Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா,

Featured Replies

ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா, பிரித்தானிய தலைநகர் இலண்டனில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

தென்மேற்கு இலண்டன் குறொய்டன் பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற பெயார் பீல்ட் ஹோல் அரங்கில், இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமாகிய பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கௌரவ அதிதியாக, மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், ஐ.பி.சி - தமிழின் ஷஇந்தியக் கண்ணோட்டம்| நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்.

இன்றைய நிகழ்வில், ஐ.பி.சி - தமிழின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான காணிக்கையாக, அலை வனையும் உலகு என்ற தலைப்பின் கீழ், அகவை மலர் வெளியிடப்பட்டது.

இதேபோன்று, உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, வர்ண இராமேஸ்வரன், வீரா, கலைப்பருதி, ஆகிய ஈழத்துக் கவிஞர்களின் பாடல் வரிகளில், மகாராஜன், இசைப்பிரியன், வர்ண இராமேஸ்வரன் ஆகியோரின் இசையமைப்பில், ஈழத்து - தமிழக முன்னணி இசைக் குயில்கள் இசைவடித்து, பாடல்களாக வழங்கிய, உறவொலி என்ற இறுவட்டும் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, அலை வனையும் உலகு அகவை மலர், உறவொலி இறுவட்டு ஆகியவற்றிற்கான மதிப்பீட்டு உரைகள் நிகழ்த்தப்பட்டதோடு, நடனம், நாடகம், பாடல் போன்ற அரங்க செயற்பாடுகளும் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

இவ்றையடுத்து, மூத்த ஊடகவியலாளர்கள், ஐ.பி.சி - தமிழின் ஒலிபரப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், ஐரோப்பிய செய்தியாளர்கள், நிர்வாக செயற்பாட்டாளர்கள், செய்தி ஆசிரியர், கலைஞர்கள் ஆகியோருக்கும், தமிழீழ தாயகத்தில் உள்ள செய்தியாளர்களுக்காகவும், பழ.நெடுமாறன் அவர்களால் பொன்னாடைகள் போர்த்தி, விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய ஊடங்கள் கொண்டுள்ள கடப்பாடுகள் தொடர்பாகவும், புகலிட மண்ணில் ஐ.பி.சி - தமிழ் ஆற்றி வரும் பணிகள் குறித்தும், பழ.நெடுமாறன் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

நன்றி ஐபிசி

அப்துல் ஜபார் அவர்கள் அல்லாடும் ஈழத் தமிழினத்துக்காக எங்காவது குரல் எழுப்பியுள்ளாரா? அல்லது ஒரு அறிவிப்பாளர் என்ற முறையில் ஐபிசி தனது விழாவிற்கு அவரை அழைத்திருந்ததா? ஏனெனில் இவர் முத்தமிழ் என்ற கூகிள் குழுமத்தில் பல கருத்தகளை எழுதுவார்... அந்த வகையில்.. இவர் கொழும்பில் தங்கி இருந்தபோது, புலிகளின் விமானத் தாக்குதல் கொலன்னாவ எண்ணைய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிகழ்ந்தது என நினைக்கிறேன். அதைப்பற்றி அந்த வேளையில் கொழும்பில் தங்கியிருந்த அப்துல் ஜபார் அவர்கள் என்ன எழுதியுள்ளார் என்று பாருங்கள்..

அன்றிரவு நான் என் ஓட்டல் அறையிலிருந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்க,

வானொலி வர்ண்னைக்கு

இடையே ஒவ்வொறு விக்கட் விழும்போதும் என் கருத்தை தொகுத்துச் சொல்ல ஏற்பாடு.

இரவு ஒன்றரை மணி திடீறென்றூ மின் தடை. எங்கும் ஒரே இருட்டு. எங்கும் வேட்டுச்

சப்தம். வானத்தில்

ஒளிக்கீற்றுகள் அங்கும், இங்கும் சீறிப் பாய்கின்ற்ன. வெடி போட்டு மகிழும்

அளவுக்கு அப்போது இலங்கை

அணியின் நிலை இல்லை. வாண வேடிக்கைகள் இத்தனை பிரகாசமாக இத்தனை தூரம் பாய்ந்து

செல்லக்

கூடியவை அல்ல. இந்த அளவுக்கு காது செவிடு படும்படியான சப்தமும் இருக்காது. ஏதோ

நடக்கிற்து

என்று மட்டும் புறிகிறது ஆனா என்னவென்று விளங்கவில்லை. பிறகு வெளிச்சம் வந்தது.

ஏதோ ஓர்

ஆட்டம் அடங்கி கிரிக்கட் ஆட்டம் தொடர்ந்தது.

காலையில்தான், விடுதலைப் புலிகளின் வான் படை கொழும்பைத் தாக்க வந்ததாகவும்

இலங்கை ராணுவம்

தடுத்து விட்டதாகவும் பத்தி பதியாக பத்திரிகைச் செய்திகள். கொழும்பின் இயல்பு

வாழ்க்கையில் எவ்வித

மாற்றமும் இல்லை. யாரும் இது பற்றி கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. ஆனால்

இந்திய,குறிப்பாக,

தமிழ் பத்திரிகைகள் தங்கள் சுபாவப்படி இட்டுக் கட்டிய செய்திகளுமாய்

இங்குள்ளர்களை அலற வைத்து

விட்டன. அன்று மாலை கொழும்பில் நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு வழமையை விட

அதிகக் கூட்டம் வந்தது

http://groups.google.de/group/muththamiz/b...9220013a02f5d78

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்குப் பின்பு, பழ.நெடுமாறன் ஐயா புலம்பெயர் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியது பெருமிதமளிக்கின்றது. தொடர்ந்து அவர் பங்குபற்றி தமிழரின் போராட்டத்திற்கு உற்சாகமூட்டிட வேண்டும்.

-------------------------------------------------

ஐபிசியில் பேசுகின்ற அப்துல் ஐபாரும் இவரும் ஒன்றா என்று தெரியவில்லை.

ஆனால் சோழியனின் கேள்வி நியாயமானது தான். ஐபிசிக்கு வெளியால் ஈழத்தமிழர் மீது அப்துல் ஜபாரின் ஆதரவு என்பது இருந்ததா? நான் எங்கும் அப்படிக் கேட்டதாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 10-06-2007 15:25 மணி தமிழீழம் [மயூரன்]

ஜ.பி.சி தமிழின் அகவை பத்து

சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஜ.பி.சி தமிழின் அகவை 10 நிறைவு நிகழ்வு குறைடன் பெயபீல்ட் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், தமிழ்தேசிய உணர்வாளர் உலகத் தமிழ் பேரவையின் தலைவர் பழநெடுமாறன் அவர்கள், மற்றும் பல தமிழக தமிழ்இன ஆதரவாளர்கள் ஆகியோருடன் சிறப்புற நடைபெற்றது.

ibc004fs5.jpg

இந்திகழ்வில் பழநெடுமாறன் அவர்களது சிறப்புரை, நடனங்கள், இசைநிகழ்வுகள், கலைஞர்கௌரவிப்பு என பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

ibc023cv9.jpg

ibc055oh8.jpg

ibc024hm2.jpg

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தமிழ்வளங்கொண்ட ஐ பி சி க்காரர் கோட்டுசூட்டோடை நல்ல வடிவாய்த்தானிருக்கினம்.நெடு

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்க குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.