Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா?

சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை: மருமகள் உறவினர் கூலிப்படையை ஏவி சுட்டுக்கொலை செய்தார்களா?

 

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் தலில்சந்த் (வயது 74). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் வால்டாக்ஸ் ரோடு விநாயகம் மேஸ்திரி தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி புஷ்பா பாய்(70). இந்த தம்பதியருக்கு ஷீத்தல்(40)என்ற மகனும், பிங்கி என்ற மகளும் உண்டு.

மகன் ஷீத்தல் தந்தை தலில்சந்துடன் சேர்ந்து நிதி நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

தலில்சந்தின் மகள் பிங்கி திருமணமாகி சென்னையில் தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் ஷீத்தலுக்கு திருமணமாகி ஜெபமாலா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது ஜெபமாலா வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வீட்டில் தலில்சந்த், மனைவி புஷ்பா பாய், மகன் ஷீத்தல் ஆகிய 3 பேரும் தனியாக வசித்து வந்தனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி இது.

இந்த நிலையில், நேற்று மாலை மகள் பிங்கி, வீட்டில் இருந்த தந்தை தலித்சந்த் வீட்டிற்கு போன் செய்துள்ளார். இதையடுத்து, வெகுநேரமாகியும் அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த பிங்கி நேராக வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தாய், தந்தை, சகோதரர் 3 பேரும் மெத்தையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதைப்பார்த்து கதறி அழுத பிங்கி உடனே யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
 ச்ம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், வடக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் முழுவதும் இரும்பு தடுப்பு அமைத்து போலீஸ் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் பல வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கின்றன. அந்த கேமராக்களின் பதிவுகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.

மோப்ப நாயை வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை பதிவுகளை பதிவு செய்தனர்.

கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மருமகளே கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மராட்டியத்தில் இருந்து நேற்று உறவினர்களுடன் சென்னை திரும்பிய நிலையில், அவரே இந்த கொலையில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். 

கொலை செய்யப்பட்ட ஷீத்தலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனைவி ஜெயமாலாவுக்கு சொத்தை பிரித்து கொடுப்பதில் பிரச்சினை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெயமாலாவின் சகோதரர்கள் இருவர் மற்றும் சகோதரி அவரது பெண் குழந்தைகள் எதிர்க்காலத்திற்காக ஜீவனாம்சமாக குறிப்பிட்ட அளவு பணமும், சொத்தும் கேட்டு வந்ததாக தெரிகிறது. 

இதற்காக கடந்த ஓராண்டில் புனேவில் இருந்து 10-க்கும் மேற்பட்ட முறை வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி தலில் சந்த் தாமதம்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஜெயமாலா சகோதரர்கள் சென்னை வந்த போது தலில் சந்த் மற்றும் ஷீத்தல் உடன் கடும் தகராறில் ஈடுபட்டதுடன், எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர். 

இதனால் அவர்கள் தான் இந்த கொலையில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர். அவர்கள் நேரடியாக கொலையில் ஈடுப்பட்டார்களா? அல்லது கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.த்தனிப்படையினர் மராட்டிய மாநிலம் விரைந் துள்ளனர்.

 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/12134859/3-members-of-the-same-family-shot-dead-in-Chennai.vpf

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, உடையார் said:

வீட்டின் வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், திறந்து உள்ளே சென்று பார்த்த போது

மார்வாடி குடும்பத்தில்... ஏற்பட்ட, உள்  வீட்டு  கொலை போல் தெரிகிறது.
வீட்டின் வெளிப் பக்கம், தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததது... வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மூன்று பேர் சுட்டுக்கொலை: மகாராஷ்டிராவில் மூவர் கைது

4 மணி நேரங்களுக்கு முன்னர்
சென்னையில் மூன்று பேர் சுட்டுக்கொலை: மகாராஷ்டிராவில் மூவர் கைது

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்று பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

புதன்கிழமை பிற்பகலில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் அவர்களது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சென்னை சௌகார்பேட்டையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலி சந்த் என்பவர் அடகுக்கடை ஒன்றை நடத்திவந்தார். இவர் வால்டாக்ஸ் சாலையில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்தார். இவருக்கு புஷ்பா பாய் என்ற மனைவியும் ஷீத்தல் குமார் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உண்டு.

ஷீத்தல்குமாருக்கு ஜெயமாலா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். பிங்கிக்கு திருமணமாகி அவர் தனியாக வசித்துவந்தார். ஷீத்தல்குமாரும் ஜெயமாலாவும் குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை மாலையில் பிங்கி தன் தந்தை தனது ஃபோனை வெகுநேரம் எடுக்காததால், அவரது வீட்டிற்கு வந்தார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவரது தந்தை தலி சந்த், தாய் புஷ்பா, சகோதரர் ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

ஒரே வீட்டில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், காவல்துறை அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை வைத்து தனது புலனாய்வைத் தொடங்கியது.

இந்த நிலையில் இந்த கொலை விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்று மூன்று பேரைக் கைதுசெய்திருப்பதாக சென்னை நகரக் காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

"இந்த வழக்கை விசாரிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொழில்நுட்ப புலனாய்வு, மனித புலனாய்வு, சிசிடிவி கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி வழக்கில் புலனாய்வைத் துவங்கினோம். இந்தக் கொலையில் ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், விலாஷ் உட்பட ஆறு பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அதில் மூன்று குற்றவாளிகள் மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் கைது செய்யப்பட்டனர்" என்று மகேஷ்குமார் தெரிவித்தார்.

சென்னையில் மூன்று பேர் சுட்டுக்கொலை: மகாராஷ்டிராவில் மூவர் கைது

ஷீத்தல் குமாருக்கும் அவரது மனைவி ஜெயமாலாவுக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்ததால் அவர்கள் பிரிந்து வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகவாவது சொத்தின் ஒரு பகுதியை ஜெயமாலா கேட்டு, அதனை ஷீத்தல் குமாரின் குடும்பம் மறுத்துவந்தது. இது தொடர்பாக அவர்கள் புனே காவல்துறையிலும் சென்னை நகரக் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பாக தலீப் சந்த் குடும்பத்தை யாரோ சிலர் ஆட்டோவில்வந்து மிரட்டிச் சென்றுள்ளனர். அது தொடர்பான புகாரில் ஆட்டோ டிரைவரைப் பிடித்து காவல்துறை விசாரித்துவந்தது. இந்த நிலையில்தான் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்றது.

"குடும்பப் பிரச்சனை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என நினைத்தோம். இதையடுத்து வியாழக்கிழமை காலை 6.30 மணி விமானத்திலேயே ஆறு காவலர்கள் புனேவுக்குச் சென்றனர். அவர்கள் பூனே நகரக் காவல்துறையுடன் சேர்ந்து, குற்றவாளிகள் ஷோலாபூரில் இருக்கலாம் என்று கருதி அந்த மாவட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

குற்றவாளிகள் சென்ற வாகனமும் கண்காணிக்கப்பட்டுவந்தது. ஆனால், அந்த வாகனம் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதையடுத்து அந்த வாகனத்தைப் பின்தொடர ஆரம்பித்தோம். இதையடுத்து அவர்கள் வாகனத்தை வேகமாக செலுத்தினர். இந்தத் துரத்தலின் முடிவில் அந்த வாகனத்தை இடைமறித்து முன்று பேரைக் கைது செய்திருக்கிறோம்.

இதில் முக்கியமான குற்றவாளி கைலாஷ். அவர் ஷீத்தலுடைய மைத்துனர். இது தவிர ரவீந்திரநாத், விஜய் உத்தம் என மேலும் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்தக் காரும் கொலைசெய்யப் பயன்படுத்திய ரிவால்வரும் கைப்பற்றப்பட்டன. மற்ற மூன்று குற்றவாளிகளைப் பிடிக்க இன்னொரு அணி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக ஆந்திர, கர்நாடக, மகாராஷ்டிர மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டோம்" என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தமிழ்நாட்டில் வாங்கப்பட்டதில்லையென்றும் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.

கொலை நடந்த இடத்திலிருந்து சிறிய லாக்கர் ஒன்று காணாமல் போயிருப்பதாகவும் ஐந்து ரவுண்டுகள் சுடப்பட்டிருப்பதாகவும் இது ஒரு திட்டமிட்ட கொலை எனக் கருதுவதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 0.32 மி.மீ தோட்டாவைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி. இதில் ஒரு ரவுண்ட் எஞ்சியிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-54930735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : தலைமறைவான ஜெயமாலா, தம்பியுடன் கைது

3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : தலைமறைவான ஜெயமாலா, தம்பியுடன் கைது

 

சென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11-ந்தேதி அன்று பட்டப்பகலில் நிதிநிறுவன அதிபர் தலில்சந்த் (வயது 74), அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல் குமார் ஆகியோர் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். தலில்சந்தின் காது வழியாக குண்டு பாய்ந்திருந்தது. மற்ற இருவரின் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.

 
இந்த கொடூர கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. குருவி, காக்காவை சுட்டு தள்ளுவதுபோல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை நொடிப்பொழுதில் சுட்டுத்தள்ளிவிட்டு கொலையாளிகள் தப்பிச்சென்று விட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து விட்டனர். கொலை செய்யப்பட்ட ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா அவரைவிட்டு பிரிந்து, புனேவில் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்தார். 2 குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர்.

ஷீத்தல் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரும், அவரது பெற்றோர் தலில்சந்த், புஷ்பாபாய் ஆகியோர் செய்த கொடுமை காரணமாகவே ஜெயமாலா ஷீத்தலை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

மேலும் வாழ்வாதாரத்திற்காக ஜெயமாலாவுக்கு ரூ.4 கோடியும், சொத்தில் பங்கும் கேட்கப்பட்டது. அதற்கு ஷீத்தலின் தந்தை தலில்சந்த் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஜெயமாலா தனது தம்பிகள் கைலாஷ், விலாஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் 3 பேருடன் சென்னை வந்து, மேற்கண்ட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டு தீர்த்து கட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டார்கள்.

ஜெயமாலா தனது ஒரு தம்பி விலாஷ் மற்றும் ஒரு நண்பருடன் காரில் தப்பிச் சென்றார். ஜெயமாலாவின் இன்னொரு தம்பி கைலாஷ் தனது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகியோருடன் மற்றொரு காரில் தப்பினார். கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் மகேஷ்வரனின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படையினர் இந்த வழக்கில் விசாரணை நடத்தினார்கள்.

இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படையினர் சென்னையில் இருந்து விமானத்தில் புனே சென்று, கைலாஷ் அவரது நண்பர்கள் ரவீந்திரநாத்கர், விஜய்உத்தம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் 3 பேரை கொல்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான கைலாஷ் உள்பட 3 பேரும் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். தீவிர விசாரணைக்குப்பிறகு அவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரணை நடத்தப்படுகிறது.

போலீஸ் கையில் சிக்காமல் தப்பிச்சென்ற ஜெயமாலா அவரது தம்பி விலாஷ் உள்பட 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் ஜூலியர்சீசர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து மராட்டிய மாநிலம் புனேயில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் டெல்லி அருகே ஜெயமாலா தனது தம்பி விலாஷ் மற்றும் கூட்டாளியுடன் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களை கைது செய்ய கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரையும் டெல்லி போலீசார் ஆக்ராவில் வைத்து கைது செய்து விட்டதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. அவர்களை சென்னை அழைத்துவர தனிப்படை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், கைதான 3 பேரும் தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான் இதுபற்றி எந்த தகவலையும் சொல்ல முடியும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/11/20021923/2082764/Tamil-News-Daugther-in-law-arrested-three-murdered.vpf

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.