Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மினிமலிசம்

Featured Replies

உங்களின் வாழ்க்கைச்செலவுகளை கட்டுபடுத்துவதற்கு  நீங்கள் என்ன என்ன ஐடியா க்களை பயன்படுத்துகிறீர்கள் 

 

கீழே உள்ளவை fb  எடுத்தவை உங்களின் முறையையும் சொல்லுங்க 

***********************************************************************************************************************************

மினிமலிசம் என்பது குறைவான பொருட்களுடன் வாழுதல்.
வீடு நிறைய பொருட்களை சேர்த்துவைத்தால் அதன்பின் பொருட்களுக்கு சேவை செய்தே வாழ்நாள் வீணாகிவிடும்.
நாலு பேர் இருக்கும் வீட்டில் 10- 20 தட்டுகள், 10- 20 டம்ளர்கள் புழக்கத்தில் இருப்பதை காணமுடியும். எப்போது பார்த்தாலும் கிட்சன் சிங் நிரம்பியே இருக்கும். பாத்திரம், கழுவி, கழுவி ஓய்ந்துபோய்விடுவார்கள் .
ஒரே தட்டை சாப்பிட்டுவிட்டு உடனே கழுவி வைத்தால், ஒரே டம்ளரில் நீரோ, காபியோ குடித்தவுடன் உடனே குடித்தவரே கழுவி வைத்தால் இத்தனை தட்டுகள் அவசியம் இல்லை.
"எப்போதாவது பயன்படும்" என நினைத்து சிங்கிள் பயன்பாட்டுக்கு வாங்கும் பொருட்களை கூட தூக்கிவீசாமல் பாதுகாத்து வைத்து (பிளாச்டிக் பை, பிளாஸ்டிக் கன்டெய்னர்) கடைசியில் அலமாரிகள் நிரம்பிவழிவதுதான் மிச்சம்.
வீட்டில் 20 தட்டு, 20 டம்ளர் இருந்தால் 10 தட்டு, 10 டம்ளரை எடுத்து மறைத்துவைக்கவும்...அவை காணாமல் போனதே யாருக்கும் தெரியாது.
பல பொருட்கள் இப்படித்தான்...
ஒரு அறை சும்மா இருந்தா நமக்கு பிடிக்காது.
"அந்த சுவர் காலியா இருக்கு. ஒரு பெயிண்டிங் மாட்டுவோம். அந்த கார்னர் காலியா இருக்கு. ஒரு பூச்செடி வைப்போம்.."
அதன்பின் ஆணி, பெயிண்டிங், பூச்செடிக்கு தண்ணி, போட்டோவை கழுவுவது துடைப்பது...என வேலைகள் கூடும்.
வீடு காலியாக இருப்பது தான் இருப்பதிலேயே சிறந்த அழகு 🙂
வீடு முழுக்க பொருள், வீடு சுத்தமாவே இல்லை, வேலை தீரவே இல்லை..என புலம்பினால் அதுக்கு காரணம் பொருட்களை இப்படி hoarding செய்து வைத்துக்கொள்வதுதான்.
பொருட்களுக்கு சேவை செய்தே நம் வாழ்நாள் கழிந்துவிடுகிறது.

 

********************************************************************************************************************************

பிள்ளைகளுக்கு அன்றாடம் கொடுக்கவேண்டிய பரிசுகள்
பொருட்களை பரிசாக கொடுப்பதை விட கீழ்க்கண்டவற்றை பரிசாக கொடுங்கள்
1) நீ என் வாழ்வில் வந்ததால் எனக்கு இன்னின்ன மாற்றம் வந்தது என சொல்லுங்கள். "நான் முன்பு ரொம்ப கோபகாரனாக, பிடிவாதகாரனாக இருந்தேன். உன்னால் என் கோபம், பிடிவாதம் எல்லாம் மாறியது.."...பலருக்கும் நடக்கும் விசயம் இது. பிள்ளைகள் நம்மையே அறியாமல் நம்மை மாற்றுவார்கள்.
2) டிசிப்ளின்: அவர்களை ஒரு ரொட்டினுக்கு பழக்கப்படுத்துங்கள். தினம் காலை எழுந்து படுக்கையை சுருட்டி வைப்பது. அவர்கள் அதை செய்யவேண்டுமெனில் நீங்கள் அதை செய்யவேண்டும். இன்னின்ன நேரத்துக்கு படிக்கணும், படித்தால் இன்னின்ன நேரத்தில் விளையாட்லாம் என ஷெட்யூலை போட்டுகொடுத்து அதற்கு கட்டுபடுத்த பழக்கினால் அவர்கள் எதிர்காலத்தில் ஷெட்யூல் போட்டு நினைத்ததை சாதிக்க உதவும்.
3) கியூரியாசிட்டி: அடிக்கடி அவர்களிடம் எதாவது கேளுங்கள்..." திமிங்கிலம் ஏன் அத்தனை பெருசா இருக்கு தெரியுமா?" தெரியாதே என்றால் அதற்கான விடையை சொல்லுங்கள். அதற்கு நீங்கள் ஹோம் ஒர்க் செய்யணும்.
4) சாரி/தேங்யூ-> தப்பு செய்தால் சாரி கேட்கவும், யாராவது அவர்களுக்கு உதவி செய்தால் தாங்யூ சொல்லவும் பழக்கபடுத்தவும்.
பிள்ளைகளுக்கு நாம் கொடுக்ககூடிய மிகசிறந்த பரிசுகள் பண்புள்ளவர்களாக அவர்களை வளர்ப்பதுதான். பொம்மைகள், பாக்கட் மணி கொடுப்பது அல்ல பரிசு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீண்டநாள் கழித்து நம் உறவினர்களை சந்திக்க செல்கையில் எதாவது வாங்கிக்கொண்டு போவோம்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் பலரும் பெட்டி நிறைய பரிசுப்பொருள்களை சுமந்துகொண்டு செல்வார்கள். தம் உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவார்கள்.
ஒருமுறை நண்பர் ஒருவர் தன் தம்பி மகன், மகள் இவர்களுக்கு லேப்டாப், போன் என வாங்கினார். இவர் இதற்கும் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. இவரது தம்பியும் ஏழை எல்லாம் இல்லை. இருவரும் ஒரே சமநிலையான பொருளாதார வசதியில் இருப்பவர்கள்.
"ஊருக்கு போனாலே நிறைய செலவாகுது" என்றவரிடம் "லேப்டாப், செல்போன் எல்லாம் இந்தியாவில் கிடைக்காதா? இல்லை அவர்களிடம் இல்லையா?" என கேட்டேன்.
"இத்தனை வருசம் கழிச்சு போகிறோம். வெறும் கையுடன் எப்படி போவது? என்னை பற்றி என்ன நினைப்பார்கள்? தம்பி மகனுக்கும், மகளுக்கும் பெரியப்பா பாசம் வரவேண்டாமா?" என கேட்டார்
"பொருட்களை கொண்டுபோய் கொடுத்தால் "லேப்டாப் வருது, செல்போன் வருது" என தான் எதிர்பார்த்துகொண்டிருப்பார்கள். உங்கள் வருகையை எல்லாம் எதிர்பார்க்க மாட்டார்கள். ஒவ்வொருமுறையும் போகும்போதும் "போனமுறை லேப்டாப், இந்த தடவை ஐபேட் கொண்டுவாருங்கள்" என்பார்கள். எதிர்பார்ப்பு கூடத்தான் செய்யும். உங்கள் மேல் உண்மையான அன்போ, பாசமோ இதனால் எல்லாம் வளராது. ஒரு பரிசுப்பொருள் தரும் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரிதான் உங்களை நினைப்பார்கள்" என்றேன்
"அப்படி எல்லாம் இல்லை" என்றார். அதன்பின் திட்டமிட்டது போல இந்தியா போனார். பரிசுப்பொருள் எல்லாம் கொடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியாக இவரிடம் பேசினார்கள். சில ஆண்டுகளுக்கு பின்னர் அடுத்தமுறை எதுவுமே வாங்காமல் சாக்லட்டுகளை மட்டும் வாங்கிக் கொண்டுபோனார். பல உறவினர்கள் அதன்பின் சரியாக உபசரிப்பதையும், பேசுவதையும் நிறுத்திவிட்டதாக சொன்னார்.
"இவர்களுக்கு தான் இத்தனை நாள் விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துக்கொண்டு இருந்தேன் என நினைத்தாலே வேதனையாக இருக்கிறது" என்றார்.
உறவினர்கள் மட்டும் அல்ல, சொந்த பிள்ளைகளாக இருந்தாலும் விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து அன்பை விலைக்கு வாங்கமுடியாது. உறவுகளுக்குள் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று உதவலாம். ஆனால் ஆளுக்காள் விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்துக்கொள்வதில் எந்த பொருளும் இல்லை. நாம் கொடுத்தால் அவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்ற உணர்வு வரும். கடன்பட்டு கொடுப்பார்கள். அல்லது பின்னாளில் நாம் எதாவது சின்ன பிரச்சனை என்கையில் "உனக்கு லேப்டாப் எல்லாம் வாங்கிகொடுத்தேன். நீ இப்படி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய்" என்போம்.
இது எல்லாம் அவசியமே இல்லை. அன்பு பொருள்களால் நிர்ணயம் ஆவதில்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
 
 
  • தொடங்கியவர்
தினமும் மாலை உணவுக்கு பின் தனியாக உட்கார்ந்து அனைத்து வங்கிகள், கிரடிட்கார்டு கம்பனிகள், பணம் முதலீடு செய்த நிறுவனங்கள்...இவற்றின் கணக்கு வழக்கை பார்த்து "என்ன வரவு, என்ன செலவு, டேலி ஆகுதா, எதாவது எதிர்பாராத செலவு நமகே தெரியாம கிரடிட்கார்டுல காட்டுதா?என்னெ பில் எப்ப டியூ? அதுக்கு கட்டவேண்டிய பணம் எங்கருந்து வரும்?" இப்படி பார்க்கணும்.
இதற்கு செலவு செய்யும் அரைமணிநேரம் நமக்கு பல ஆயிரம்/லட்சங்களை மிச்சபடுத்தும்.
பணம் எங்கே வருது, எப்படி போகுதுன்னு தெரியாம மட்டும் இருக்ககூடாது.
பலரும் மாதத்துக்கு ஒருமுறை கூட பார்ப்பது இல்லை.
இது கிரிக்கட்டில் ஸ்கோர் போர்டை பார்க்காமல் சேஸிங் செய்வது போல...
****************************************************************************************
 
 
 
ஆபத்து இருக்குமிடத்தில் தான் சந்தர்ப்பமும் இருக்கும்...
நண்பர் ஒருவர்...வெளிநாட்டு வேலைக்கு போக ஆசை. ஆனால் அமெரிக்கா, கனடா என நாம் வழக்கமாக போகும் ஊர்களுக்கு போட்டி அதிகம். ரொம்ப ஆலோசனை செய்து கடைசியில் "பாப்புவா நியு கினி" எனும் தீவை தேர்ந்தெடுத்தார்.
தீவு ஆஸ்திரேலியாவுக்கு அருகே உள்ளது. தலைநகர் போர்ட் மோரிஸ்பே. தலைநகரில் வன்முறையும், திருட்டும் மிக அதிகம். தெருக்களில் பாதுகாப்பாக நடக்க முடியாது.
இதன் காரணமாக அங்கே சம்பளம் கூடுதல், வேலைக்கு யாரும் போகமாட்டார்கள்.
ஆனால் இவர் வேலைக்கு போன நிறுவனம் கேட் உள்ள அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் பாதுகாப்பாக தொழிலாளர்களை தங்க வைத்து உள்ளது. தினமும் அங்கிருந்து ஆபிசுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்புடன் ஒரு பஸ் கிளம்பும். மாலையில் கொண்டுவந்து பத்திரமாக அபார்ட்மெண்டில் விட்டுவிடுவார்கள். ஷாப்பிங் டிரிப்புக்கு அதேபோல வாரா, வாரம் கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். அபார்ட்மெண்டில் ஜிம், சினிமா போட்டு காட்டுவது எல்லாம் உண்டு.
அந்த ஊரில் இப்படி இல்லாமல் சற்று ஒதுக்குபுறமான பகுதிகளில் தமிழர்கள் இருப்பதாக சொன்னார். அந்த ஊரின் மிகப்பெரிய பல்கலைகழகத்தில் பல தமிழர்கள் பணியாற்றுகிறார்களாம்.
சில ஆண்டுகள் வேலை செய்து அனுபவம், பணத்தை தேடிக்கொண்டு வேறு நாட்டுக்கு போயிவிடுவேன்..இண்டெர்நெட்டில் ஊரை பற்றி ரொம்ப மோசமாக எழுதியதால் யாரும் குடிவர தயங்குகிறார்கள். மோசமான ஊருதான். ஆனால் இருக்கும் பத்திரத்தில் இருந்துகொண்டால் நல்லா சம்பாதிக்கலாம் என்கிறார்.
உடனே அந்த நாட்டுக்கு கிளம்பிவிடவேண்டாம். அவுட் ஆஃப் தெ பாக்ஸ் திங்கிங் என்பதற்கு உதாரணமாக கூறினேன்.
விசா எளிதாக கொடுக்கும் நாடுகள், இந்தியர்கள் அதிகம் போகாத, ஆனால் பாதுகாப்பான நாடுகள் பல உள்ளன. உதாரணம் ருவாண்டா, பனமா, பிலிப்பைன்ஸ் என
ஸ்பானிய மொழியை எளிதில் கற்றுக்கொண்டால் பல தென்னமெரிக்க நாடுகளின் கதவுகள் திறக்கும்.
 
###########################################################################
2021 இன்னும் 2 மாதங்களில் பிறந்துவிடும்.
2021ல் பெரிய செலவுகளாக எதிர்பார்ப்பது
காருக்கு ஒரு ரிப்பேர்
வீட்டு ரிப்பேர் வேலை ஒன்று
எதிர்பாராத செலவு என தனியாக ஒரு தொகை
பிள்ளைகளின் கல்லூரி நிதியில் டிசம்பர் 31, 2021 அன்று இருக்கவேண்டிய தொகை
என ஒரு பட்ஜெட் போட்டு
அடுத்த 12 மாதங்களில் என்னென்ன கேஷ்ப்ளோ வரும் என கணக்கிட்டு, தேதிவாரியாக எக்ச்லில் 2021ம் ஆண்டின் பட்ஜெட்டை எழுதி, அதன் ஹைலைட்ஸை வீட்டு ப்ரிட்ஜில் ஒட்டி வைத்து இருக்கிறேன்
மாதா, மாதம் விவரங்கள் ப்ரிட்ஜில் உள்ளெ பேப்பரில் அப்டேட் செய்யபடும். வீட்டில் உள்ளவர்கள் மாதா, மாதம் அதை பார்த்து "கல்லூரி நிதியில் இவ்வளவு இருக்கணும், இவ்வளவுதான் இருக்கு" என்பது போல மோடிவேட் ஆக உதவும்.
மகிழ்ச்சியான விசயம்:
பற்றாகுறை இன்றி பட்ஜெட் பேலென்ஸ் ஆகிவிட்டது
சோகமான விசயம்:
சுற்றுலா, டிஸ்க்ரஷனரி செலவுகள் எதையும் பெருசா பட்ஜெட்டில் சேர்க்கலை.
ஆண்டு பட்ஜெட்
அரசுகளுக்கும், கம்பனிகளுக்கும் மட்டும் அவசியம் அல்ல, குடும்பங்களுக்கும், தனிநப்ர்களுக்கும் அவசியம்
 
 FB மினிமலிசம் பக்கத்தில்    எடுத்தவை
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு பதிவு... அபராஜிதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.