Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரொரன்ரோ மாநகரை அதிர வைத்த தமிழர்களின் தமிழீழ முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரொரன்ரோ மாநகரை அதிர வைத்த தமிழர்களின் தமிழீழ முழக்கம்

இன்று மாலை 5 மணிக்கு தமிழர்களது தன்னாட்சி ரிமையை வலியுறுத்தி கனடா வாழ் ஈழத்தமிழர்களால் முன்னேடுக்கப்பட்ட "வெல்க தமிழ்" நிகழ்வில் பல்லாயிரக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சமூதாய ஆர்வலர்களும் சிறப்புரைகளை நடாத்தினர்.

ஐரோப்பாவில் நடைபெற்ற வெல்க தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற இந் நகிழ்வில் கனடாவின், ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், எதிர்க்கட்சி மற்றும் புதிய ஜனநாயக கட்சி என்பவற்றின் பிரமுகர்கள் சமூகமளித்தனர். இதை விட பாராளுமன்றத்திலிருந்தும் சிலர் சிறப்புரைகளை தொலைபேசி மூலம் வழங்கினர்.

சிறிலங்கா அரசின் இனவாதப் போக்குக்கு கடும் கண்டணங்களை தெரிவித்த கனேய தேசிய அரசியல் வாதிகள் இவற்றுக்கு கனேடிய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தன.

நிகழ்வின் இறுதியில், பேசிய பழமை வாதக்கட்சியைச் Nசுர்ந்த பிரமுகர் தமது அரசாங்கம் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்தார்.

வெள்ளமெனத்திரண்டிருந்த தமிழீழ தமிழர்கள், தமிழீPழத்தின் அதிபர் பிரபாகரன் என்றும், தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோசமெழுப்பினார்கள்.

முன்னதாக, கனேடிய தேசிய கீதத்துடனும், தமிழீழ கொடி வணக்கப்பாடலுடன் ஆரம்பமாகி, சிறப்புரைகள் நிகழ்வுகள், என தொடர்ந்தது. ஸ்காபுரோ டவுன் சென்ரருக்கு அருகில் உள்ள அல்பேட் கொம்பெல் சதுக்கத்தில் நடைபெற்றது. சதுக்கம் முழுவதும் நிரம்பிய மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

முன்னெப்போதும் இவ்வாறன கூட்டம் இவ்விடத்தில் ஒன்று கூடியது கிடையாது என்று கனேடிய பிரமுகர்களே தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்கள் வாழ வேண்டுமெனில் அவர்களுக்கு ஒரு நாடு தேவை. அந்த நாடு இன்று அங்கீகரிக்கப்படாமல் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்ற

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ரிவிஜ இணையத்தளத்தினூடாக இன்னிகழ்வை நேரடியாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://vannithendral.net/media/temp_1/

படங்களைப் பார்வையிட

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பில் சின்ன திருத்தம் தூயவன், மன்னிக்கவும்,

http://vannithendral.net/media/VELKATHAMIL/

எங்க ஆதிவாசிய காணேல்ல?

ஏன்கே;கிறனெண்டு ஆதிவாசிக்கு புரியும்தானே

மரக்கிளைகளுக்குள் புகுந்து படம் பிடிக்காத நிதர்சனுக்கு நன்றி :lol:

எங்க ஆதிவாசிய காணேல்ல?

ஏன்கே;கிறனெண்டு ஆதிவாசிக்கு புரியும்தானே

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

கனடியத் தமிழர்கள் மீண்டுமொருமுறை தமது ஒற்றுமையை நிரூபித்து விட்டார்கள்.

Edited by Valvai Mainthan

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு :lol:

அருமையான தகவல் படங்களை பார்க சந்தோசமாக இருகின்றது நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியக் கொடி 194 ஆவது கொடியாக ஐ.நா.வில் பட்டொளி வீசிப் பறக்கும்: தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர்

தமிழீழத் தேசியக் கொடி 194 ஆவது கொடியாக ஐ.நா.வில் பட்டொளி வீPசிப் பறக்கும் என்று கனடாவில் நடைபெற்ற "வெல்க தமிழ் -2007" பேரணியில் பங்கேற்றுப் பேசிய கனடிய தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் தெரிவித்தார்.

"வெல்க தமிழ் - 2007" நிகழ்வில் அவர் பேசியதாவது:

ஜெனீவாவில் இன்று (நேற்று திங்கட்கிழமை) காலை மிக எழுச்சியோடும் உணர்வோடும் நடந்த வெல்க தமிழ்ப் பேரணியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்தும் வானொலியில் நேரடி ஒலிபரப்பு மூலம் கேட்டும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள்.

ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். பிரான்ஸ், யேர்மனி, இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், கொலன்ட், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

டென்மார்க்கில் இருந்து தனி வானூர்தியில் வந்திறங்கினார்கள். அதனைப் பார்த்தபோது பாரதிதாசனின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்

வீரம் கொள் கூட்டம் அன்னார்

உள்ளத்தால் ஒருவரே மற்று

உடலினால் பலராய்க் காண்பார்

நீங்கள் எல்லோருமே தமிழ் உணர்வாளர்கள். தமிழ்ப் பற்றாளர்கள், நாட்டை நேசிப்பவர்கள், தமிழ் தேசியத்துக்கு அரணாக நிற்பவர்கள். தூணாக நின்று தோள் கொடுப்பவர்கள். பார்வையாளர்களாக இல்லாமல் பங்காளிகளாக இருப்பவர்கள். எனவே எமது போராட்டம் பற்றியும் அதனை வென்றெடுக்க வேண்டிய அவசிய அவசரம் பற்றியும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய தேவையில்லை.

நான் இங்கு வேலைப் பளு காரணமாகவும் வேறு தவிர்க்க முடியாத காரணமாகவும் வராதவர்களுக்கு உங்கள் மூலமாக சில செய்திகளைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

"வெல்க தமிழ்" ஆறு அம்ச கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்கு முன்வைத்துள்ளது. அது உங்களுக்கு தெரியும்.

- சிறிலங்கா ஆட்சியாளர்களால் அரங்கேற்றப்படும் தமிழின அழிப்பு நிறுத்தப் படவேண்டும்.

- போர் வெறிபிடித்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் போர்க் குற்றங்களுக்ளாக அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

- தமிழர் தாயகத்தில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்புப் படை வெளியேற வேண்டும்.

- தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடைவிதித்துள்ள நாடுகள் அந்தத் தடையை நீக்க வேண்டும்.

- அனைத்துலகம் நடைமுறைத் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும்.

கனடிய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளது.

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களுக்குள் பழமை வாதக் கட்சி அந்தத் தடையை அறிவித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் தடை செய்துவிட்டு 11 ஆம் நாள் அதனை அறிக்கையாக வெளியிட்டது. தடைக்கு அவர்கள் சொன்ன காரணம் மிகவும் வேடிக்கையானது.

கனடிய மக்களின் பாதுகாப்புக் கருதியே தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ததாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே சொன்னார். வெளியுறவு அமைச்சர் பீட்டர் மக்கே, பயங்கரவாதத்தில் இருந்து கனடியர்களைப் பாதுகாக்க இந்தத் தடை கொண்டுவரப்பட்டதாகச் சொன்னர்.

உண்மை என்னவென்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று யாரும் இந்த நாட்டில் இல்லை - அல்லது அவர்களது ஆதரவாளர்களாலோ எந்தக் கனடியரும் பாதிக்கப்படவில்லை.

இன்னொரு காரணத்தையும் சொன்னார். இந்தத் தடை பேச்சுவார்த்தை மூலம் சிறிலங்காவின் இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். மேலும் சிறிலங்கா அரசு பேச்சுவார்த்தைகளின் மூலம் அமைதி வழியில் இனச் சிக்கலுக்கு தீர்வுகாணப்படும் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையையும் வெளிவிட்டார்.

ஆனால் நடந்தது என்னவென்பது உங்களுக்குத் தெரியும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தையில் இருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொண்டது.

2002 ஆம் ஆண்டு எழுதப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு செல்லாக்காசாக்கி விட்டது. அத்தோடு இல்லாமல் மட்டுமல்ல இப்போது இனச்சிக்கலுக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காணப்படும் என சிறிலங்காவை ஆள்பவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அது நடைபெறவில்லை. கனடாவின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாக சிறிலங்காவின் ஆட்சித்தலைவர் இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வைக் கையாண்டு வருகிறார். தமிழ்மக்களை விடுதலைப் புலிகளின் பிடிக்குள் இருந்து விடுவிப்பதாகக் கூறிக்கொண்டு தமிழர் நிலப்பரப்பை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அனைத்துலகத்தின் கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். வட-கிழக்கை பிரித்துவிட்டார். இணைப்பாட்சியை தள்ளிவிட்டு ஒற்றையாட்சியின் கீழேதான் தீர்வு என்று சொல்லிவிட்டார்.

வெளிநாடுகளது நிதியுதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார் அவர்.

சிங்கள படைத்தளபதிகள், விடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து துரத்தி விட்டோம். அடுத்து வடக்கில் இருந்து துரத்திவிடப் போகிறோம் என்று நாளும் பொழுதும் சொல்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கனடிய அரசாங்கம் விதித்துள்ள தடை பொருள் அற்றதாகப் போய்விட்டது. எனவே கனடிய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

தடையை நீக்கினால் மட்டுமே கனடிய தமிழர்களது ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கும். நீக்கத் தவறினால் அடுத்த தேர்தலில் கனடிய தமிழர்களது வீடுகளைத் தட்டினால் நீங்கள் கதவுகளைத் திறக்கக் கூடாது. பழமைவாதக் கட்சி வேட்பாளராக தமிழர்கள் வாக்குக் கேட்டு வந்தாலும் நீங்கள் அவர்களுக்கு உங்கள் வாக்குகளைப் போடக் கூடாது.

நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள். இங்கு வாழும் ஏனைய இனத்தவருக்கு என்னென்ன உரிமை இருக்கிறதோ அத்தனை உரிமைகள் தமிழ்மக்களாகிய எங்களுக்கும் உண்டு.

நண்பர்களே நாங்கள் நீண்ட விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் எங்கள் மண்ணை வென்றெடுக்க வேண்டும். எங்களது மக்களை சிங்கள-பெளத்த வெறியர்களது கோரப்பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக சிலர் பிழையாக நினைக்கிறார்கள். நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்கள்தான் எங்களை ஆதரிக்கிறார்கள். தமிழீழத்தை மீட்டெடுக்கும் போர் எங்களுடைய போர். புலம்பெயர்ந்த தமிழர்களது போர். தமிழர்களுக்கு என ஒரு தனியரசு உருவாகும் போதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும். உலகத் தமிழர் நெஞ்சை நிமிர்த்தி வாழ முடியும்.

காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் சொன்னது போல எங்கள் மக்கள் அனுபவிக்கும் அவலங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அவர்கள் பட்ட துயரங்கள் போதும். தொடர்ந்து அவர்கள் அவலங்களையும் இழப்புக்களையும் சந்தித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் அமைதியான வாழ்க்கையை நடத்த வேண்டும். அவர்கள் தன்மானத்தோடும் பாதுகாப்போடும் நிம்மதியோடும் வாழ வேண்டும்.

தலைவன் பிரபாகரன் காலத்தில் தமிழீழ விடுதலையை நாம் வென்றெடுக்க வேண்டும். தமிழர்களது வரலாற்றில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு வீரனைப் பார்க்க முடியாது. விடுதலைக்கு நாம் கொடுக்க வேண்டி விலைக்கு மேலாகக் கொடுத்துவிட்டோம். விடுதலை வேள்வியில் இதுவரை 19,000க்கும் அதிகமான போராளிகளைக் களப்பலி கொடுத்துள்ளோம். 75,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

193 நாடுகளது கொடிகள் ஜக்கிய நாடுகள் மன்றத்தில் பறக்கின்றன. இந்த ஆண்டு முடியுமுன் தமிழீழத் தேசியக் கொடி ஐ.நா.வின் 194 ஆவது கொடியாகப் பட்டொளி வீசிப் பறக்கும். பறக்க வேண்டும்.

எனக்கு வயது போகவில்லை. ஆனால் காலம் போய்க்கொண்டிருக்கிறது. நான் கண்ணை மூடுமுன் சுதந்திர தமிழீழத்தைக் கண்ணாரக் கண்டு களிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு இப்போது உள்ள ஒரே ஆசை அது மட்டுந்தான்.

தமிழர்களது தாகம் தமிழீழத் தாயகம் என்பதை கூறிக்கொண்டு உங்களிடம் உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன் என்றார் அவர்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.