Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை

சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை 2 members have voted

  1. 1. சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

    • இலங்கை அரசு போல, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான, உறுதியான உறவை ஏற்படுத்தி தேவைக்கு ஏற்றவகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
      2
    • இந்தியாவுடனேயே ஈழத்தமிழருக்கு கலாச்சார உறவும் தமிழ்நாட்டுடன் தொப்புள்கொடி உறவும் உள்ளது. மற்றவர்களுடன் உறவு பொருந்தாது. ஆகவே, இந்தியாவின் ஆதரவை பெற மீண்டும் முயல வேண்டும்.
      0
    • புவிசார் அரசியலில் மேற்கு நாடுகளே மனித உரிமைகளில் அக்கறை கொண்டுள்ளன. ஈழத்தமிழரும் இங்கே அரசியல் பலம் பெறுகிறார்கள். இவற்றுடன் மட்டுமே உறவை உறுதிப்படுத்தி ஆதரவை பெற வேண்டும்.
      0
    • வேறு வழி தேட வேண்டும்.
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச புவிசார் அரசியலில் ஈழத்தமிழரின் நிலை பலம் பெற என்ன செய்ய வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சகல தரப்பினருடன் நல்லுறவைப் பேணி இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை அடைய முயற்சிக்கவேண்டும். 

இராஜதந்திர பலமும், அரசியல் செல்வாக்கும் இல்லாமல் சிறிலங்கா அரசுக்கு எதுவித அழுத்தமும் கொடுக்கமுடியாது. மூடுண்ட அறைகளில் நாடுகளின் இராஜதந்திரிகளாலும், அரசியல்வாதிகளாலும் எடுக்கப்படும் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்த புலம்பெயர் தமிழர் தமது அரசியல் பொருளாதார பலங்களை அவரவர் வசிக்கும் நாடுகளில் பாவிக்கவேண்டும்.

அதே போல தாயகத்தில் வாழும் தமிழர் தமது நியாயமான கோரிக்கைகளை வெளியுலகம் அறியத்தக்கதாக சாத்வீகமான போராட்டங்களில் பெருமளவில் ஈடுபடவைக்க தேசிய அரசியல் செய்யும் கட்சிகள் ஒன்றிணைந்து வேலைசெய்யவேண்டும்.

தமிழக அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகள் அனைத்துடனும் நல்லுறவைப் பேணி அவர்கள் மூலமாக இந்திய மத்திய அரசினூடாக அழுத்தங்களைப் பிரயோகிக்க வழிவகைகளைப் பார்க்கவேண்டும்.

எல்லா தரப்புக்களுமே தமது நலன்களுக்குத்தான் முன்னுரிமைகொடுக்கும். ஆனால் ஒரு தரப்புக்கும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கக்கூடாது. முக்கியமாக இனவழிப்பு நடந்தது என்பதை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வைக்காமல் ஒரு நியாயமான தீர்வு வராது. அதனால் இனவழிப்பு நடந்தது என்பதை சர்வதேச ரீதியில் நிரூபிப்பதில் இருந்து அழுத்தங்கள் காரணமாகப் பின்வாங்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு போல, இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான, உறுதியான உறவை ஏற்படுத்தி தேவைக்கு ஏற்றவகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

உள்ளடக்கம்: சாதகமாக மாறி வரும் பூகோள அரசியல் சூழலும் ஈழத்தமிழர்களின் கையறுநிலையும் 

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டிக்குரிய நிலமாக இலங்கைத்தீவு மாறிவரும் நிலையில், தமிழ் மக்களுக்கு இந்நிலைமை சாதகமாகவே உள்ளது. ஆனால், இன்று எங்களிடம் ஒரு வலுவான அரசியல் தலைமை இல்லாததால் தமிழ்மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

தமிழர் அரசியலில் பூகோள அரசியல் குறித்த உரையாடல்கள் மிகக் குறைந்தளவே  இடம்பெறுகின்றன. இந்நிலையில் எங்களுக்கு  வலுவான வெளிநாட்டுக் கொள்கை அவசியமாக உள்ளது. 

அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகையும் அதன் பின்னர் சீனா, இந்தியாவின் எதிர்வினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைக்கிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.