Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்!

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.  இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனுராக் ஸ்ரீவாத்சவா, “ பாகிஸ்தானால் பலவந்தமாகவும் சட்டவிரோதமாகவும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கில்ஜித் -பல்திஸ்தானை உள்ளடக்கிய லடாக் மற்றும் ஜம்மு – காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் தான்.

ஆக்ரமிப்பு பகுதிகளில் அதிகாரம் செலுத்த பாகிஸ்தானுக்கு எந்த வித உரிமையும் இல்லை.   கடந்த 70 ஆண்டுகளாக ஆக்ரமிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு எந்த வித அடிப்படை உரிமைகளையும் பாகிஸ்தான் வழங்கவில்லை. பாகிஸ்தான். இராணுவத்தின் பலவந்தத்தால் அங்கு மனித உரிமைகள் நசுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்துக்கள்,  சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது இராணுவ அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் நடைபெறுவதாக ஐ.நா.மனித உரிமைக் குழுவிடம் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

http://athavannews.com/காஷ்மீரின்-அனைத்துப்-பகு/

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் கானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

 
1-6-696x392.jpg
 39 Views

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து வழங்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளதையடுத்து இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கில்கிட்-பால்டிஸ்தான் மக்களின் நீண்ட கால கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். இந்த பிராந்தியத்துக்கு சிறப்பு மாகாண அந்தஸ்தை வழங்குகிறேன். இதனுடன் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பொருளாதார தொகுப்புதவி நிதியும் வழங்க பரிசீலித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

 

இந்நிலையில், கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை தனது ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறும் இந்திய வெளியுறவுத்துறை, “சட்டவிரோதமாக அங்கு மேற்கொள்ளப்படும் மாற்றம் எதையும் இந்தியா நிராகரிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, “1947ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம், ஜம்மு காஷ்மீரின் சட்டப்பூர்வமான ஒருங்கிணைந்த பகுதி” என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் இந்திய பிராந்தியங்களின் அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக, அந்த பகுதிகளில் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக பாகிஸ்தான் வெளியேற வேண்டும். பிராந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் எல்லை மீறக்கூடாது” என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

 

https://www.ilakku.org/இம்ரான்-கானுக்கு-இந்தியா/

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர் நிலச் சட்டம் – மத்திய அரசின் விளக்கம்  பொய்

 
1-14-696x365.jpg
 42 Views

காஷ்மீரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலம் தொடர்பான சட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள விளக்கம் “பொய்களின் மூட்டை” என்றும் குடியேற்றத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சி ‘ என்றும் ‘குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ விமர்சித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த சட்டங்கள் “பழமையானது மற்றும் பிற்போக்கானது” என்று அரசின் செய்தித்தொடர்பாளர் ரோகித் கன்சாலின் கருத்திற்குப் பதில் அளித்துள்ள கூட்டணியின் செய்தி தொடர்பாளர், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த சட்டங்கள் “ஒட்டு மொத்த இந்தியாவிலேயே, மிகவும் முற்போக்கானவை, மக்கள் நலன் சார்ந்தவை, விவசாயிகளுக்கு ஆதரவானவை” என்று கூறியுள்ளளார்.

“அடிப்படையான நிலச்சட்டங்களைத் திரும்ப பெற்றதும், இன்னும் பிற சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய திருத்தங்களும், காஷ்மீர் மக்களின் உரிமையைப் பறிப்பதற்கும், குடியேற்றங்களை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்டதாகும்” என்று கூறியுள்ள அவர் இதற்கு முன் நடைமுறையில் இருந்த சட்டம் “மறைமுக நிலபிரபுத்துவ” சுரண்டலை ஒழித்ததாகவும் கூறியுள்ளார்.

“இதைப் பழமையான சட்டம் என்று கூறுபவர்கள், காஷ்மீரின் வரலாற்றை மதிக்காத குற்றத்தைச் செய்கிறார்கள். சரியான தருணத்தில் செய்யப்பட்ட நில சீர் திருத்தங்கள்தான் ஜம்மு காஷ்மீரில் பசியால் உயிரிழப்பு மற்றும் விவசாயிகள் தற்கொலையை இல்லாமல் செய்தது” என்ற குப்கார் பிரகடனத்திற்கான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அரசியல் சாசனம் பிரிவு 370ன் கீழ், காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய பாஜக அரசு திரும்ப பெற்றது.

சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காஷ்மீரில் செயல்படும் 6 முக்கிய அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் ஒருங்கிணைந்து குப்கர் பிரகனடத்தை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் ‘குப்கார் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது

https://www.ilakku.org/காஷ்மீர்-நிலச்-சட்டம்-மத/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.