Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் லேட்: தட்டிக் கேட்ட நாகை பயணிக்கு

இலங்கை விமான நிலையத்தில் அடி, உதை

ஜூன் 07, 2007

திருச்சி: கொழும்புக்கு சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரை கொழும்பு விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

நாகை மாவட்டம் இருக்கை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (41). இவர் உள்பட 130 பயணிகள் கொழும்பிலிருந்து திருச்சி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பயணித்தனர்.

விமானம் நேற்று காலை 7.30 மணிக்குப் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் கிளம்புவது தாமதமானது. அரை மணி நேர தாமதத்திற்குப் பின்னர் விமானம் கிளம்பியது.

ஆனால் கிளம்பிய சில விநாடிகளிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பயணிகளை தரை இறக்கிய ஏர்லைன்ஸ் ஊழியர்கள், விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர் 11 மணிக்கு பயணிகளை விமானத்தில் ஏறுமாறு கூறினர். இன்னும் அரை மணி நேரத்தில் விமானம் கிளம்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்த பின்னர் மீண்டும் அனைவரையும் கீழே இறங்கி விமான நிலையத்தில் அமருமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் என்ன பிரச்சினை என்று ஆவேசமாக கேட்டனர்.

அப்போது ஜாகிர் உசேன், சற்று கோபமாக, வேறு ஏதாவது ஏற்பாடு செய்யக் கூடாதா என்று கேட்டுள்ளார்.ஆனால் அதைக் கண்டுகொள்ளாத ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள், பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கியுள்ளனர்.

ஆனால் ஜாகிர் உசேனை மட்டும் இறங்க விடாமல் தடுத்த பாதுகாவலர்கள் அவரை விமானத்திலேயே அமர வைத்தனர். பின்னர் கைவிலங்கிட்டு புகைப்படம் எடுத்தனர். பிறகு சரமாரியாக அடித்து உதைக்க ஆரம்பித்தனர்.

வலி தாங்க முடியாமல் ஜாகிர் உசேன் போட்ட கூச்சலால், கீழே இறங்கிக் கொண்டிருந்த பயணிகள் வேகமாக விமானத்திற்குள் வந்தனர். அனைவரும் பாதுகாவலர்களைத் தடுத்து நிறுத்தி ஜாகிர் உசேனைக் காப்பாற்றி கீழே அழைத்துச் சென்றனர்.

இப்படியாக அலைக்கழிக்கப்பட்ட பயணிகள் ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/06/07/passenger.html

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு தானே! அடித்தால் என்ன உதைத்தால் என்ன? மன்னித்து மறப்போம்!!

ம்... :lol::lol:

இனி அந்தோணி சொல்லுவார் "இந்திய பயணிகளை அடித்து உதைப்பதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு எந்த தேவையும் இல்லை" என்று.

சிங்களவனுக்கு பதில் அடி உதையாத்தான் கொடுக்கணும் சாத்வீகம் சரிவராது.அகிம்சை தேசத்துக்கே சாத்வீகத்தின் அருமை தெரியாத போது எப்படி சாத்வீகத்தை இலங்கை அரசு ஏற்கும்

நாய்களுக்கு அடிக்கணும் ஓட ஓட நாயை கல்லால் அடிகிற மாதிரி அடிக்கணும் அப்போதுதான் தமிழனுக்கு மரியாதை உலகில் கிடைக்கும்.தமிழன் என்றால் எல்லோருக்கும் கேலிக்கூத்தாகவும் பகடைகளாகவும் போய்விட்டுது இந்த நிலமை மாறும் நாள் வெகு துரத்தில் இல்லை.மண்டை தீவு சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பயணிகள் மரியாதையாக தங்கி செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்டைதீவில் தமிழீழ ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அமைப்பதென ஏற்கனவே முடிவாகிவிட்டது. உங்கட விமான நிலையத்தை ஏன் ஆனையிறவில வைக்கக்கூடாது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனத்தின் தலைவர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முத்தமிழையும் வித்தவர் என்ன வாய் பார்க்கிறாரா? இல்லை வழமைபோல் கடிதம் எழுதுகிறாரா?

தமிழனத்தின் தலைவர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் முத்தமிழையும் வித்தவர் என்ன வாய் பார்க்கிறாரா? இல்லை வழமைபோல் கடிதம் எழுதுகிறாரா?

இந்த வித்தகர் இன்னும் ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித்தவிக்கின்றார் இருந்தாள் இன்னும் ஒரு அமைச்சர் பதவி அல்லது பாராளுமன்றப்பதவி கொடுத்து குடும்ப அரசியலுக்கு தன்னை பிரதமர் ஆக்க வேண்டும் என்று கேட்பார்!

இன்னும் முயற்சி செய்வார் போல் கிடக்கு!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் மேலே பதிவு செய்யப்பட்ட சில கருத்துககள் மூலம், நாம் தளத்தின் விதிமுறைகளை மீறுவதாக.

அந்தப்பயணி சிலவேளை சட்டத்தை மீறி நடந்திருந்தாலும், இவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காட்டுமிராண்டித்தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்பதால் அடி உதை விழுந்திருக்கும்.

மானநஸ்ட வழக்கு டபோடனும்.

'விடயமறியாமல் எதையும் சொல்லாதீர்கள் எயார் லங்கன் ஊழியர் வேடத்தில் புலிகளே இதனைச் செய்தார்கள். இந்தியாவிடம் நாங்கள் இதைத் தெரிவித்து கூட்டுப்பறப்பிற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும்' இப்படி இலங்கையரசு அறிக்கைவிடப் போகின்றது .

இந்த நிகழ்விலிருந்து இந்தியா உட்பட உலகனாடுகள் ஒரு விடையத்தை விளங்கிக்கொண்டால் சரி..

ஒரு மதிப்பாக நடத்த வேண்டிய அந் நிய விமானப்பயணிக்கே இப்படி நிலைமையென்றால், உரிமைக்காக அரை நூற்றாண்டுக்கு மேல் போராடும் இலங்கை தமிழ் இனத்திற்கு இலங்கை காவல் படைகளால் எப்படியான நிலைமைகள்? இருக்கும் என்பதை இனியாவது உணர்வார்களா?

காட்டுமிராண்டிகளால் பாதிக்கப்பட்ட தமிழ்னாட்டு பிரயாணிக்கு எமது கவலையை அறியத்தருகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் புலிகள்தான் செய்தார்கள் என்று இன்னும் சில நாட்களில் அறிக்கைகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. :lol:

ம்... :lol::lol:

இனி அந்தோணி சொல்லுவார் "இந்திய பயணிகளை அடித்து உதைப்பதற்கு இலங்கை அதிகாரிகளுக்கு எந்த தேவையும் இல்லை" என்று.

தமிழன் என்பதால் அடி உதை விழுந்திருக்கும்.

மானநஸ்ட வழக்கு டபோடனும்.

ஐயோ அக்கா.. உங்கடை நக்கலுக்கு அளவே இல்லை.. சும்மா தட்டிக்கேட்டவருக்கே உந்த கெதி.. வழக்கு போட வருபவரின் கெதியை எண்ணிப்பார்க்கிறேன்.. சிப்பு வந்திட்டுது.. சிப்பு... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.