Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2021 ஆம் நிதி ஆண்டிற்கான இலங்கையின் 75 ஆவது வரவு - செலவுத் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • 2021 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு - செலவு திட்டத்தை நிதியமைச்சரும் பிரதமருமாகிய  மஹிந்த ராஜபக் ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு  சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

 

  • பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள், உள்நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்ள முடியாது.

 

  • பூரண சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதற்கான கடப்பாடு குறித்து சகல தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார்.

 

  • 2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன்ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதாணங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்படவுள்ளது.

 

  • ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சிற்கு 15246 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வெகுசன ஊடக அமைச்சிற்கு 519 கோடியே 21 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா, அதனுடன் கூடிய தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 1575 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • நீதி அமைச்சிற்கு 1975 கோடியே 38 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சிற்கு 1038  கோடியே 89 இலட்சத்து 61ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • சுகாதார அமைச்சிற்கு 15947 கோடியே 59 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா, சுதேசவைத்திய, ஆயுர்வேத, மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சிற்கு 264 கோடியே 90 இலட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கு 1284 கோடியே 94 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா, பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சிற்கு 16 கோடியே 75 இலட்சம் ரூபா, போக்குவரத்து அமைச்சிற்கு 4140 கோடியே 90 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வலுசக்தி அமைச்சிற்கு 25 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் ரூபா, வர்த்தக அமைச்சிற்கு 562 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நெடுஞ்சாலைகள் அமைச்சிற்கு 33018 கோடியே 50 இலட்சத்து ஐயாயியம் ரூபாவும், மின்சக்தி அமைச்சிற்கு 31 கோடியே 29 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • காணி அமைச்சிற்கு 832  கோடியே 80 இலட்சம் ரூபா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு 172 கோடியே ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ரூபா, கல்வி அமைச்சிற்கு 12654 கோடி ரூபா, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு 3045 கோடியே மூன்று இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு 27172 கோடியே 30 இலட்சம் ரூபா,பெருந்தோட்ட அமைச்சிற்கு 128 கோடியே 98 இலட்சம் ரூபா, கடற்தொழில் அமைச்சிற்கு 458 கோடியே 41 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • சுற்றுலாத்துறை அமைச்சிற்கு 185 கோடியே 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, சுற்றாடல் அமைச்சிற்கு 199 கோடியே 71 இலட்சம் ரூபா,விளையாட்டுத்துறை அமைச்சிற்கு 1092 கோடியே 76 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சுருக்கம்

 

 

ராஜபக்ஷ அரசாங்கத்தின்  2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 12 ஆம் திகதி வியாழக்கிழமை  நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக் ஷவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதில் 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக 2 இலட்சத்து  54ஆயிரம் கோடியே 20 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எனவே 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக  200054கோடி  ரூபாய்கள்  ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரசு செலவு திட்டத்தில் மேலதிகமாக 67750 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/

 

2021 ஆம் நிதி ஆண்டிற்கான 75 ஆவது வரவு - செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு  சமர்பிப்பித்து உரையாற்றினார்.

 

பன்னாட்டு இராஜதந்திரிகள் மற்றும் நிதி அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனங்களுக்கு 2678 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தல் மற்றும் 2900 பில்லியன் ரூபா கடன் பெறல் ஆகிய இரு விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலம் சமர்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட செலவீனங்களுக்கான ஒதுக்கீடாக 1960 கோடியே 33 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சிற்கு 694 கோடியே 60 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பெளத்த சமய கலாசார அலுவல்கள் தொடர்பான அமைச்சிற்கு 360 கோடியே 60 இலட்சம் ரூபா, முஸ்லிம் சமய பண்பாடு அலுவல்கள் திணைக்களத்திற்கு 19 கோடியே 60 இலட்சம் ரூபா, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களத்திற்கு 27 கோடியே 90 இலட்சம் ரூபா, இந்து சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 31 கோடியே  80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் நிதி அமைச்சிற்கு 15760 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி மூலதன சந்தை, மற்றும் அரச தொழில் முயற்சிகள், மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சிற்கு 3299 கோடியே 31 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கீழ் இயங்கும் பாதுகாப்பு அமைச்சிற்கு 35515 கோடியே 92 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு 2520 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர், ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கத்தினது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைச் சட்டகத்திற்குள் 2021 – 2023 நடுத்தர கால பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை

ஒழிப்பினைத் துரிதப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தினை பலப்படுத்துகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையினை இந்த உயர் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்து 75 ஆவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபையில் முன்வைத்தார்.

நாளை 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 21 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு நடத்தப்படும். அதன்படி நாளை முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் முற்பகல் 9.30 மணி முதல் 5.30 மணிவரை நடத்தப்படும்.

இதன் பின்னர் வரவுசெலவுதிட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை நடத்தப்படும். டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

https://www.virakesari.lk/article/94590

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 75ஆவது வரவு செலவு திட்டத்தின் முக்கிய தகவல்கள்

 
1-108-696x392.jpg
 42 Views

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம், பிரதமரும், நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவினால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய  அம்சங்களாக, பெருந்தோட்டம், உள்நாட்டு பால் உற்பத்தி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, தொழில்நுட்பம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, மோட்டார் வாகனம், வங்கி மற்றும் நிதி நிறுவனம், மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு தடை என்பன  முக்கியமாக  கவனிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

1.பெருந்தோட்டம்

பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1000 ரூபாயாக வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

1000 ரூபாய் சம்பளத்தை வழங்க தவறும் நிறுவனங்களின் உடன்படிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக வரவு செலவுத்திட்ட உரையில் பிரதமர் கூறியிருந்தார்.

2.உள்நாட்டு பால் உற்பத்தி

இறக்குமதி செய்யப்படுகின்ற பால் மாவிற்கு பதிலாக உள்நாட்டு பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்திக்காக முதலீடு செய்யப்படும் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேலதிகமான தொகைக்காக நிவாரணம் வழங்கப்படும்.

3.சுகாதாரம்

சுகாதார துறைக்கு மேலதிகமாக 18,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

சத்து மாவான திரிபோஷ உற்பத்திக்காக 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

அத்துடன், கோவிட் தொற்றுக்கான புதிய காப்புறுதி திட்டமொன்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் ஆகியவற்றை மேலும் முன்னேற்றமடை செய்ய வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

4.தேசிய பாதுகாப்பு

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவும், இலங்கையில் கடல் வளங்களை பாதுகாப்பதற்காகவும் கடற்படையை வலுப்படுத்தும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ராணுவம் மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அபிவிருத்திக்காக 20,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்காக போலீஸ் துறையை அபிவிருத்தி செய்வதற்கும், போதைப்பொருள் கட்டுப்பாட்டிற்கும், குற்றச் செயல்களை தடுப்பதற்கான பயற்சிகளுக்காகவும் 2500 மில்லியன் ரூபாய் மேலதிகமாக முன்மொழியப்பட்டுள்ளது.

5.தொழில்நுட்பம்

தொழில்நுட்ப சேவையை மேம்படுத்துவதற்காக 8000 மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை ஸ்தாபிப்பதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கும் வழங்கும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

6.வெளிநாட்டு வேலை வாய்ப்பு

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிப்புரியும் பணியாளர்களுக்கான ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் அந்நிய செலவணியில், ஒவ்வொரு டொலருக்கும் தலா 2 ரூபாய் வீதம் வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

7.மோட்டார் வாகனம்

வாகனங்களை புதுப்பித்தல் மற்றும் உதிரிபாகங்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரித் தொகையை குறைப்பதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

8.விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள்

ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை, சர்வதேச வர்த்தக தொழில்பாட்டின் மத்திய நிலையமாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அபிவிருத்தி உபாய முறைகளையும், வழிமுறைகளையும் திட்டமிட வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்தார்.

9.வங்கி மற்றும் நிதி நிறுவனம்

வங்கிகளுக்கான சட்டத்தை மறுசீரமைப்பதற்கான யோசனை, வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளது.

வங்கி அல்லாத, நிதி நிறுவனங்களை கண்காணிப்பதற்கான புதிய சட்டத்தை வகுப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

  1. மஞ்சள், இஞ்சி இறக்குமதிக்கு தடை

மஞ்சள் மற்றும் இஞ்சி இறக்குமதிக்கு முழுமையாக தடை விதிக்கும் யோசனையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/இலங்கையின்-75ஆவது-வரவு-செல/

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிழம்பு said:
  • நீதி அமைச்சிற்கு 1975 கோடியே 38 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

 

நீதிபதிகளை வாங்குவதற்கு இந்தத் தொகை போதாது என்பதால் 10,000 கோடியே 38இலட்சத்து 77 ஆயிரம் ரூபா ஒதுக்குமாறு சிபார்சு செய்கிறேன். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவு - செலவுத்திட்டத்தில் பொய் கூறுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - எரான் விக்கிரமரத்ன

(நா.தனுஜா)

வரவு - செலவுத்திட்டத்தில் பொய்யான விடயங்களைக் கூறுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாமனைவரும் அறிந்திருக்கின்றோம். 

எனினும், அதனை மக்கள் தெரிந்துகொள்ளும்போது எமது நாடு மீண்டெழ முடியாத நிலையை அடைந்திருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/138858/Eran_Wickramaratne.jpg

 

அரசாங்கத்தின் இலக்குகள் சிறந்தவையாகவே இருக்கின்றன.

எனினும், அவற்றை செயற்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பொருத்தமான செயற்திட்டங்களும் அதற்காக நடைமுறையில் சாத்தியமான வகையில் நிதியைத் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகளும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக  பதவியேற்றுக்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அவர் மக்களுக்கு உரையாற்றியிருக்கின்றார். 

எனினும், அவரிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தை பிரதமர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

மக்களை முழுவதுமாக ஏமாற்றக்கூடியவாறான இவ்வாறானதொரு வீரகாவியத்தை நான் இதற்கு முன்னர் கேட்டதேயில்லை. 

பொய்யான விடயங்களைக் கூறுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாமனைவரும் அறிந்திருக்கின்றோம். 

எனினும், அதனை மக்கள் தெரிந்துகொள்ளும்போது எமது நாடு மீண்டெழ முடியாத நிலையை அடைந்திருக்கும்.

மேலும், சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அதன்மூலமான வருமானம் 631 பில்லியன் ரூபாவிலிருந்து 823 பில்லியன் ரூபாவாக உயர்வடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் மேலதிக வருமானம் பெறுமதிசேர் வரியின் ஊடாகவே பெறப்படுகின்றது. 

ஆனால், அது அரசாங்கத்தினால் 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறிருக்கையில், வரியின் ஊடாக மேற்கண்டவாறு வருமானம் அதிகரிப்பது எவ்வாறு சாத்தியம்? அதேபோன்று வழமையாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் உயர்வருமானம் பெறப்படும். 

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் கூறுவதைப்போன்று வருமானத்தைப் பெறுவது சாத்தியமில்லை.

அடுத்ததாக முழுநாட்டிற்கும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுக்கொடுக்கும் யோசனையின் கீழ், ஒட்டுமொத்த இலங்கையையும் உள்ளடக்கிய வகையில் 4G தொழில்நுட்பத்தை கட்டமைக்கப்போவதாக அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது. 

எனினும், அதற்காக 15 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனூடாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு சாத்தியம்? 

அதனைக்கொண்டு பாடசாலைக்கு கட்டடத்தொகுதியொன்றைக்கூட நிர்மாணிக்க முடியாது.

அரசாங்கத்தின் இலக்குகள் சிறந்தவையாகவே இருக்கின்றன. 

எனினும் அவற்றை செயற்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பொருத்தமான செயற்திட்டங்களும் அதற்காக நடைமுறையில் சாத்தியமான வகையில் நிதியைத் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகளும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இவ்வாறு நடைமுறையில் சாத்தியப்படாத யோசனைகளே வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

அதுமாத்திரமன்றி பொருளாதார ரீதியில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வேறுபல தரவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவே இருக்கின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/94677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.