Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றில் தலைவர் பிரபாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து!

 

InShot_20201126_200347590-960x960.jpg?189db0&189db0

 

“எங்களுடைய இனத்துக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றில் இன்று(26) தெரிவித்தார்.

வரவு செலவுக் கூட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“மகாவலி அபிவிருத்தி நடவடிக்கைகள் இராணுவத்தினருக்கு ஒத்த மாதிரியே இருக்கின்றன. தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வவுனியா, முல்லைத்தீவில் 10 சிங்கள கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன. வனவளங்கள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன.

நாங்கள் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்லர். வடக்கு, கிழக்கில் எமது மக்கள் தனித்துவமாக வாழ வேண்டும் என்றே கூறுகிறோம். ஆனாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. 1970 இல் அமைக்கப்பட்ட மகாவலி அமைப்புக் கூட ஆயுதப் போராட்டத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்துதான் தலைவர் பிரபாகரன் மண்ணையும், இனத்தையும் பாதுகாக்க ஆயுதப் போராட்டத்தை தொடக்கியிருக்கலாம்.

தலைவர் இல்லாத இந்தக் காலப்பகுதியில் தான் நிலங்கள் பறிபோகின்றன. எங்களுடைய இனத்துக்காக போராடிய தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

 

https://newuthayan.com/இலங்கை-நாடாளுமன்றில்-தலை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றில் மாவீரர் நாள் உரை ஆற்றிய ஸ்ரீதரன்

 

ஐயா நீங்கள் அங்கு வாழ்த்து தெரிவித்ததில் பிரச்சினை இல்லை. வெளியிலும் ஒருதரம் வாழ்த்து தெரிவித்தால் நல்லது. மடடகளப்பில் வாழ்த்து தெரிவித்த தமிழ் இளைஞர்களை கைது செய்துள்ளதாக அறிய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோழையின் அரசில் இதொன்றும் புதிதல்லவே? அடக்குமுறையும், ஆக்கிரமிப்பும்  உக்கிரமடைய அதன் இறுக்கம் தாங்காமல் வெடிப்பு ஏற்படுவது இயற்கை. இதை எதிரி வலிந்து ஏற்படுத்துகிறான். நான் இதை உசுப்பேத்தவில்லை. ஆனால் அவரவர் தம்  உணர்வுகளை வெளிப்படுத்துவதை குறைகூறவும் இல்லை. அவர்கள் ஏற்படப்போகும் விளைவுகள் தெரிந்தே வேறு வழியில்லாமல் அரசு கொடுக்கும். நெருக்குதலினால் செய்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.