தி வங்கி , ஜைய்கா மற்றும் உலக வங்கியிடமிருந்து 1400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அரசாங்கம் தீர்மானம்

சுகாதாரம் தொடர்பான நிறுவனங்களுக்கு கூடுதலாக 18,000 மில்லியன் ரூபாயினை ஒதுக்க தீர்மானம்

தொழில்முயற்சி பொருளாதார முறையை எதிர்வரும் 2 வருடங்களில் மேற்கொள்ள திட்டம்

தொழில்நுட்ப துறையின் விரிவாக்கத்திற்காக 800,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிராமங்களுக்கும் தொழிநுட்பத்தை கொண்டு செல்ல நடவடிக்கை. முழு நாடும் உள்ளடங்கும் வகையில் “கிராமத்துக்கு தொழிநுட்பம்” வேலைத்திட்டம்.

பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் சிறப்பு திட்டங்களை நிவர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்

தேசிய வரி வருவாயில் 50% க்கும் அதிக பங்களிப்பு செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தனியான பொது வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலவச சுகாதாரம் மற்றும் இலவச கல்வி மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

அரசு வங்கி, நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவிர மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான வருவாயைப் பெரும் வணிகங்களுக்கு வட் வரியை 8% க்கு மிகாமல் பராமரிக்க அரசாங்கம் தீர்மானம்

விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரி விலக்கு

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினருக்கு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகளை வழங்க தீர்மானம்

மாதத்துக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுவோரின், வருடாந்த மொத்த தொகைக்கு வரி அறவிடுதல் தொடர்பில் ஆராயப்படும்.

https://www.ilakku.org/பெருந்தோட்ட-தொழிலாளர்கள/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.