Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவு – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை நிறைவு – சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா

 
1-126.jpg
 21 Views

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனை நிறைவடைந்துள்ளதாக சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது மேலும் 4 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராசெனிகா ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தயாரித்து வருகிறது.

இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நிறைவடைந்துவிட்டதாக ஐசிஎம்ஆர் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து தற்போது பெரிய அளவில், பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

“இந்த பரிசோதனை முடிவுகளில் கிடைக்கப்படும் நம்பகமான முடிவுகள் இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றுக்கான தீர்வாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதுவரை இந்தியாவில் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்பட்டதில் கோவிஷீல்ட் மிக நவீனமானது.” என சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

நன்றி பிபிசி

https://www.ilakku.org/கோவிஷீல்ட்-தடுப்பு-மருந்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தயார் - இந்திய நிறுவனம் அறிவிப்பு

4 கோடி ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் தயார் - இந்திய நிறுவனம் அறிவிப்பு

 

புதுடெல்லி, 

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட முன்னணி நாடுகள் பலவும் தடுப்பூசிகளை உருவாக்கி அவற்றை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன.

இந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.  இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியுட் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.


தற்போது சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்துகின்றன.

1,600 பேருக்கு இந்த மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கான பதிவு இப்போது முடிந்து விட்டது.

இந்த தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறும்போது, “மருத்துவ பரிசோதனையின் நம்பிக்கைக்குரிய முடிவுகள், கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசி ஆகும்” என தெரிவித்தது.

மேலும், “2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் இன்ஸ்டிடியுட், இந்த தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் கிடைக்கச்செய்யும். ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற்பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின்கீழ் 4 கோடி டோஸ் தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியுட் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளது” எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் பரிசோதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மத்தியில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம், கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியின் மருத்துவ வளர்ச்சிக்கும் சீரம் இன்ஸ்டிடியுட்டும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒத்துழைக்கின்றன.

இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியுட், நோவாவேக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி மருந்தையும், அதற்கான குப்பிகளையும் பெற்றுள்ளது. இவற்றை குப்பிகளில் நிரப்பும் பணி விரைவில் முடிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் இந்தியாவில் நடத்தப்படும்.

இதுபற்றி சீரம் இன்ஸ்டிடியுட்டின் தலைமை செயல் அதிகாரி பூனவாலா கூறுகையில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய பங்காற்றி உள்ளது. நோய் எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்க தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவை முன்னணியில் வைப்பதற்கு இந்த ஒத்துழைப்பு மேலும் உதவும்” என குறிப்பிட்டார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்திலும், உலகளாவிய தயாரிப்பிலும் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்திய தொழில் நுட்பம் மற்றும் நன்கு பொருத்தப்பட்ட வசதிகளால் ஈர்க்கப்பட்டுள்ள சீரம் இன்ஸ்டிடியுட், தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேம்படுத்துவதற்கு எங்கள் நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங்கள் பங்களிப்பு, இந்த கூட்டாண்மை ஆகும்” என குறிப்பிட்டார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/13032647/4-crore-covishield-vaccines-ready--Indian-company.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.