Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவேந்தலை பொது வெளியில் நடத்துவதற்கு இடமில்லை - இராணுவ தளபதி அறிவிப்பு .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவேந்தலை பொது வெளியில் நடத்துவதற்கு இடமில்லை - இராணுவ தளபதி அறிவிப்பு .!

Screenshot-2020-11-16-18-31-04-226-com-a

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொதுவெளியில் எவராவது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது.

எனவே, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அவ்வமைப்புக்குப் பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் - சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" - என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களை நினைவேந்தினால் தனிமைப்படுத்தல் சட்டம் பாயும் – இராணுவத் தளபதி எச்சரிக்கை

 
shavendra-silva.800-696x348.png
 36 Views

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது. அதை மீறி நடத்தினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு செயலணிக்கும் தலைவராக செயல்படும் அவர், நேற்றைய தினம் ஊடகங்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொது வெளியில் எவராவது செயல்பட்டால் அவர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூருவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவு கூருவது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது” என்றும் அவர் கூறினார்.

 

https://www.ilakku.org/மாவீரர்களை-நினைவேந்தினா/

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை நினைவுகூரும் அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது-பா. கஜதீபன்

 
1.gif
 33 Views

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தமக்காக தங்களை  அர்பணித்தவர்களை நினைவுகூரவும், ஆராதிக்கவும்  உரிமை இருக்கிறது. அதே போன்று மண்ணுக்காக உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும்  அடிப்படை உரிமை ஈழத்தமிழருக்கு உள்ளது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிக்கையில்,

“நினைவேந்தல்களை தடைசெய்யும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் உரிமை மீறல் செயற்பாடுகள் என  வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த அரசு  பக்கச் சார்பாக, இனரீதியான செயற்பாட்டை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

இந்த புதிய அரசு கட்டாயமாக எமக்கு தடைகளை விதிக்கும் என தெரிந்து தான் நாம் தற்போது அரசில் உள்ளவர்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என கடுமையாக வேலை செய்தோம். இதை மக்கள் சிலர் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.

உலகத்தில் எங்கும் நடைபெறாத விடயம் தமிழர் பகுதிகளில் தான் நடக்கிறது. எமக்கு எதிரான இந்த செயற்பாடுகள் தொடர அனுமதிக்கக் கூடாது

போராளிகளை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.  ஆனால் இங்கு உயிர்நீத்த மாவீரர்கள் இங்குள்ள பெற்றோரின் பிள்ளைகள் தான்; சகோதரர்கள் தான்; ஏதோ ஒருவகையில் அவர்கள் இங்குள்ளவர்களின் உறவுகள் தான்; உயிர்நீத்த உறவுகளை குடும்ப அங்கத்தவர்கள் நினைவு கூரவேண்டும்.

இம்முறை நினைவேந்தல்களை தடுப்பதற்கு புது விளக்கங்கள் கொடுக்கிறார்கள். தொற்று நோய் பரவும் காராணத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

இத் தொற்றுநோய் உலகம் முழுவதும் உள்ள நோய். அதை நாம் அலட்சியம் செய்ய முடியாது. அதற்கு ஏற்ற வகையில் சுகாதார நடைமுறைகளின் படி அனைவரும் மாவீரர் வாரத்தை அனுஸ்டிக்க வேண்டும்.

பழைய விடயம் மறப்பது நாகரீகமல்ல – நடந்து முடிந்த விடயங்களை நினைவு கூருவது என்பது நாம் எப்படியானவர்கள்; எமது பாரம்பரியம், எமது வரலாறு என்பன மறைக்கப்படமால் இருப்பதற்கு ஏற்ற விடயம். அதை மக்கள் உணர்ந்து, தொடர்சியாக இந்த நினைவேந்தல்களை எந்த தடை வந்தாலும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.

இந்த அரசு நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோருவதுடன், அதற்கான அழுத்தங்கள் கொடுப்போம். அனுமதியை பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம்” என்றார்.

 

https://www.ilakku.org/போராளிகளை-நினைவுகூரும்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.